Thursday, September 10, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! இறுதிப் பகுதி

அலுவலகங்களில், பேருந்துகளில், பொது இடங்களில் நம்மை அறியாமலேயே நமது கால் மற்றொருவர் மீது பட்டுவிட்டாலோ அல்லது அவசரத்தில் ஒருவரை இடித்துவிட்டாலோ “சாரி சார்!” என நாமாகவே முன்வந்து நமது வருத்தத்தை மற்றவர்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாக தெரிவிக்கிறோம். தெரியாமல் நடந்துவிட்டால்கூட நம்முடைய செய்கை மற்றவரை பாதிக்கும் என்பதை உணர்ந்திருப்பதால்தான் நாம் வருத்தம் தெரிவிக்கிறோம். அவ்வாறு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் நமது மனம் குறுகுறுக்கிறது. இதுதான் ஒரு மனிதனின் இயல்பான மனநிலை.

ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக நடத்துவதில் ஆதிக்கச் சாதியினர் எவரும் தங்களது செயல் மற்றவரை பாதிக்கிறதே என்கிற எண்ணம் சிறிதுகூட இல்லாமல், ‘தான் செய்வது சரி!’ என்ற மனநிலையிலேயே செய்கின்றனர். ஆனால், அதே ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரவன் பொது இடத்தில் ஒருவரை தெரியாமல் இடித்துவிட்டால் வருத்தம் தெரிவிக்கின்றான். ஏன் இந்த முரண் நிலை? தனிப்பட்ட மனிதனாக இருக்கும் போது ஜனநாயகவாதியாகவும், சமூக வாழ்க்கை என வரும் போது அராஜகவாதியாகவும் அவன் ஏன் நடந்து கொள்கிறான்?

இந்து மத சமூக வாழ்க்கையே அடிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது என்பதால் ஒரு இந்துவாக வாழ்பவன் இந்து மத வழக்கப்படிதான் வாழ்வான். தனக்குக் கீழே உள்ள சாதிக்காரனை இழிவாகத்தான் நடத்துவான். அப்படி நடத்துவதுதான் இந்து தர்மம். அராஜகவாதியாகத்தான் வாழ வேண்டும் என ஒருவனை ஒரு மதம் வளர்க்கும் போது அவனிடம் ஜனநாயகத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்து தர்மத்திற்கு, அதாவது மனுதர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் குறைவு ஏற்படுகிறதோ, அதர்மத்தின் கை ஓங்குகிறதோ – இங்கே அதர்மம் என்பது மனுதர்மத்தை கேள்விக்குள்ளாகும் செயல்கள் - அப்பொழுதெல்லாம் இந்து தர்மத்தைக் காக்க கிருஷ்ணனே நேரில் தோன்றுவான் என்பதைத்தானே பகவத்கீதை சொல்கிறது (4:7). லேடியாக, மோடியாகக்கூட கிருஷ்ணன் அவதாரம் எடுப்பான் என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! கிருஷ்ணன் நேரில் தோன்றுவது மட்டுமல்ல ‘அதர்மவாதிகளை’ அரக்கர்கள் என முத்திரை குத்தி அழிக்கவும் செய்கிறான். இடதுசாரி சிந்தனையாளராகவும், பகுத்தறிவுவாதியாகவும் அறியப்பட்ட கன்னட அறிஞரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் எம்.எம்.கல்புர்கியின் படுகொலை கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் அவதாரம் எடுக்கிறான் என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

கிருஷ்ணன்கள் அவதாரம் எடுக்க எடுக்க, இந்து தர்மம் பாதுகாக்கப்பட்டுக் கொண்டே வரும். இந்து தர்மம் பாதுகாக்கப்படும் வரை தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்பவன் அராஜகவாதியாகத்தான் வாழ்வான். அராஜகவாதிகள் இருக்கும் வரை தீண்டாமையும் தொடரும்.

தென் அமெரிக்கா நாடான பொலிவியா, ஸ்பெயின் நாட்டின் காலனி நாடாக இருந்தபோது “அமெரிக்காவை கீழ்படுத்தும்” திட்டத்தின் கீழ் கத்தோலிக்க சர்ச்சுகளால் பொலிவிய நாட்டு பூர்வகுடி மக்கள் மீது கடந்த நூற்றாணடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், அநீதிகளுக்கும் அர்ஜென்டைனா நாட்டைச் சேர்ந்த தற்போதைய போப் பிரான்சிஸ் பொலிவிய நாட்டு மக்களிடம் மிகவும் கீழ்படிந்து பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். கடவுளின் பெயரால் அமெரிக்க மக்கள் மீது மிகக் கடுமையான குற்றங்களை கத்தோலிக்க சர்ச்சுகள் செய்துள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். (THE HINDU: 11.07.2015)

கடந்த நூற்றாண்டுகளில் நடந்த அநீதிகளுக்கு போப் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இந்த நூற்றாண்டிலும் இன்றளவும் இந்து மதத்தின் பெயரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதே! எந்த இந்து மதத் தலைவராவது தீண்டப்படாதவர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு மன்னிப்பு கோரியதுண்டா? குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவித்ததுண்டா?

அவர்கள் வருத்தம் தெரிவிக்கமாட்டார்கள். ஓநாய்களிடம் ஆடுகளுக்கு நீதி கிடைக்குமா என்ன?  

முற்றும்.

தொடர்புடைய பதிவுகள்:

*ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கான சட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

3 comments:

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  2. தங்களின் வருத்தம் நியாயமானதே.ஆனாலும் நம்பிக்கையுடன் இருங்கள்.விடிந்து கொண்டேயிருக்கின்றது.

    ReplyDelete