முகநூல் தொடங்கும் போது, "ஊரான்" என்று மட்டும்தான் உள்ளீடு செய்தேன். ஆனால், "ஆதி" என்ற சொல்லை சேர்த்தபோதுதான் முகநூல் ஏற்றுக் கொண்டது. அதனால், நான் "ஊரான் ஆதி" ஆனேன்.
பொன்.சேகர்
Sekar P என்ற பெயரில் உள்ள முகநூல் கணக்கும் என்னுடையதுதான்.
"ஊரான்" மற்றும் "எதிர்த்து நில்" என இரு வலைப்பூக்களை (blog) நடத்தி வருகிறேன்.
ஊரான்
பள்ளிப்பருவ காலம்முதல் கடவுள் மறுப்பாளனாக, பகுத்தறிவாளனாக வளர்ந்த நான் பின்நாளில், மார்க்சிய-லெனினிய அரசியலால் ஈர்க்கப்பட்டு, 1980 களில் தொடங்கி இருபதாண்டு காலம் "மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்" தலைமைக் குழு உறுப்பினராகவும், இருபதாண்டு காலம் களப்போராளியாகவும் "தமிழ்மணி" என்ற பெயரில் பாடாற்றியுள்ளேன். தற்போது "மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின்" தலைமைக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன்.
ஒன்றிய அரசு நிறுவனமான "பாரத மிகுமின் நிறுவனத்தில்" (BHEL) பணியாற்றிய நான் எனது அரசியல் மற்றும் BHEL வாழ்க்கையில் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. இது குறித்து "இழிகுணம்" என்ற தலைப்பில், "எதிர்த்து நில்" வலைப்பூவில் விரிவான தொடர் ஒன்றை எழுதியுள்ளேன். அதன் தொகுப்பு "இழிகுணம்" என்ற தலைப்பில் அமேசானில் மென்நூலாகவும் கிடைக்கும்.
15 ஆண்டுகளாக நான் வைத்திருந்த "ஊரான் ஆதி" profile புகைப்படத்தையும், தேவை கருதி தற்போதைக்கு மாற்றி அமைத்துள்ளேன்.
தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!
ஊரான்
No comments:
Post a Comment