Sunday, 25 November 2018

மாதவிடாய்ப் பெண்ணே! பதினெட்டாம் படியேறு!

ஐய்யப்பாஸ் கடைபிடிக்க வேண்டிய விரதம்:

1.பொண்டாட்டியோடு உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

2. தண்ணி அடிக்கக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. tamasic உணவு கூடாது. (அது என்ன tamasic உணவு?).

3. குடும்பத்திலிருந்து தனித்து வாழ வேண்டும்.

4.அன்றாட வாழ்க்கையில் தன் குடும்பப் பெண்கள் உள்ளிட்ட எந்தப் பெண்ணுடனும் உரையாடக் கூடாது.

5. தனக்கான உணவை தானே சமைத்துக் கொள்ள வேண்டும்.

6. பிரார்த்தனைக்கு முன்பு அன்றாடம் இரண்டு முறை குளியல் போட்டு ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.

7. கருப்பு மேலாடை அணிய வேண்டும்.

8.ஒரு நாளைக்கு ஒரு வேளை சோறுதான்.

9.வெறுங்காலில் நடக்க வேண்டும்.

இதுதான் 41 நாட்களுக்கு ஐய்யப்பாஸ் கடைபிக்க வேண்டிய விரதம். இதை மீறினால் விரதம் அசுத்தப்பட்டு விடும்.

இதுதான் மரபு. பாரம்பரியம். இது நீதியரசர் சந்திரசூட் அவர்களின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு Part B பாரா 25 ல் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விரதங்களை மேற்கொண்ட பிறகுதான் பொன்னார் சபரிக்குச் சென்றாரா? இல்லை மற்ற பிற பக்தாள்ஸ் இவற்றை கடைபிடிக்கிறார்களா?

இந்த வரைமுறையை மீறக்கூடாது என்றால் பதினெட்டு படிகள் மட்டுமல்ல ஐய்யப்பனேகூட சிலந்திக் கூட்டில்தான் சிறைபட வேண்டும்.

இதை எல்லாம் நீங்கள் மீறும் போது, நீங்கள் போற்றிப்பாடும் புனிதம் கெடவில்லையா?

மாதவிடாய் காலத்தப் பெண்கள் மட்டும் போகக் கூடாது என்பது அப்பட்டமான தீண்டாமை.

தீண்டாமையைப் பொருத்தவரையில், மாதவிடாய்ப் பெண், பிணம், தீண்டத்தகாத பறையன் இவர்கள் எல்லாம் ஒன்று என்கிறது பார்ப்பன இந்து மதம். (மனுஸ்மிருதி:5-85)

எனவே தீட்டுப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீட்டுப் பட்டுவிட்டால் புனிதம் கெடும். புனிதம் கெட்டுப் போனால் அதனோடு சேர்ந்து பார்ப்பானும் பார்ப்பனியமும் சுடுகாட்டுக்குத்தான் போக வேண்டும். சபரிப் பிரச்சனை பார்ப்பனியப் பிரச்சனை.

மாதவிடாய்ப் பெண்கள் பதினெட்டாம் படியில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பார்ப்பனியத்திற்கு கொடுக்கும் மரண அடி. மரண அடி கொடுக்காமல் பார்ப்பனியத்தை வீழ்த்த முடியாது. பார்ப்பனியம் வீழாமல் தீண்டாமையும் ஒழியாது.

பார்ப்பனியத்துக்கு பாடை கட்ட வேண்டுமானால் ஒவ்வொரு மாதவிடாய்ப் பெண்ணும் பதினெட்டாம் படி ஏற வேண்டும்.
இணைப்பு : 1

PART B

“25 Traditionally though the Vratham period extended over forty-one days, nowadays shorter periods are permitted. While it is expected that for first time initiaties observe the forty-one day Vratham, others shorten the term to two weeks or even six days. A key essential of the Vratham is a sathvic lifestyle and brahmacharya. This is believed to be a step towards a pure body and mind an effort to be aloof from the materialistic world, by taking a step towards the path of devotion.
The Vratham or penance entails:
(i) Abstaining from physical relations with a spouse;
(ii) Abstention from intoxicating drinks, smoking and tamasic food;
(iii) Living in isolation from the rest of the family;
(iv) Refraining from interacting with women in daily life including those in the family;
(v) Cooking one’s own food;
(vi) Maintaining hygiene including bathing twice a day before prayers;
(vii) Wearing a black mundu and upper garments;
(viii) Partaking of one meal a day; and
(ix) Walking barefoot.
The penance is to be carried out in the manner prescribed. Maintaining oneself as ‘pure and unpolluted’, it is believed, would lead to the path towards attaining Godhead or to be one with Lord Ayyappa.”
இணைப்பு : 2
”5-85. When he has touched a Kandala, a menstruating woman, an outcast, a woman in childbed, a corpse, or one who has touched a (corpse), he becomes pure by bathing.
பறையன், தூமையானவள், பதிபின், பிரசவித்தவள், பிணம், பிணத்தைத் தொட்டவன் இவர்களைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ் செய்தால் பரிசுத்தனாகிறான்.”

