Wednesday, October 9, 2024

சாம்சங் உணர்த்தும் பாடம்!

அரசாங்கமே தொழில்களை எடுத்து நடத்த வேண்டும். அதற்கான ஆற்றல் இங்கு இல்லையா என்ன? அயலானை, தனியாரை அழைப்பானேன்? அவனுக்குச் சலுகை தருவானேன்?  அல்லல் படுவானேன்?

கையாலாகாதவர்களே அந்நியனிடமும் தனியாரிடமும் கையேந்துவார்கள்.

தனியாருக்கு வங்கிப் பணத்தை 
வாரிக் கொடுத்து, பின்நாளில் அவன் செலுத்தாமல் கடனைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக அரசே அந்த நிதியை முதலீடாகக் கொண்டு தொழில் தொடங்கினால் மட்டுமே நாடு முன்னேறும்! தொழிலாளர்களின் வாழ்வும் வளம் பெறும்.


அப்படிப்பட்ட ஒரு அரசே மக்களுக்கான அரசு. மற்றதெல்லாம்
கார்பரேட்
கம்பெனிகளின் காப்பந்து அரசு!  டா(தா)டி மாடலும், திராவிட மாடலும் இதற்கு விதிவிலக்கல்ல.

BHEL , SAIL, HAL, ISRO என எண்ணற்ற பண்முகத் தன்மை கொண்டத் தொழில்களை 
திறம்பட நடத்தத் தெரிந்த நமக்கு, வாஷிங் மெஷினையும் வாகனங்களையும் தயாரிக்க முடியாதா?

தொழிற்சாலைகளை அரசே தொடங்க வேண்டி போராட வேண்டிய காலம் இது.

ஊரான்

No comments:

Post a Comment