Monday, February 3, 2020

காந்தியும் பூணூலும்!

ஒருமுறை காந்தி கங்கையில் நீராடிவிட்டு வரும்பொழுது அவர் தலையில் உச்சிக்குடுமியும் உடம்பில் பூணூலும் இல்லாததைப் பார்த்து “இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ள நீங்கள் பூணூல் அணியாமலும் உச்சியில் குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் புறச் சின்னங்கள், ஒவ்வொரு இந்துவுக்கும் அவை இருந்தாக வேண்டும்” என்று ஒரு சன்னியாசி கேள்வி எழுப்புகிறார்.

முதல் மூன்று வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டியது அவசியம் என்று வற்புறுத்தும் இயக்கம் ஒன்று அப்பொழுதுதான் ஆரம்பமாகி இருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த பலர் பூணூல் போட்டுக் கொண்டனர்.
“சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக்கூடாது என்றால் மற்றவர் இனத்துக்கு மாத்திரம் அதை போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.”

“இந்து சமயத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு தாழ்வு என்ற பேதங்கள் எல்லாம் போய் அதில் இப்பொழுது மலிந்து கிடக்கும் பலவிதமான தீமைகளும் விஷயங்களும் நீங்கிய பிறகு இந்துக்களுக்கு அந்த உரிமை ஏற்பட முடியும். ஆகையால் பூணூல் போட்டுக் கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது.”

“அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன்படுத்தப்படுமாயின் அப்போது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும். இந்து சமயத்தை மேம்படுத்துவதற்கான சாதனமாகப் பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை.”

ஆம்! ஒருவன் பூணூல் அணிந்து கொள்வது, தான் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்பதற்கான அடையாளம்தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை ஒட்ட வைத்துக் கொள்வதும் இத்தகைய குணாம்சம் உடையதே! எனவே, பூணூல் அணிந்து கொள்வதும், பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக் கொள்வதும் வேறு வேறு அல்ல.

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை என்ற நூலிலிருந்து.

ஊரான்