தொடாபுடைய பதிவு:

Wednesday, 19 September 2018

பெரியாருக்கு மரணம் இல்லை!

யதா யதா ஹி தர்மஸ்யஎன்கிறான் கிருஷ்ணன். எப்பொழுதெல்லாம் தர்மத்திற்குத் தீங்கு ஏற்பட்டு, அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தைக் காக்க கிருஷ்ணன் அவதாரம் எடுப்பானாம்.

பிறப்பின் அடிப்படையில் மக்களை வர்ணங்கள்சாதிகளாக பிளவு படுத்தி, அவர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வை உருவாக்கி, அதையே மேலான தர்மமென்றார்கள் பார்ப்பனர்கள். அதற்கு சனாதன தர்மம் என நாமகரணம் சூட்டினார்கள். அந்த சனாதன தர்மத்தின் புதிய நாமகரணம்தான் இன்றைய இந்து மதத் தர்மம்.

இங்கே தர்மத்திற்குத் தீங்கு என்பது சாதிய அமைப்பு முறைக்கு எதிராக செயல்படுவதாகும். இத்தகைய முயற்சியை யார் மேற்கொண்டாலும் அப்பொழுது அவர்களை அடக்கி ஒடுக்க தானே அவதாரம் எடுத்து வருவதாகக் கூறுகிறான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் அவதாரம் எடுத்தானோ இல்லையோ, ஆனால் இந்தச் சாதிய சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட புத்தர், அம்பேத்கர், பெரியார் என என்னற்ற அறிஞர்கள் தோன்றிய வண்ணம் உள்ளனர். இத்தகைய அறிஞர்கள் வாழ்ந்த காலத்தில் பார்ப்பனியம் இவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கி வாலை சுருட்டிக் கொண்டு ஓடி ஒளிந்தது. அப்படி ஓடி ஒளிந்த பார்ப்பனியம் குறுக்கு வழியில் எடுபிடி ஆட்சியாளர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிற போதெல்லாம் அம்பேத்கரும் பெரியாரும் மீண்டும் மீண்டும் நம் முன்னே வந்து நிற்கின்றார்கள்.

மத்தியில் நேரடி அதிகாரத்திலும், மாநிலத்தில் தங்களது எடுபிடிகளும் ஆட்சியில் இருக்கிறார்கள் என்கிற அகங்காரத்தோடு எச்சில் பொறுக்கிகளைப் போல எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் மக்களையும், நீதிமன்றங்களையும் மிகக்கேவலமாக இழிவு படுத்தினாலும் அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் ருக்கின்றவரை பார்ப்பனிய கொடுக்குகள் மக்களை கொத்திக் கொண்டேதான் இருக்கும்.

இந்தப் பார்ப்பனிய கொடுக்குகளை ஒடிக்க வேண்டுமானால் இன்று நமக்குத் தேவை அம்பேத்கர் அடியும், பெரியார் தடியும்தான். செப்டம்பர் 17, 2018 திங்களன்று பார்ப்பனிய கொடுக்கை ஒடிக்க தமிழக வீதிகளில் பெரியார் தடி சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. சுழலட்டும் எட்டுத் திக்கும். நொறுங்கட்டும் பார்பனியக் கொடுக்குகள்!

இராணிப்பேட்டை, பாரத மிகு மின் நிறுவன வாயிலில் பெரியார் பிறந்த நாள் விழா!



 பிரசுரம்
இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியாரின் 140 – வது பிறந்த நாள் விழா ஆலை வாயிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியாரின் கருத்துக்களை உள்ளட்டிக்கிய சுவரொட்டிகள் வாலாஜாப்பேட்டை, இராணிப்பேட்டை, ஆற்காடு, திருவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டன. பெரியார் குறித்த பிரசுரங்கள் ஆலை ஊழியர்களிடம் பரவலாக விநியோகம் செய்யப்பட்டது. மேலோர் என தங்களை பறைசாற்றிக் கொள்ளும் ஆதிக்கச் சாதியினருக்கு பெரியார் ஒரு கசப்பு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ பெரியார் ஒரு இனிப்பு என்பதை உணர்த்தும் வகையில் ஆலை ஊழியர்கள் அனைவருக்கும் லட்டு வழங்கி பெரியார் பிறந்த நாள் விழா மிக்க மகிழ்வோடு கொண்டாடப்பட்டது.

17.09.2018 காலை 07.30 மணிக்கு பெரியாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் இந்திரன் தலைமை ஏற்றார். வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் தி..சின்னதுரை பெரியார் படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் வில்சன், தோழர் கிருபாகரன், தோழர் சந்திரசேகர், SC / ST தொழிலாளர் மே்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் தோழர் கி.சேகர், இதர பிற்பட்டோர் நலச்சங்கத்தின் தலைவர் தோழர் கருப்பசாமி மற்றும் பெல் பகுத்தறிவாளர் கழகத் தோழர் மனோகரன் உள்ளிட்டோர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி கருத்துரை வழங்கினர். இறுதியில் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

நாடு முழுக்க பார்ப்பனிய நஞ்சு பரவி வரும் வேலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆலை வாயிலில் மிகச் சிறப்பாக பெரியாருக்கு எடுத்த இந்த பிறந்த நாள் விழா ஆலை ஊழியர்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

இதர பிற்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பிலும் ஆலை வாயிலில் தந்தை பெரியாருக்கு விழா எடுத்து சிறப்பு செய்தனர்.

