Monday, 22 July 2024
தாமரையைக் களவாடிய தாமரை!
Sunday, 21 July 2024
கருப்பு ராமனும் தீண்டாமையும்!
“ராமன் எத்தனை ராமனடி!” என்ற பெயரில் தமிழ்நாட்டுக்காரன் படமே எடுத்திருக்கிறான்.
Saturday, 20 July 2024
நாளேடுகளில் நாட்டு நடப்பு!
*****
"இட ஒதுக்கீடு பிரச்சனை. வங்கதேசத்தில் கலவரம்! கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி. பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வரும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களில் சுமார் 1000 மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்".
வடஇந்தியாவின்
கல்வித் தரத்தைவிட வங்கதேசக் கல்வித்தரம் உயர்ந்தது என்பதனால்தானே வங்கதேசத்திற்குப்
படிக்கச் செல்கிறார்கள்.
வடக்கு இன்னும்
வளரவில்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?
*****
"கள்ளச்சாரய விற்பனையைத் தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டி ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளில் அதிமுக-வினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்".
ஆட்சிகள் மாறும்போது கள்ளச்சாராய வியாபாரமும் கைமாறும் என்பதுதானே இங்கு எழுதப்படாத சட்டம்?
கள்ளச்சாராயத் தொழில் தங்களிடமிருந்து கைமீறிப் போனதால் வந்த கோபமோ இது என்றுதானே மக்கள் கேட்கிறார்கள்.
*****
"திருவண்ணாமலையில்
பல லட்சம் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம்! மூன்று மணி
நேரம் காத்திருந்து தரிசனம்!"
கோவில்களில்
கூட்டம் கூடுவது மக்களின் ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடு. தங்களுடைய குறைகள்
நீங்கத்தானே கோவில்களை நாடி ஓடுகிறார்கள். கோவில்கள்
என்றைக்கு ஈ ஓட்டுகிறதோ அன்றுதான் நாட்டு மக்களின் நனவுகளும் கனவுகளும் நிறைவேறி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று பொருள். அப்பொழுது மக்கள்
கோவில்களை நாடி ஓட மாட்டார்கள். சுற்றுலாத் தளங்களில் முட்டி மோதுவார்கள்.
வெறும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரங்களால் மட்டுமே கோவில்களில் கூடும் கூட்டத்தை குறைத்துவிட முடியாது. மாறாக மக்களின் வாழ்க்கையின் ஏக்கப் பெருமூச்சுகளை நீக்கவல்ல ஒரு அரசு அமைந்தால் மட்டுமே இதிலிருந்து மக்களை மீட்க முடியும்.
*****
"வேதாரண்யம் அருகே
கஞ்சா கடத்திய வழக்கில் அதிமுக-வைச் சேர்ந்த
வேதாரண்யம் ஒன்றியக் குழுத் தலைவர் அறிவழகனுக்குத் தொடர்பு!"
இதற்குத்தானே
உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் கடும் போட்டி நிலவுகிறதோ? இதில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று
கண்ணமங்கலத்தில் அதிமுக-வினர் பிரசுர விநியோகம் எனும் கேலிக்கூத்து!
ஊரான்
செய்தி ஆதாரம்: இந்து தமிழ் திசை நாளேடு. 21.07.2024
Thursday, 11 July 2024
தலித்துகளுக்குள் ஆணவப் படுகொலை எனும் அவலம்!
Friday, 5 July 2024
ஆம்ஸ்ட்ராங் படுகொலை உணர்த்தும் பாடம் என்ன?
(இந்து தமிழ் திசை 06.06.2024)
“வழிப்பறி, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய வேலூரைச் சேர்ந்த ரவுடி ராஜா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். நான்கு பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்”.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)