Saturday, February 5, 2022

'நீட்'டும், வெங்காயம் வெள்ளப் பூண்டும்!

பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அல்லது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள், இவற்றில் படித்த பாடம் பற்றிய ஒருவரின் அறிவாற்றலை தீர்மானிப்பது பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே.

இரண்டு தேர்வுகளிலும் குறைந்தது ஐந்துக்கும் குறையாத எண்ணிக்கையில் கேள்வித்தாள்கள் வெவ்வேறு குழுவினரால் தயாரிக்கப்படும். குழுக்களில் யார் யார் இருக்கிறார்கள் என்பதும், ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் தொடர்பு ஏதும் இல்லாமல், தேர்வு அன்று கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்படும் வரை இரகசியம் காக்கப்பட வேண்டும்.

பொதுவாகவே அதிகார அமைப்புகளில் பார்ப்பனர்கள் ஊடுருவி இருப்பதால் மேற்கண்ட கேள்வித்தாள்களை சேகரித்து, வேண்டிய பார்ப்பன மாணவர்களுக்கு மட்டுமே இரகசியமாக சுற்றுக்கு விடுவது வழக்கம்.

பொதுத் தேர்வு வினாத்தாள்களை சேகரித்தாலும், கிட்டத்தட்ட மொத்தப் பாடங்களையும் மீண்டும் மீண்டும் படித்து தயாரிக்க வேண்டுமென்பதால் அதற்கு அதிகமாக உழைக்க வேண்டும். நாமக்கல் போன்ற பகுதிகளில் உள்ள சில தனியார்  பள்ளிகளால் மட்டும் பொதுத்தேர்வு முறையில் அதிகமான மாணவர்களை மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அதிக இடங்களைக் கைப்பற்ற  முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் கோடிகளை செலவு செய்து கேள்வித்தாள்கள் அனைத்தையும் இரகசியமாகப் பெற்று மீண்டும் மீண்டும் அதே கேள்விகளைக் கொடுத்து மாணவர்களுக்குத் தொடர் மாதிரித் தேர்வுகளை நடத்தியதால்தான். 

ஆனால், நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள், கோடிட்ட இடத்தை நிரப்புதல் அல்லது சரியான விடையை ‘டிக்’ செய்து தேர்வு செய்தல் என்ற எளிமையான வடிவில் இருப்பதால் அதற்குத் தயாரிப்பது மிக மிக சுலபம். தில்லுமுல்லு செய்து தங்களது சாதி மாணவர்களை மட்டும் தேர்வுக்குத் தயார் படுத்தி வெற்றி பெறச் செய்வதற்கு நுழைவுத் தேர்வு முறைதான் சுலபமானது என்பதனால் நுழைவுத்தேர்வு முறையை பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக ஆதரிக்கின்றனர். அதுவும் நீட் போன்ற தேர்வுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் கேள்வித்தாள்களை முன்கூட்டியே பெற்று தங்களுக்கு வேண்டிய சாதி மாணவர்களுக்கு இரகசியமாக சுற்றுக்கு விடுவது பார்ப்பனர்களுக்குச் சுலபமானது. பணம் இருந்தால் மட்டும் கேள்வித்தாள்களை பெற்றுவிட முடியாது. மாறாக தங்களுக்கான ஆட்கள் அதிகார பீடத்தில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். சாத்தியம் என்பதால்தான் பார்ப்பனர்களால் சாதிக்க முடிகிறது. இது காலங்காலமாக நடந்து வரும் ஒரு மோசடி. மற்றபடி பார்ப்பனர்களைப் பொருத்தவரை வெங்காயம் வெள்ளப் பூண்டும் போல அறிவும் திறமையும் வாழ்வதற்குத் தேவையற்றவைதான். இது மிகவும் ‘பரம இரகசியம்' என்பதால் அந்தப் பரமனே வந்தால்கூட இதைக் கண்டுபிடிக்க முடியாது.

குறிப்பு: தங்களது பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்ப்பதற்கு முயன்ற ஒரு சில பெற்றோர்களுக்கு இது புரிந்திருக்கும்.

ஊரான்