 விழாக் காட்சிகள்

தலைமை தோழர் இந்திரன் 

தோழர் தி.க.சின்னதுரை மாலை அணிவித்தல்


தோழர் தி.க.சின்னதுரை 


தோழர் கருப்பசாமி


தோழர் கி.சேகர்


தோழர் கிருபாகரன்


தோழர் சந்திரசேகர்


தோழர் மனோகரன் 


தோழர் வில்சன்


SC/ST தொழிலாளர் மேம்பாட்டு ஒன்றியம் சார்பில் 
மாலை அணிவித்தல்


பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குதல்


பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குதல்



                                      பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குதல்


ஆலை வாயிலில் பெரியார் 


விழாவில் ஆலை ஊழியர்கள் 

இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம்

செய்தித் தொகுப்பு
ஊரான்

Friday, 17 August 2018

இது என்ன புதுசா பார்ப்பன நீதி மன்றம்!


பெண்கள் மீதான துன்புருத்தல்கள், இந்துத் திருமணங்கள், சொத்து மற்றும் பணம் கொடுக்கல் - வாங்கல் உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் இந்துக்களுக்கிடையில் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்த்து வைக்க 15.08.2018 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் முதலாவது பார்ப்பன நீதி மன்றம் ஒன்று அகில பாரதிய இந்து மகா சபாவினரால் தொடங்கப்பட்டுள்ளது. .

இந்து மகா சபாவின் தேசிய உதவித் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா,
அதனுடைய தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே என்பவரை பார்ப்பன நீதி மன்றத்தின் முதல் நீதிபதியாக நியமனம் செய்துள்ளார்.


பண்டிட் அசோக் ஷர்மா (வெள்ளை தாடி)  பூஜா ஷகுன் பாண்டேவை பார்ப்பன நீதி மன்றத்தின் முதல் நீதிபதியாக நியமனம் செய்கிறார். 

பார்ப்பனர்களால் தொடங்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு இந்து நீதி மன்றம் (Hindu Court) என்று பெயராம்.

எல்லோருக்கும் ஒரே அரசியல் சாசன சட்டம்தான் இருக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கான தனி ஷரியத் சட்டம் மற்றும் ஷரியத் நீதி மன்றங்கள் இருக்கக்கூடாது என இவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்களாம். அரசிடமிருந்து தங்களுக்குச் சாதகமாக முடிவு எதுவும் வராததால் இந்த பார்ப்பன நீதி மன்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்களாம். அது சரி! இது ஏட்டிக்குப் போட்டியானது எனில் இந்த பார்ப்பன நீதி மன்றங்களால் இஸ்லாமியர்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. மாறாக அது இந்துக்களைத்தானே கடித்து குதரப் போகிறது.

இந்த நீதி மன்றத்திற்கான விதிமுறைகளை வரும் அக்டோபர் 2 அன்று வெளியிட உள்ளார்களாம். நவம்பர் 15 ந் தேதி ஐந்து நீதிபதிகளை நியமிக்க போகிறார்களாம்.

தற்போது இந்துக்களை சாதியின் அடிப்படையில் பிளவுபடுத்தி ஆட்சி நடக்கிறதாம். அதனால் பார்ப்பன நீதி மன்றங்கள் மூலம் இந்துக்களை ஒன்றுபடுத்தப் போகிறார்களாம். இவர்கள் தனிச் சிறைச் சாலைகளையும் உருவாக்கப் போகிறார்களாம். இவர்களது நீதி மன்றங்களில் அதிக பட்ச தண்டணை மரண தண்டனையாக இருக்குமாம்.

இந்தியாவில் உள்ள சிவில் நீதி மன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் நிலுலையில் உள்ளதால் ஏழைகளால் நீதியைய் பெற முடியவில்லையாம். இந்த பார்ப்பன நீதி மன்றங்கள் விரைவாகவும் மலிவாகவும் நீதியைப் பெற்றுத் தருமாம்.

ஷரியத் சட்டம் குறித்து நமக்கு மாறுபட்ட கருத்து இருந்த போதிலும் இஸ்லாமியர்களுக்கு தனி ஷரியத் சட்டம். இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்கள் விசாரனை செய்து தீர்ப்பு வழங்குகிறார்கள்.

ஆனால் இங்கு,

கோவில்கள்தானே பார்ப்பனர்களின் உயர் நீதி மன்றங்கள். மனுவின் சாதிச் சட்டங்கள்தானே அங்கு கோலோச்சுகிறது. 

தொடர்புடைய பதிவு: