Wednesday, September 23, 2015

விஷ்ணுப்பிரியா உயிர்த்தெழுவாரா?

“தீண்டாதவர்களின் பரிதாபமான நிலையைக்கண்டு மனம் வருந்துவோர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது “தீண்டாதவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்” என்று ஓலமிடுவதை வழக்கமாகக் கேட்கிறோம். இந்தப் பிரச்சனையில் அக்கறையுள்ள எவரும் ‘தீண்டத்தக்க இந்துவை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்’ என்று சொல்வதைக் கேட்பது அரிது. மீட்கப்பட வேண்டிவர் தீண்டாதவர்தான் என்றே எப்போதும் கருதப்படுகிறது. நற்பணிக் குழு ஒன்றை அனுப்புவதானால் அதைத் தீண்டத்தகாதவர்களுக்குத்தான் அனுப்ப வேண்டும். தீண்டாதவர்களைத் திருத்திவிட முடிந்தால் தீண்டாமை மறைந்து போகும். தீண்டத்தக்கவருக்கு எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அவர் மனத்திலும், நடத்தையிலும், ஒழுக்கத்திலும் நலமாயிருக்கிறார், அவர் ஆரோக்கியாய் இருக்கிறார், அவரிடம் எந்தக் கேடும் இல்லை.

இவ்வாறு கருதுவது சரிதானா? சரியோ, தவறோ இந்துக்கள் இந்தக் கருத்தைத்தான் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். தீண்டாதவர்களின் பிரச்சனைக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று தங்களைத் தாங்களே திருப்தி செய்து கொள்ள உதவுகிறது என்ற பெரிய சிறப்பு இந்தக் கருத்துக்கு உள்ளது” (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்:  பேச்சும் எழுத்தும்: தொகுதி 9).

தீண்டாமை குறித்த சாதி இந்துக்களின் மனநிலையை வேறு யாராலும் இதைவிட சிறப்பாக படம் பிடித்துக் காட்ட முடியாது. அம்பேத்கரின் இந்த தீர்க்கமான கூற்று உண்மைதான் என்பதை விஷ்ணுப்பிரியாவின் தற்கொலை நமக்கு உணர்த்துகிறது.

இளவரசன் மரணம், கோகுல்ராஜ் படுகொலை, விஷ்ணுப்பிரியா தற்கொலை என தீண்டத்தகாத சாதிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகும் போது “தீண்டாதவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்” என்று, சாதியப் படிநிலையில் உயர் நிலையில் உள்ள ஐயர் - ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர் முதல் சாதியப் படிநிலையில் கீழ்நிலையில் உள்ள சூத்திரச்சாதி வரை பலரும் ஓலமிடுவதைக் கேட்கிறோம். விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் உண்மையைக் கண்டறிய வேண்டும் என ஓலமிடும் பார்ப்பன பா.ஜ.க முதல் சூத்திரவாள் ராமதாஸ்வரை தாழ்த்தப்பட்டவர்களின் இந்த நிலைக்குத் தாங்கள் கடைபிடிக்கும் தீண்டாமைதான் காரணம் என்பதை என்றைக்காவது உணர்ந்துள்ளார்களா? 

தீண்டத்தகாதவர்களுக்காக கரிசனப்படுவதைவிட தீண்டத்தகுந்த சாதி இந்துக்கள் தாங்கள் கடைபிடிக்கும் தீண்டாமையால்தான் இளவரசன்களும், கோகுல்ராஜ்களும், விஷ்ணுப்பிரியாக்களும் மாண்டு போகிறார்கள்; இவர்களின் கொலைக்கும் – மரணத்திற்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதை குற்ற உணர்வோடு முதலில் ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும். சாதி இந்துக்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதற்குக் காரணம் இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள இந்து மதமும் அதன் நம்பிக்கைகளும், நடைமுறைகளும்தான் என்பதை உணர வேண்டும். இந்துமத நம்பிக்கைளையும், நடைமுறைகளையும் அன்றாட வாழ்விலிருந்து அகற்றுவதன் மூலம் மட்டுமே தீண்டாமையை கடைபிடிக்கும் கருத்தியலிலிருந்தும், நம்பிக்கைகளிலிலிருந்தும் சாதி இந்துக்கள் தங்களைத் துண்டித்துக் கொள்ள முடியும். இது அவ்வளவு எளிதானதல்ல என்றாலும் சாதி இந்துக்களை சமூகப் போராளிகளாக, புரட்சியாளர்களாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைக் கைவிட வேறு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. 

'தீண்டத்தக்க இந்துவை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்’ என்று சொல்வதைக் கேட்பது அரிது என்கிற அம்பேத்கரின் ஆதங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், படிநிலைச் சாதி அமைப்பு முறையையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும் உயிர் மூச்சாகக் கொண்டுள்ள இந்து மதத்தை புதைகுழிக்கு அனுப்ப வேண்டும். அதுவரை விஷ்ணுப்பிரியாக்கள் உயிர்த்தெழ முடியாது.

