Monday, 23 June 2025

எடப்பாடியின் செவுளில் அறைந்த 'முருகனுக்கு அரோகரா'!

மதுரை முருக பக்த மாநாட்டில் அண்ணாவை இழிவுபடுத்தியக் காணொளி; மேடையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்த அதிமுக தலைவர்கள். அண்ணாவை மட்டுமல்ல  திராவிடத்தையும் சேர்த்தே சங்கிகள் இழிவுபடுத்துவது ஒன்றும் அதிசயமல்ல.



அண்ணா பெயரிலும், திராவிடம் பெயரிலும் கட்சி நடத்தும் அதிமுக-காரனுக்கு இதெல்லாம் உரைக்கவில்லையா என திமுக, கம்யூனிஸ்ட், சிறுத்தைகள் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்புகின்றனர். 

திமுக-விலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி கண்டதே சங்கிகளின், அதாவது பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில்தான் என்பதை மறந்துவிட்டு, ஏதோ, அண்ணாவையும் திராவிடத்தையும் தாங்கிப் பிடிப்பதற்காகவே அதிமுக இருப்பதாக எண்ணுவோர்களுக்குத்தான்  மேற்கண்டவாறு கேள்விகள் எழும்.

பொதுவாக ஒரு கட்சியிலிருந்து  ஒரு பிரிவினர் வெளியேறும் போது புதிதாக ஒரு பெயரில் செயல்படுவதைவிட, ஏற்கனவே பிரபலமாக உள்ள, தான் செயல்பட்டக் கட்சிப் பெயரோடு ஒரு முன்னொட்டையோ அல்லது பின்னொட்டையோ சேர்த்துக்கொண்டு செயல்படுவதன் மூலம் மக்களிடம் சுலபமாக பரிச்சயமாக முடியும் என்பதற்காகத்தான் 'அண்ணா' என்ற முன்னொட்டைக் கொண்டு அதிமுக என்று தனது கட்சிக்கு நாமகரணம் சுட்டிக் கொண்டார் எம்.ஜி.ஆர்.  மற்றபடி எம்.ஜி.ஆர் தொடங்கியக் கட்சிக்கு
கொள்கை அடிப்படையில் அண்ணாவுக்கும் திராவிடத்திற்கும்  எந்தப் பிணைப்பும் கிடையாது.

எம்.ஜி.ஆருக்கோ அதன் பிறகான ஜெயலலிதாவுக்கோ திராவிடக் கருத்தியலில் எள்ளளவும் உடன்பாடில்லை என்றாலும், உடன்பாடு இருப்பது போலக் காட்டிக் கொண்டால்தான் அரசியல் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அண்ணாவின் வாரிசுகள் போல நாடகமாடிய ஒரு நாடகக் கம்பெனிதான் அதிமுக. 

ஆனால், இவை எல்லாம் தெரிந்தும், தங்களின் சுய நலனுக்காக 'சமூகநீதி காத்த வீராங்கணை' என ஜெயலலிதாவுக்கு 'ஆசிரியரே' அரிதாரம் பூசியதால் அம்மையாரும், 'அண்ணா நாமம் வாழ்க' என வசனம் பேசி 'அம்மா'வாய் அவதாரம் எடுக்க முடிந்தது. 

தாங்கள் சொல்வதை மட்டும் கேட்டு பிழைப்புக்காக மண்டியிடும் எடுபிடிகளை இருவரும் திட்டமிட்டே வளர்த்தனர். அத்தகைய எடுபிடிகளின் எச்சங்கள்தான் இன்று அதிமுக-வில் எஞ்சி இருப்பவர்கள். அதன் உச்சபச்சம்தான் 'திராவிடம் என்றால் அது புராணம் படித்தவர்களுக்குத்தான் தெரியும்' என்கிற எடப்பாடியின் உளறல். அவர்களிடம் போய் அண்ணாவையும் திராவிடத்தையும் எதிர்பார்ப்பது நரகலில் நல்லரிசி தேடுவதாகும்.

