பொய்த்துப் போன 'பொற்கால' பிம்பங்கள்
ஊழல்: அது சொத்துடைமை சமூகக் கட்டமைப்பின் நோய்
இன்றைய முதலாளித்துவக் கட்டமைப்பில், ஊழல் இல்லாமல் எந்த ஆட்சியும் நடைபெறுவதில்லை என்பது கசப்பான உண்மை. ஊழலில் கூடுதல், குறைவு வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் "ஊழலற்ற ஆட்சி" என்று இந்தியாவில் இதுவரை யாரும் வழங்கவில்லை. திமுகவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், மற்ற கட்சிகள் புனிதமானவை என்றும், திமுக மட்டும் ஊழலின் ஊற்றுக் கண் என்றும் கட்டமைக்கப்படும் பிம்பம், வெறும் அரசியல் தந்திரமே தவிர, எதார்த்தமல்ல.
வெறுப்பின் அடிப்படை: சனாதன எதிர்ப்பு
திமுக மீது ஏன் இவ்வளவு வெறுப்பு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது? மற்றவர்களை விட ஏன் இவர்களை மட்டும் தீவிரமாக எதிர்க்கிறார்கள்? இதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான்: சனாதன எதிர்ப்பு. திமுக சனாதனக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பதும், சமூக நீதியை முன்வைத்துச் செயல்படுவதும்தான் இந்த வெறுப்பு அரசியலின் உண்மையான ஊற்றுக்கண்.
இந்த வெறுப்பு அரசியலை முறியடிப்பதில் திமுக போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதுதான் ஒரு நடுநிலையான பார்வையாளரின் குற்றச்சாட்டு. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த வேகத்தை விட, ஆளுங்கட்சியாக இருக்கும்போது தங்களுக்கு எதிரான திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரத்தை முறியடிக்கத் தேவையான அறிவுப்பூர்வமான மற்றும் ஜனநாயக ரீதியான பிரச்சாரங்களை அவர்கள் முன்னெடுக்கவில்லை.
மாவட்ட அளவிலான பிழைப்புவாதிகள்: திமுக தலைமையே இத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுக்க விரும்பினாலும், மாவட்ட அளவில் கட்சியில் செல்வாக்கு செலுத்தும் பிழைப்புவாதிகள் இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை.
அவலங்கள்: சனாதன எதிர்ப்பு எனும் கொள்கையின் அரிச்சுவடிகூட தெரியாதவர்கள் திமுகவில் அமைச்சர்களாக இருப்பது மற்றுமொரு அவலம்.
முடிவாக...
தர்க்கமற்ற வெறுப்பைத் தூண்டும் அரசியலை விட, மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள், சமூக நீதி, மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அரசியலை அணுகுவதே ஆரோக்கியமான சனநாயகம்.
ஊரான்
.jpeg)
