Wednesday, 19 September 2018

பெரியாருக்கு மரணம் இல்லை!

யதா யதா ஹி தர்மஸ்யஎன்கிறான் கிருஷ்ணன். எப்பொழுதெல்லாம் தர்மத்திற்குத் தீங்கு ஏற்பட்டு, அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தைக் காக்க கிருஷ்ணன் அவதாரம் எடுப்பானாம்.

பிறப்பின் அடிப்படையில் மக்களை வர்ணங்கள்சாதிகளாக பிளவு படுத்தி, அவர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வை உருவாக்கி, அதையே மேலான தர்மமென்றார்கள் பார்ப்பனர்கள். அதற்கு சனாதன தர்மம் என நாமகரணம் சூட்டினார்கள். அந்த சனாதன தர்மத்தின் புதிய நாமகரணம்தான் இன்றைய இந்து மதத் தர்மம்.

இங்கே தர்மத்திற்குத் தீங்கு என்பது சாதிய அமைப்பு முறைக்கு எதிராக செயல்படுவதாகும். இத்தகைய முயற்சியை யார் மேற்கொண்டாலும் அப்பொழுது அவர்களை அடக்கி ஒடுக்க தானே அவதாரம் எடுத்து வருவதாகக் கூறுகிறான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் அவதாரம் எடுத்தானோ இல்லையோ, ஆனால் இந்தச் சாதிய சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட புத்தர், அம்பேத்கர், பெரியார் என என்னற்ற அறிஞர்கள் தோன்றிய வண்ணம் உள்ளனர். இத்தகைய அறிஞர்கள் வாழ்ந்த காலத்தில் பார்ப்பனியம் இவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கி வாலை சுருட்டிக் கொண்டு ஓடி ஒளிந்தது. அப்படி ஓடி ஒளிந்த பார்ப்பனியம் குறுக்கு வழியில் எடுபிடி ஆட்சியாளர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிற போதெல்லாம் அம்பேத்கரும் பெரியாரும் மீண்டும் மீண்டும் நம் முன்னே வந்து நிற்கின்றார்கள்.

மத்தியில் நேரடி அதிகாரத்திலும், மாநிலத்தில் தங்களது எடுபிடிகளும் ஆட்சியில் இருக்கிறார்கள் என்கிற அகங்காரத்தோடு எச்சில் பொறுக்கிகளைப் போல எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் மக்களையும், நீதிமன்றங்களையும் மிகக்கேவலமாக இழிவு படுத்தினாலும் அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் ருக்கின்றவரை பார்ப்பனிய கொடுக்குகள் மக்களை கொத்திக் கொண்டேதான் இருக்கும்.

இந்தப் பார்ப்பனிய கொடுக்குகளை ஒடிக்க வேண்டுமானால் இன்று நமக்குத் தேவை அம்பேத்கர் அடியும், பெரியார் தடியும்தான். செப்டம்பர் 17, 2018 திங்களன்று பார்ப்பனிய கொடுக்கை ஒடிக்க தமிழக வீதிகளில் பெரியார் தடி சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. சுழலட்டும் எட்டுத் திக்கும். நொறுங்கட்டும் பார்பனியக் கொடுக்குகள்!

இராணிப்பேட்டை, பாரத மிகு மின் நிறுவன வாயிலில் பெரியார் பிறந்த நாள் விழா!



 பிரசுரம்
இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியாரின் 140 – வது பிறந்த நாள் விழா ஆலை வாயிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியாரின் கருத்துக்களை உள்ளட்டிக்கிய சுவரொட்டிகள் வாலாஜாப்பேட்டை, இராணிப்பேட்டை, ஆற்காடு, திருவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டன. பெரியார் குறித்த பிரசுரங்கள் ஆலை ஊழியர்களிடம் பரவலாக விநியோகம் செய்யப்பட்டது. மேலோர் என தங்களை பறைசாற்றிக் கொள்ளும் ஆதிக்கச் சாதியினருக்கு பெரியார் ஒரு கசப்பு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ பெரியார் ஒரு இனிப்பு என்பதை உணர்த்தும் வகையில் ஆலை ஊழியர்கள் அனைவருக்கும் லட்டு வழங்கி பெரியார் பிறந்த நாள் விழா மிக்க மகிழ்வோடு கொண்டாடப்பட்டது.

17.09.2018 காலை 07.30 மணிக்கு பெரியாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் இந்திரன் தலைமை ஏற்றார். வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் தி..சின்னதுரை பெரியார் படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் வில்சன், தோழர் கிருபாகரன், தோழர் சந்திரசேகர், SC / ST தொழிலாளர் மே்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் தோழர் கி.சேகர், இதர பிற்பட்டோர் நலச்சங்கத்தின் தலைவர் தோழர் கருப்பசாமி மற்றும் பெல் பகுத்தறிவாளர் கழகத் தோழர் மனோகரன் உள்ளிட்டோர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி கருத்துரை வழங்கினர். இறுதியில் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

நாடு முழுக்க பார்ப்பனிய நஞ்சு பரவி வரும் வேலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆலை வாயிலில் மிகச் சிறப்பாக பெரியாருக்கு எடுத்த இந்த பிறந்த நாள் விழா ஆலை ஊழியர்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

இதர பிற்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பிலும் ஆலை வாயிலில் தந்தை பெரியாருக்கு விழா எடுத்து சிறப்பு செய்தனர்.