அன்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டார்கள் என்றால், இன்று  சங்கிகளின் கட்டளைகளுக்கு அதிமுக எடுபிடிகள் அடிபணிகிறார்கள்.

எந்தக் கொள்கைப் பின்னணியும் இல்லாத, பிழைப்புவாத அதிமுக என்கிற பார்ப்பன அடிமைக் கூட்டம் முற்றிலுமாக அழிவதே இன்றைய உடனடி தேவை. முருக பக்த மாநாடு இதற்கு வித்திட்டது என்ற மகிழ்ச்சி அடைவோம்.  துரோகிகளைவிட எதிரிகளை எதிர்கொள்வது எளிதுதானே?

ஊரான்

Thursday, 19 June 2025

சாகட்டும்! அந்த ஒரு சிலரோடு முடியட்டும் சாராய சாக்காடு!

கள் இறக்குவதன் மூலமாகத்தான் பனை தொழில் பாதுகாக்கப்படுமா? கள் இறக்கினால் தமிழ்நாடு ஓஹோவென்று உயர்ந்து விடுமா? பனையில் இருந்து வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் சாத்தியமில்லையா? 

பனை வெல்லம், கருப்பட்டி, இதைத்தாண்டி வேறு என்ன வேண்டும்? நொங்கு, பனங்கிழங்குகூட காசுதானே? சும்மாவா கிடைக்கிறது? பனம்பழம் அதன் கூழை ஏன் 'மார்க்கெட்டிங்' செய்யக்கூடாது? 

தென்னை, பயன்பாடு சொல்ல வேண்டியதில்லை. அது தரும் எல்லாமே பயன்தான். பிறகெதற்கு கள்?

கள்ளுண்ட கோமாளி

கள் வேண்டும் என்றால் ஈச்சமரம்கூட வளர்க்கலாமே?  மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பதே இன்றைய தேவை.

கள்ளை எல்லோரும் குடிப்பதில்லை. குடிகாரர்கள் மட்டுமே பனை-தென்னை மரத்தடிகளில் தவம் கிடப்பார்கள். 
கள் ஒரு உணவு என்று பேசுபவன் மகா மடையன். கள் தேவை என்று கோருவது குடிகாரர்களின் கோரிக்கை.

எந்த ஒரு தொழிலிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள் உடல் நலனுக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. 

கள்ளில் ஆல்கஹால் அளவு குறைவு என்று பேசுபவர்களே? டாஸ்மாக் சரக்கில் ஆல்கஹாலின் அளவைக் குறைத்து விட்டால் அது போதைப்பொருள்  இல்லை என்று ஆகிவிடுமா? ஆல்கஹால் அது எந்த அளவில் இருந்தாலும் அதனால் போதை ஏறுகிறது என்றால் அதை ஆதரிப்பது மக்களுக்கு எதிரானதே!  மக்களுக்கு எதிரானதை ஆதரிப்பவர்கள் மக்கள் விரோதிகளே!

கள் இறக்கினால் ஒருசிலருக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கலாம்.
காசு பணம் கிடைக்கும் என்பதற்காகக் காமக்கிழத்தியாய் ஆக முடியுமா? 

ஒரு சிலருக்காக பலர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? பலருக்காக சிலர் விட்டுக் கொடுப்பதுதானே உலக நியதி!

சாராயம், கள்ளு, போதைப் பொருள்களை ஒட்டுமொத்தமாக, உடனடியாக ஒழிக்க முடியாது என்று சொல்வது கோழைத்தனத்தின் அல்லது இயலாமையின் அல்லது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு. 

சாராயத்த உடனடியாக நிறுத்திவிட்டால் அதிலிருந்து மீள முடியாமல் ஒரு சிலர் மாண்டு போகலாம் என்று உரைப்போரும் உண்டு. சாகட்டும்! அந்த ஒரு சிலரோடு முடியட்டும் சாராய சாக்காடு!

ஊரான்

Sunday, 1 June 2025

தலைவனுக்காகக் காத்துக் கிடக்கும் தமிழ்நாடு!

