Showing posts with label பாட்டாளி. Show all posts
Showing posts with label பாட்டாளி. Show all posts

Monday, 14 July 2014

“ஐயா”வை அசிங்கப்படுத்தும் ‘அய்யா’க்கள்!

வால் நெருப்பைக் கொண்டே இராவணனின் லங்காவையே பொசுக்கிய வானரக்கூட்டதிற்கு ராஜபக்சேவெல்லாம்  சும்மா ஜுஜுபி என நேற்றுவரை கூப்பாடு போட்ட ‘அய்யா’வுக்கு இன்று திடீர் நெஞ்சுவலியாம்.

‘அய்யா’வின் நெஞ்சு வலிக்கான காரணத்தைக் கண்டறிய முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகிறார்களாம். ‘அய்யா’வை குணப்படுத்துவது ஒரு சவாலான வேலை என்பதால் ஒரு தனி அறையில் மருத்துவக் குழாம் மிகத்தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்த போது

“இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது” என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சொன்னதைக் கேட்டதனால் ஏற்பட்ட அதிர்ச்சிதான் ‘அய்யா’வின் நெஞ்சுவலிக்குக் காரணம் என அசரீரி ஒலித்ததாம். 

இதற்கெல்லாம் எப்படி மருத்துவம் பார்ப்பது என்கிற குழப்பத்தில் மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்களாம். இதைக்கண்ட பாட்டாளிச் சொந்தங்கள் ‘அய்யா’வுக்குத் தைலம் தெளிக்க தயாராகிவிட்டதாகக் கேள்வி!

பொருள் பொதிந்த “ஐயா”வை பொருளற்ற ‘அய்யா’க்கள் அசிங்கப்படுத்தியது போதும்!

-------------------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்:

கோவணம்!