Showing posts with label இந்திய தத்துவம். Show all posts
Showing posts with label இந்திய தத்துவம். Show all posts

Wednesday, 17 September 2025

இந்தியா ஆன்மீக நாடா? நாத்திக நாடா?

கடவுள் இல்லை என்று கூறுபவன்தான் நாத்திகன் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவனும் நாத்திகனாக இருக்க முடியுமா என்று கேட்டால், ஆம் இருக்க முடியும் என்பதே பதில்.

வேதங்கள் பிழையற்றவை என்று நம்புகிறவன் எவனோ, வேதங்களின் மேலாண்மையை ஒப்புக் கொள்கிறவன் எவனோ அவன் மட்டுமே ஆத்திகன் என்கிறது இந்து மதத்தத்துவம். இவன்தான் சனாதனி என்று அறியப்படுபவன். மனுதர்ம சாஸ்திரமே இவனுக்கான உந்து சக்தி. 


இதற்கு நேர் மாறாக, எவன் ஒருவன் வேதங்களை மறுக்கிறானோ, வேதங்களை நிந்தனை செய்கிறானோ, அவனை நாத்திகன் என்கிறது இந்து மதத் தத்துவம்.

ஆகவே, இந்துமத வேதங்களை ஏற்றுக் கொள்ளாத சைவர்கள், பகுத்தறிவாளர்கள், பொதுவுடமைவாதிகள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைவரும் நாத்திகர்கள்தான். வேதங்களை ஏற்றுக் கொள்ளாத பட்டைபோட்ட பக்திமான்கூட நாத்திகனே; நமது தோழனே!

ஆத்திகமே இந்தியாவில் பலம் வாய்ந்தது என சனாதனவாதிகள் பெருமை பேசுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல; இந்தியாவில் பெருமான்மையினர் நாத்திகர்களே என்று நாமும் உரத்துக் குரல் எழுப்புவோம்!

தகவல் ஆதாரம்:  இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்: தேவி பிரசாத் சட்டோபாத்யாயா

ஊரான்