“இராணிப்பேட்டை, பெல் வளாகத்தில் நான் வசித்தபோது பொன்னை ஆற்றில் (நீவாநதி) கால் நனைத்திருக்கிறேன், ஆனால் நீந்தியதில்லை. பெருவெள்ளமாய் பீறிட்டுப் பாயும் கவிப்பித்தனின் 'நீவாநதியில்' நீந்துவதற்காகக் காத்திருக்கிறேன்”

என, கவிப்பித்தனின் “பிணங்களின் கதை” சிறுகதைத் தொகுப்பைப் வாசித்த பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் அவரின் “நீவாநதி” நாவலை வாசிக்க வேண்டும் என்கிற எனது அவாவை வெளிப்படுத்தி இருந்தேன்.


இந்த மாதத் தொடக்கத்தில், இரா.சுப்பிரமணி அவர்களின் “பெரியாரின் போர்க்களங்களைச்” சுற்றி வந்தபோது, இடையில்   ‘நீவாநதி’யில் இறங்கி நீந்தத் தொடங்கி, அது ஓடிய திசை எங்கும் நானும் ஓடி, நிரம்பி வழிந்த ஏரிகளில் முங்கி எழுந்து, சலசலக்கும் நெல் மணிகளை உரசிக் கொண்டு, பசுமை படர்ந்த வயல் வரப்புகளை விட்டேகி, கொல்லை மேடுகளின் கடலைச் செடிகளின் ஊடே மொச்சை வாசத்தில் மிதந்தவாறு, காடுகளில் ஆடுகளுடன் ஆட்டம் போட்டு, மாலையில் சுண்டி இழுத்தக் கருவாட்டுக் குழம்பில் களி உருண்டைகள் வயிற்றை நிரப்ப, அயர்ந்து உறங்கி காலைக் கடனைக் கழித்து, கால் கழுவ ஆற்றில் கைநீட்டிய போது, கானல் நீரில் விரல்கள் தணக்க, நெஞ்சு கனத்து, மீண்டும் “பெரியாரின் போர்க்களங்களில்” நுழையலானேன்.

பெரியாரின் போர்க்களங்கள் 

ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், சேரன்மாதேவி குருகுலத்தில் பாகுபாடு,  வைக்கம் போராட்டம்,  இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீட்டுக்கான வகுப்புரிமைப் போராட்டம், வடவர் சுரண்டல், இந்தித் திணிப்பு, பிள்ளையார் பொம்மை உடைப்பு,  தேசியக்கொடி எரிப்பு, இராமன் உருவ எரிப்பு, பிராமணாள் பெயர் அழிப்பு,  காந்திப்பட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு, இந்திய தேசப்பட எரிப்பு,  எருமைக்கிடா வெட்டுத் தடுப்பு,  கம்பராமாயணம் நூல் எரிப்பு, கோவில் கர்ப்பக்கிரக நுழைவு என எண்ணற்றப்  போர்க்களங்களின் ஊடே பயணித்து வெளியே வந்த பிறகு, நான் பார்த்ததை, உணர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
***
இது ஒரு இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய-திராவிட நெடும் போர். 1920-களில் 'அந்நிய வெள்ளையர்களுக்கு' எதிரான ஒத்துழையாமை இயக்கம் எனும் போர்க்களத்தில் நுழைந்த பெரியார், 1970-களில் 'இந்திய வெள்ளையர்களுக்கு' எதிரான கர்ப்பக்கிரக நுழைவு எனும் போர்க்களம் வரை எதிரிகளைக் கதறக் கதறத் துரத்தி இருக்கிறார். 