 விழாக் காட்சிகள்

தலைமை தோழர் இந்திரன் 

தோழர் தி.க.சின்னதுரை மாலை அணிவித்தல்


தோழர் தி.க.சின்னதுரை 


தோழர் கருப்பசாமி


தோழர் கி.சேகர்


தோழர் கிருபாகரன்


தோழர் சந்திரசேகர்


தோழர் மனோகரன் 


தோழர் வில்சன்


SC/ST தொழிலாளர் மேம்பாட்டு ஒன்றியம் சார்பில் 
மாலை அணிவித்தல்


பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குதல்


பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குதல்



                                      பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குதல்


ஆலை வாயிலில் பெரியார் 


விழாவில் ஆலை ஊழியர்கள் 

இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம்

செய்தித் தொகுப்பு
ஊரான்

Friday, 17 August 2018

இது என்ன புதுசா பார்ப்பன நீதி மன்றம்!


பெண்கள் மீதான துன்புருத்தல்கள், இந்துத் திருமணங்கள், சொத்து மற்றும் பணம் கொடுக்கல் - வாங்கல் உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் இந்துக்களுக்கிடையில் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்த்து வைக்க 15.08.2018 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் முதலாவது பார்ப்பன நீதி மன்றம் ஒன்று அகில பாரதிய இந்து மகா சபாவினரால் தொடங்கப்பட்டுள்ளது. .

இந்து மகா சபாவின் தேசிய உதவித் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா,
அதனுடைய தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே என்பவரை பார்ப்பன நீதி மன்றத்தின் முதல் நீதிபதியாக நியமனம் செய்துள்ளார்.


பண்டிட் அசோக் ஷர்மா (வெள்ளை தாடி)  பூஜா ஷகுன் பாண்டேவை பார்ப்பன நீதி மன்றத்தின் முதல் நீதிபதியாக நியமனம் செய்கிறார். 

பார்ப்பனர்களால் தொடங்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு இந்து நீதி மன்றம் (Hindu Court) என்று பெயராம்.

எல்லோருக்கும் ஒரே அரசியல் சாசன சட்டம்தான் இருக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கான தனி ஷரியத் சட்டம் மற்றும் ஷரியத் நீதி மன்றங்கள் இருக்கக்கூடாது என இவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்களாம். அரசிடமிருந்து தங்களுக்குச் சாதகமாக முடிவு எதுவும் வராததால் இந்த பார்ப்பன நீதி மன்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்களாம். அது சரி! இது ஏட்டிக்குப் போட்டியானது எனில் இந்த பார்ப்பன நீதி மன்றங்களால் இஸ்லாமியர்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. மாறாக அது இந்துக்களைத்தானே கடித்து குதரப் போகிறது.

இந்த நீதி மன்றத்திற்கான விதிமுறைகளை வரும் அக்டோபர் 2 அன்று வெளியிட உள்ளார்களாம். நவம்பர் 15 ந் தேதி ஐந்து நீதிபதிகளை நியமிக்க போகிறார்களாம்.

தற்போது இந்துக்களை சாதியின் அடிப்படையில் பிளவுபடுத்தி ஆட்சி நடக்கிறதாம். அதனால் பார்ப்பன நீதி மன்றங்கள் மூலம் இந்துக்களை ஒன்றுபடுத்தப் போகிறார்களாம். இவர்கள் தனிச் சிறைச் சாலைகளையும் உருவாக்கப் போகிறார்களாம். இவர்களது நீதி மன்றங்களில் அதிக பட்ச தண்டணை மரண தண்டனையாக இருக்குமாம்.

இந்தியாவில் உள்ள சிவில் நீதி மன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் நிலுலையில் உள்ளதால் ஏழைகளால் நீதியைய் பெற முடியவில்லையாம். இந்த பார்ப்பன நீதி மன்றங்கள் விரைவாகவும் மலிவாகவும் நீதியைப் பெற்றுத் தருமாம்.

ஷரியத் சட்டம் குறித்து நமக்கு மாறுபட்ட கருத்து இருந்த போதிலும் இஸ்லாமியர்களுக்கு தனி ஷரியத் சட்டம். இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்கள் விசாரனை செய்து தீர்ப்பு வழங்குகிறார்கள்.

ஆனால் இங்கு,

கோவில்கள்தானே பார்ப்பனர்களின் உயர் நீதி மன்றங்கள். மனுவின் சாதிச் சட்டங்கள்தானே அங்கு கோலோச்சுகிறது. 

தொடர்புடைய பதிவு:


Tuesday, 7 August 2018

கலைஞர் கடைசி அசுரனா?


