Friday, March 7, 2025

பன்னாட்டு மகளிர் நாள் உறுதிமொழி!

ஒரு பக்கம் பெண்கள் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முன்னேறி உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும், அவர்கள் வெறும் போகப் பொருளாக சித்தரிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் விளைவு ஆண்கள் மத்தியில் வக்கிர எண்ணங்கள் விதைக்கப்பட்டு அன்றாடம் பாலியல் வனப்புணர்வுகள் அரங்கேறி வருகின்றன.

"இதெல்லாம் சாதாரணமப்பா" என்கிற மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சீமான் மீதான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் சிலரின் பார்வை இதை உறுதி செய்வதாகவே உள்ளது. ஏன் நீதிமன்றத்தின் பார்வையும் அப்படித்தான் உள்ளது. 

இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. பாலியல் வன்கொடுமை தாக்குதலில் இருந்து பெண்களை பாதுகாப்பதே இன்றைய உடனடிக் கடமையாக இருக்கிறது. 

எனவே, பாலியல் தூண்டலுக்கு வழிவகுக்கும் சிற்பம், ஓவியம், கதை, கவிதை, திரைப்படம், பாடல், ஆடல், குத்தாட்டம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இணையம் உள்ளிட்ட அனைத்து விதமான  வெளிப்பாடுகளையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்.

பாலியல் தூண்டலுக்கு வழிகோலுபவர்களையும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களையும்  மிகக் கடுமையாக மக்களே நேரடியாக தண்டிக்க வேண்டும்.

அதற்கு வெளியில் இருந்து கொட்டப்படும் பாலியல் தூண்டல் நிகழ்ச்சிகளும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆண்களின் உறுப்புகளும் வெட்டப்பட வேண்டும்.

இதில் பெண்களைவிட நற்சமுகம் அமைய வேண்டும் என்று விரும்புகிற ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். இன்றைய சூழலில் இதுவே பன்னாட்டு மகளிர் நாள் உறுதிமொழியாக இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

ஊரான்

No comments:

Post a Comment