போர்க்களம் புகுமுன், போரின்  அவசியம் குறித்து ‘குடியரசு’விலும் ‘விடுதலை’யிலும் முன்கூட்டியே அறிவிப்பு செய்து, துண்டறிக்கைகள் மூலம்  போராட்டத்தின் நோக்கத்தை உணர்த்தி, ஊர்ஊராய் கூட்டம் போட்டு அறைகூவல் விடுத்து, போராளிகளின் பட்டியலை முன்கூட்டியே உறுதி செய்து, வழக்காட வழக்கறிஞர்களையும் ஏற்பாடு செய்து, பொது மக்களுக்கோ பொது அமைதிக்கோ இடையூறு நேராமல்,
நூற்றுக் கணக்கில் பல்லாயிரக்கணக்கில் போராளிகளைக் களம் இறக்கி, போர்க்களத்தில் முன்வரிசையில் தானே முன்நின்று, தான் மட்டுமன்றி தனது சகோதரி மற்றும் இணையரையும் இணைத்துக் கொண்டு, தடையை மீறி கைதானால் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் போர் நியாயமானது என நெஞ்சு நிமிர்த்தி, அபராதம் விதித்தாலும் அதைக் கட்ட‌மறுத்து சிறை புகுந்து, கல் உடைத்து, எண்ணற்றோர் உயிர் பலியானபோதும் துவளாமல், தள்ளாத வயதிலும் உடல் உபாதைகளை ஒரு பொருட்டாகக் கருதி ஓய்வெடுக்காமல்,  அடுத்தடுத்து களம் கண்டு எதிரிகளை நிலைகுலைய வைத்தச் சுவடுகளே போர்க்களங்கள் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. 

மக்களிடையே நிலவும் மதம் சார்ந்த பழக்கவழக்கங்களும் அவற்றைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளும், நம்மை அடக்கி ஆள்வதற்கு அரசியல் அதிகாரமும்  எதிரிகளிடம் ஏவுகணைகளாகவும், கேடயங்களாகவும் இருக்கும்வரை, எதிரிகளை முற்றிலுமாக வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, ஒன்றியத்தில் இருந்து வெளியேறி நமக்கானதொரு தனி சட்டத்தை உருவாக்கிக் கொண்டு, நம்மை நாமே ஆளுகின்ற அதிகாரம் கொண்ட தன்னாட்சிதான் தீர்வு என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கியதை உணர முடிகிறது.

இந்தித் திணிப்பு, குலக்கல்விக்கான புதிய கல்விக் கொள்கை, நீட் போர்வையில் உயர்கல்வி மறுப்பு, மும்மொழிக் கொள்கை திணிப்பு-ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுப்பு,  ஆளுநர் மூலம் அதிகார முடக்கம் என எதிரிகளின் எண்ணற்ற ஏவுகணைகள் நம் மீது தொடர்ந்து ஏவப்படும் இன்றைய போர்க்களச் சூழலில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே இன்றைய கேள்வியாக எஞ்சி நிற்கிறது. 

வெறும் அறிக்கைகள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் எனும் அடையாளப் போராட்டங்களால் எதிரிகள்  அஞ்சுவதில்லை. இதன் விளைவு, ஆளுநர் என்ற பெயரில் ஒருவன் நம் மண்ணிலேயே நங்கூரமிட்டுக்கொண்டு, அய்யன் வள்ளுவனுக்கு காவிச் சாயம் பூசியதோடு, அய்யனை சனாதனக் காவலனாக்கி நம்மைப் பார்த்து கெக்களித்துக் கொண்டு திரிகிறான். 

இதுவே, பெரியாரின் காலம் என்றால் இந்த ஆட்டுத்தாடி தனது மாளிகையை விட்டு  ஓட்டம் பிடிக்கும் வரை ஆளுநர் மாளிகை அல்லவோ அன்றாடம் முற்றுகையிடப்பட்டிருக்கும்? 

செய்தித் தொடர்பு, தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதி, பொருளாதார வசதி இல்லாத ஒரு காலத்தில், கல்வி அறிவு குன்றிய மக்களை இறுதி இலக்கு எட்டும்வரை பல்லாயிரக் கணக்கில் பெரியாரால் திரட்டிப் போராட முடிந்தது. கட்சி மாச்சரிங்களைக் கடந்து பெரியாரின் பின்னால் பலரும் அணிதிரளக் காரணம் அவர் மக்களுக்கான தலைவராய் உண்மையாய் உழைத்தார்; வாழ்ந்தார். இன்றும் வாழ்கிறார்.

ஆனால், இன்று எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும், பத்து பேரைத் திரட்டுவதற்கே திண்டாடுகின்றன இயக்கங்கள். காரணம், பெரியாரைப் போன்று நம்பிக்கையான தலைவன் ஒருவனும் எந்த ஒரு கட்சியிலும், எந்த ஒரு இயக்கத்திலும் உருவாகவில்லை என்பதைத்தான் பெரியாரின் போர்க்களங்கள் புரிய வைக்கிறது.

பெரியாரைப் போன்று ஒரு மக்கள் தலைவன் உருவாகாதவரை எதிரிகளை ஒருபோதும் வீழ்த்த முடியாது. தலைவனுக்காக தமிழ்நாடு காத்துக் கிடக்கிறது!

ஊரான்

பெரியாரின் போர்க்களங்கள்
ஆசிரியர்: இரா.சுப்பிரமணி வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம்
விலை ரூ.500/-
தொடர்புக்கு: 044-24726408, 81229 46408.
web: www.karunchattaibooks.com

Saturday, 31 May 2025

இணை ஏற்பு: நாற்பதாம் ஆண்டு!

மே மாதம் 27 அன்று அகவை 67 முடிந்து 68 இல் அடி எடுத்து வைத்து, நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்த போது, ஜூன் 1 (1986) எனது இல்வாழ்க்கை இணை ஏற்பு நாள் என்பதை நான்கு நாட்களுக்கு முன்பே, கல்லூரியில் எனது வலக்கரமாய் விளங்கிய இனிய நண்பன் ராஜன் சேக்ரி நினைவுபடுத்தினான். 

எமது இணை ஏற்பு விழா குறித்து "இராகு காலத்தில் இணை ஏற்பு!" என்ற தலைப்பில் ஏற்கனவே எதிர்த்து நில் வலைப்பூவில் எழுதிய பதிவு ஒன்றை கல்லூரிக் கால நண்பர்கள் குழுவில் பகிர்ந்திருந்தேன். 


"ஜுன் முதல் நாள்தான் என் பிறந்தநாள் மச்சி..
திருமணத்திற்கு நானும் வந்திருந்தேன்.. பசுமையான நினைவுகளாக இன்றும் உளப்பதிவில் உள்ளது"

என்று நினைவு கூர்ந்ததோடு,

"இராகு காலத்தில் என்பதை விட இரகு (பிறந்த) காலம் அன்று திருமணம் நடந்தது என்பதுதான் கூடுதல் சிறப்பு"

என்று நண்பன் இரகுநாதன் பதில் எழுதினான்.

அதற்கு நான்,

"இரகு இருக்கும் இடத்தில் இராகுவுக்கு என்ன வேலை?"

என்று பதில் எழுதினேன். 

உண்மைதானே? உற்ற நண்பர்களும், தோழர்களும், உறவுகளும் நம்மை அரவணைத்துக் காக்கும் போது 'இராகு'வெல்லாம் எம்மாத்திரம்?

காசு பணம் பொருளைவிட நேசக்கரம் நீட்டும் நட்புதானே நமது நினைவுகளை பசுமையாக்குகின்றன. உறவுகள்கூட சில பல காரணங்களுக்காக இடையில் அறுபடலாம், ஆனால் நட்பு, பூத்த நாள் முதல் உதிரும் இறுதி நாள் வரை வாடாமல் மிளிர்வதால்தானே வண்டுகள் வட்டமடிக்கின்றன.

சாதி மதம் பழக்க வழக்கம் வேறு வேறாயினும் ஒருசிலருக்கிடையில் நட்பு பூக்கிறதே எப்படி? பொய், பித்தலாட்டம் ஏமாற்று வஞ்சகக் கேடுகளை விட்டொழித்து, உண்மை நேர்மை நியாயத்தைக் கைக்கொள்ளும் இடமே மாசற்ற நட்பு மிளிரும் இடம். 