இவன் வேதம் கூறும் நியதிகளையும், நெறிமுறைகளையும் ஒதுக்கித் தள்ளினான். மனுஸ்மிருதியின் விதிகளுக்கு விரோதமாக  செயல்பட்டான். இவனது ஆட்சியி சட்டல் வேத நூல்களைக்  தடை விதித்தான். இவன்தான் ஹரிவம்சம் எனும் நூலில் சொல்லப்ட்டுள்ள வீணா என்கிற அரசன்.

இவன் ஒரு பலம் கொண்ட மன்னன். இவனே ஒரு பலசாலி என்பதால் பார்ப்பனர்களின் ஆலோசனைகளை கேட்க மறுத்தான். இவன்தான் மகாபாரதம், ஆதிபருவத்தில் குறிப்பிடப்படும் புரூவரன் என்கிற மன்னன்.

இவன் பார்ப்பனர்களின் வேத மந்திரங்களை ஏற்க மறுத்தான். இவன் புரூவரனின் மகன். இவன்தான் மகாபாரதம், உத்யோகப் பருவத்தில் சொல்லப்பட்டுள்ள நகுஷன் என்கிற மன்னன்.

இவன் பார்ப்பன ரிஷி வசிட்டருடன் முரண்பட்டதால் சாபத்திற்குள்ளாகி கொல்லப்பட்டவன். இவன்தான் விஷ்ணு புராணித்தில  சொல்லப்ட்டுள்ள நிமி என்கிற அரசன்.

வேதங்கள் கூடாது என்பதனால் இவனது ஆட்சியில் வேத பாட்சாலைகள் கிடையாது. இவன்தான் வாமண புராணத்தில் சொல்லப்படும் கேரள மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட மகாபலி சக்ரவர்த்தி. சும்மா விடுவார்களா பார்ப்னர்கள்? சூழ்ச்சியால் மகாபலியை ஒழித்துக் கட்டினார்கள்.

பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ள இரணியன் என்கிற இரணிய கசிபு. இவன் பிரகலாதனின் தந்தை. இவன் பார்ப்பனர்களை எதிர்த்த ஒரு மாபெரும் அரசன். நரசிங்க அவதாரம் மூலம் இவனையும் கொலை செய்தனர் பார்ப்பனர்கள்.

இலங்கைக்கே அதிபதியாக இருந்த இராவணனைக் கொன்றார்கள். இப்படி பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட மன்னர்களின் பட்டியல் மிக நீளமானது.

மன்னர்களின் ஆட்சிகள் எல்லாம் ஒன்றும் பொதுவுடமை ஆட்சிகள் அல்ல. இவர்களது ஆட்சி காலத்திலும் மக்கள் பல்வேறு அரசியல்-பொருளாதார பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்திருப்பார்கள். மன்னரும் அவரது குடும்பமும் செல்வச் செழிப்போடு சுகபோகமாக வாழ்ந்திருப்பார்கள்.

இவர்கள் மாபெரும் சக்ரவர்த்திகளாக, மன்னர்களாக, அரசர்களாக கோலாச்சிய போதும் இவர்களை ஏன் அசுரர்களாக, அரக்கர்களாக அதாவது இழிவானவர்களாக புராணங்கள் அடையாளப்படுத்துகின்றன? இவர்களது ஆட்சிக் காலத்தில் மக்கள் தும்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார்கள் என்பதற்காகவா? அல்லது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தை ஏற்க மறுத்ததற்காகவா?

பார்ப்பனர்களை வணங்காமையால் பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் உள்ளிட்ட நாட்டை ஆண்ட சத்திரியர்கள் அனைவரையும் நான்காம் வர்ணமான இழிவான சூத்திர நிலைக்கு தகுதி இறக்கம் செய்கிறான் மனு. (மனுஸ்மிருதி 10 - 43, 44).


யாரெல்லாம் வேதங்களையும், பார்ப்பன இந்து மதத்தின் வர்ணாசிரம தத்துவங்களையும் கேள்விக்குள்ளாக்கினார்களோ, அவர்களெல்லாம் அசுரர்கள் என இழிவு படுத்தப்பட்டார்கள். சதி மற்றும் நயவஞ்சகத்தால் கொன்றொழிக்கப்பட்டார்கள். புத்தரில் தொடங்கி பல்வேறு மன்னர்கள் ஈடாக அதைத் தொடர்ந்து வள்ளலார், பசவன்னர், மகாத்மா புலே, பெரியார், அண்ணா, அம்பேத்கர், கௌரிலங்கேஷ்நரேந்திர தபோல்கர்கோவிந்த் பன்சாரேஎம்.எம்.கல்புர்கி, என்கிற இந்த அசுரர்களின் பட்டியல் மிக நீளமானது. இந்த வரிசையில் இதோ இன்னுமொரு அசுரன். யாருடைய மரணத்தை பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்களோ, யாருடைய மரணம் பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அவர் நிச்சயம் அசுரர்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு இது இறுதி மகிழ்ச்சி அல்ல!