Showing posts with label தீவிரவாதி ஹபீப். Show all posts
Showing posts with label தீவிரவாதி ஹபீப். Show all posts

Wednesday, 16 July 2014

பேஷா பேஷராறு ராகவன்!

சமூக வலைதளங்களில் இந்தியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என அன்மையில் நடுவண் அரசு பிரப்பித்த ஆணை மற்றும் அதையொட்டி தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு பற்றி தொலைக்காட்சி ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

அத்தகைய விவாதங்களில் பங்கேற்ற பா.ஜ.க வின் ராகவன் அவர்கள் ஆங்கிலத்தின் மீது கடும் சினம் கொண்டு பேஷினார். ஆங்கிலம் தனக்கு அந்நிய பாஷை என்றும் அது தனக்குத் தேவையில்லை எனவும் பொறிந்து தள்ளினார்.

பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத் - பத்திரிக்கையாளர் வேத பிரதாப் வைதிக் சந்திப்பு பற்றிய பிரச்சனை குறித்து இன்று (16.07.2014) தந்தி தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு நடைபெற்ற விவாதத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஹரிஹரன் மற்றும் சி.பி.எம்.மின் குமரேசன், காங்கிரசின் அமெரிக்கை நாராயணன் ஆகியோருடன் ஷொன்னீங்க, பேஷரது, பிரஷ்னை, கேழ்ப்பது, விஷயம், ஷொல்ரது என தமிழில் ரொம்ப பேஷாகப் பேஷினார்  திருவாளர் ராகவன் அவர்கள். அன்று ஆங்கிலத்தின் மீது பொறிந்து தள்ளிய அதே ராகவனுக்கு இன்று parliament, issue, devil, certificate, select, selection, government, consideration, right, intelligence bureau, advice போன்ற அந்நியனின் ஆங்கில ஷொற்கள் தமிழை இணைக்கும் இணைப்பு ஷொற்களாக இருந்தது ஏனோ?