ஒத்த உணர்ச்சிதான் நட்புக்கு அடிப்படை என்பதால், 
சிலசமயம் பொய், பித்தலாட்டம் ஏமாற்று வஞ்சகம் என ஏதாவதொன்று ஒரு நண்பனை ஒட்டிக் கொண்டால் மறுகணமே அவனுடனான நட்பை வெட்டி விடுகிறோம். 

அதனால்தான், "ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது" 

என்று 13.04.2025 அன்று நடைபெற்ற எனது மகனின் இணைஏற்பு விழா குறித்து எழுதியபோது குறிப்பிட்டிருந்தேன்.

எமது இணை ஏற்பு விழா குறித்து "எதிர்த்து நில்" வலைப்பூவில் எழுதிய பதிவு கீழே இணைப்பில்.


நன்றி

பொன்.சேகர்
இணை ஏற்பு



































Thursday, 29 May 2025

பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !

அக்டோபர் 7, 2019 அன்று எழுதிய கட்டுரை. மீள் பதிவு.
****
ண்ணா பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது குறித்து தொலைக்காட்சிகளில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. காந்தியைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டிய ஒரு கொலை நூலை மாணவர்கள் படிப்பதா என பதறுகிறார்கள் பகுத்தறிவாளர்கள். அதுவும் அண்ணா பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலா என ஆதங்கப்படுகிறார்கள். நால் வருண சாதி அமைப்பை நியாயப்படுத்தும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது பார்ப்பன மேலாண்மையை நிலை நாட்டுவதும் மறைமுகமாக சமஸ்கிருதத்தைப் புகுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்பதே பகவத் கீதையை எதிர்ப்போரின் கருத்தாக இருக்கிறது.









மோடி எதைச் செய்தாலும் எதிர்ப்பதே பெரியாரிஸ்டுகளின் வேலையாப் போச்சு என்கிறது பார்ப்பன தரப்பு. மானுடவியல், தனிமனித ஆளுமை, நிர்வாக மேலாண்மை குறித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் கீதையில் கொட்டிக் கிடக்கிறது; மேலும் இந்து மதத்துக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பே கிடையாது; நால்வருண அமைப்பு என்பது செய்கிற தொழிலை அடிப்படையாகக் கொண்டது; வருண அமைப்புக்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அடித்துச் சொல்கிறார்கள். கீதை அனைவருக்குமான ஒரு பண்பாட்டு நூல். பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் படிக்கும் போது பகவத் கீதையை ஏன் படிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறது வலதுசாரி பார்ப்பனத் தரப்பு.

இதில் எந்தத் தரப்பு சொல்வது சரி. சாதாரண மக்களுக்கு பொறியியல் பாடத்திட்டம் குறித்த விவரம் தெரியாது.  ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்பதைத்தவிர பகவத் கீதை பற்றி வேறு எதுவும் தெரியாது. “எதப் படிச்சா என்ன? வேலை கெடச்சா சரி!” என்பதைத் தாண்டி பொறியியல் மாணவர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மோடிகளும் எடப்பாடிகளும் நீடிக்கும் வரை யார் எதைப் படிச்சாலும் எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை என்பது மட்டும்தான் தற்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதுல மேலாண்மைக் கோட்பாடாம்! ஆளுமைத் திறனாம்! சோத்துக்கே வழியில்லையாம். ஆனால் சோக்குக்கு மட்டும் கொறச்சல் இல்ல!’

சரி! விசயத்துக்கு வருவோம்! பகுத்தறிவு தரப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பார்ப்பனர்களின் கருத்தை பரிசீலித்தாலே எது சரி என்பதை முடிவு செய்ய முடியும் எனக் கருதுகிறேன்.

பகவத் கீதைக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே கிடையாது?

“ருக்ஸாம யஜூரேவ ச!” (கீதை: 9-17). இருக்கு, சாம, யஜூர் என்ற மூன்று வேதங்களும் நானேதான் என்கிறான் கிருஷ்ணன். “இருக்கு, எஜூர், சாம என்னும் பெயரையுடைய அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் (பிரம்மா) வெளிப்படுத்தினார்” (மனு:1-23) என்கிறான் மனு.

வேதங்கள், மனு தரும சாஸ்திரம், பகவத் கீதை இவை எல்லாம் இந்து மதத்தைப் பற்றிப் பேசாமல் கன்பூசியசிசமா பேசுகிறது? கீதைக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த சான்றுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் போது பகவத் கீதை ஒரு இந்து மத நூலே அல்ல என்று ஒருவன் பேசுகிறான் என்றால் அவனை சந்தேகப்பட வேண்டுமா? வேண்டாமா?

மனுதரும சாஸ்திரமும் கீதையும்!

“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” (கீதை: 4-13). “பார்ப்பனர், சத்திரியர். வைசியர், சூத்திரன் ஆகிய நான்கு வருணங்களையும்”, “கு ணகர்மவி பாக” (கீதை:4-13).  “அவர்களுக்கான குணங்களையும் கர்மங்களையும் நானே படைத்தேன்” என்கிறான் கிருஷ்ணன். இதையேதான் “உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்” (மனு:1-31) என்கிறது மனுதரும சாஸ்திரம்.












“வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றல் – கற்பித்தல் இவை பார்ப்பனர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்” (கீதை:18-42), “கொடையும் ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்” (கீதை:18-43), “உழவு செய்தலும், பொருட்களை வாங்கி விற்பதும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள்” (கீதை:18-44), “மக்கள் அனைவருக்கும் சேவை புரிவது நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்” (கீதை:18-45) என கீதை சொல்கிறது.

இதையேதான் மனுதரும சாஸ்திரமும் சொல்கிறது. “இவர்களுக்கான கர்மங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்” (மனு: 1-87), “பார்ப்பானுக்கு வேதம் ஓதுவித்தல், யாகம் செய்தல்” (மனு:1-88), “சத்திரியனுக்கு மக்களைக் காத்தல், தானம் கொடுத்தல்” (மனு:1-89), “வைசியனுக்கு பயிரிடுதல், வாணிபம் செய்தல்” (1-90), “சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை தருமமாக ஏற்படுத்தினார்” (மனு:1-91).

கீதையும் மனுதரும சாஸ்திரமும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? மனுதர்மத்தை சுலபமாக புரிய வைக்க, பதிய வைக்க எழுதப்பட்ட ஒரு கோனார் உரைதான் கீதை.

தொழிலை மாற்றிக் கொண்டால் வருண சாதி மாறிவிடுமா?

இதில் தொழிலை மாற்றிக் கொண்டால் அதாவது பார்ப்பனன் பிறருக்கு சேவை செய்தால் அவன் சூத்திரனாகவும், சூத்திரன் வேதம் ஓதி யாகம் வளர்த்தால் அவன் பார்ப்பானாகவும் ஆக முடியும் என்று மூச்சு முட்ட பேசுகின்றனர் பார்ப்பனர்கள்.

இசைக் கருவிகளை வாசிப்பது பார்ப்பானின் தொழில் கிடையாது.  வீணை, புல்லாங்குழல், வயலின், பக்க வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா  வாசிக்கிற பார்ப்பனர்கள் எல்லாம் இசைவேளாளர்களாக சாதி மாறிவிட்டார்களா? அப்படி மாற்றிக் கொண்ட ஒரு பார்ப்பானையாவது காட்ட முடியுமா?

இவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது. “பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் தன்னுடைய தர்மம் உயர்ந்தது” (கீதை:18-47), “தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது” (கீதை:18-48), உன்னுடைய தொழில்தான் உயர்ந்தது, அதை விட்டுவிடாதே என வலியுறுத்துகிறான் கிருஷ்ணன்.

ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்திற்காக உனது தொழிலை நீ மாற்றிக் கொண்டால் உனது வருணம் மாறிவிடுமா? உனது தொழிலை நீ மாற்றிக் கொள்ள உனக்கு அதிகாரம் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். “பார்ப்பனன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பார்ப்பன சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்கு பார்ப்பனச் சாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பார்ப்பனன் சூத்திரசாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார். (மனு:10-73).

நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் – சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.

ஊரான்