தொடர்புடைய பதிவுகள்:

Thursday, September 10, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! இறுதிப் பகுதி

அலுவலகங்களில், பேருந்துகளில், பொது இடங்களில் நம்மை அறியாமலேயே நமது கால் மற்றொருவர் மீது பட்டுவிட்டாலோ அல்லது அவசரத்தில் ஒருவரை இடித்துவிட்டாலோ “சாரி சார்!” என நாமாகவே முன்வந்து நமது வருத்தத்தை மற்றவர்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாக தெரிவிக்கிறோம். தெரியாமல் நடந்துவிட்டால்கூட நம்முடைய செய்கை மற்றவரை பாதிக்கும் என்பதை உணர்ந்திருப்பதால்தான் நாம் வருத்தம் தெரிவிக்கிறோம். அவ்வாறு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் நமது மனம் குறுகுறுக்கிறது. இதுதான் ஒரு மனிதனின் இயல்பான மனநிலை.

ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக நடத்துவதில் ஆதிக்கச் சாதியினர் எவரும் தங்களது செயல் மற்றவரை பாதிக்கிறதே என்கிற எண்ணம் சிறிதுகூட இல்லாமல், ‘தான் செய்வது சரி!’ என்ற மனநிலையிலேயே செய்கின்றனர். ஆனால், அதே ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரவன் பொது இடத்தில் ஒருவரை தெரியாமல் இடித்துவிட்டால் வருத்தம் தெரிவிக்கின்றான். ஏன் இந்த முரண் நிலை? தனிப்பட்ட மனிதனாக இருக்கும் போது ஜனநாயகவாதியாகவும், சமூக வாழ்க்கை என வரும் போது அராஜகவாதியாகவும் அவன் ஏன் நடந்து கொள்கிறான்?

இந்து மத சமூக வாழ்க்கையே அடிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது என்பதால் ஒரு இந்துவாக வாழ்பவன் இந்து மத வழக்கப்படிதான் வாழ்வான். தனக்குக் கீழே உள்ள சாதிக்காரனை இழிவாகத்தான் நடத்துவான். அப்படி நடத்துவதுதான் இந்து தர்மம். அராஜகவாதியாகத்தான் வாழ வேண்டும் என ஒருவனை ஒரு மதம் வளர்க்கும் போது அவனிடம் ஜனநாயகத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்து தர்மத்திற்கு, அதாவது மனுதர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் குறைவு ஏற்படுகிறதோ, அதர்மத்தின் கை ஓங்குகிறதோ – இங்கே அதர்மம் என்பது மனுதர்மத்தை கேள்விக்குள்ளாகும் செயல்கள் - அப்பொழுதெல்லாம் இந்து தர்மத்தைக் காக்க கிருஷ்ணனே நேரில் தோன்றுவான் என்பதைத்தானே பகவத்கீதை சொல்கிறது (4:7). லேடியாக, மோடியாகக்கூட கிருஷ்ணன் அவதாரம் எடுப்பான் என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! கிருஷ்ணன் நேரில் தோன்றுவது மட்டுமல்ல ‘அதர்மவாதிகளை’ அரக்கர்கள் என முத்திரை குத்தி அழிக்கவும் செய்கிறான். இடதுசாரி சிந்தனையாளராகவும், பகுத்தறிவுவாதியாகவும் அறியப்பட்ட கன்னட அறிஞரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் எம்.எம்.கல்புர்கியின் படுகொலை கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் அவதாரம் எடுக்கிறான் என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

கிருஷ்ணன்கள் அவதாரம் எடுக்க எடுக்க, இந்து தர்மம் பாதுகாக்கப்பட்டுக் கொண்டே வரும். இந்து தர்மம் பாதுகாக்கப்படும் வரை தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்பவன் அராஜகவாதியாகத்தான் வாழ்வான். அராஜகவாதிகள் இருக்கும் வரை தீண்டாமையும் தொடரும்.

தென் அமெரிக்கா நாடான பொலிவியா, ஸ்பெயின் நாட்டின் காலனி நாடாக இருந்தபோது “அமெரிக்காவை கீழ்படுத்தும்” திட்டத்தின் கீழ் கத்தோலிக்க சர்ச்சுகளால் பொலிவிய நாட்டு பூர்வகுடி மக்கள் மீது கடந்த நூற்றாணடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், அநீதிகளுக்கும் அர்ஜென்டைனா நாட்டைச் சேர்ந்த தற்போதைய போப் பிரான்சிஸ் பொலிவிய நாட்டு மக்களிடம் மிகவும் கீழ்படிந்து பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். கடவுளின் பெயரால் அமெரிக்க மக்கள் மீது மிகக் கடுமையான குற்றங்களை கத்தோலிக்க சர்ச்சுகள் செய்துள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். (THE HINDU: 11.07.2015)

கடந்த நூற்றாண்டுகளில் நடந்த அநீதிகளுக்கு போப் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இந்த நூற்றாண்டிலும் இன்றளவும் இந்து மதத்தின் பெயரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதே! எந்த இந்து மதத் தலைவராவது தீண்டப்படாதவர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு மன்னிப்பு கோரியதுண்டா? குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவித்ததுண்டா?

அவர்கள் வருத்தம் தெரிவிக்கமாட்டார்கள். ஓநாய்களிடம் ஆடுகளுக்கு நீதி கிடைக்குமா என்ன?  

முற்றும்.

தொடர்புடைய பதிவுகள்:

*ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கான சட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கான சட்ட உரிமைகள்!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15


"தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!" என்கிற இந்தத் தொடரை முடித்துவிடலாம் எனக் கருதியபோது தீண்டாமை என்பது வாழ்ந்துவரும் கடந்த காலமாக இந்தியாவெங்கும் தொடர்கிறது என்பது மட்டுமல்ல தீண்டாமை மேலும் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது என்பதற்கான நிகழ்வுகள் அன்றாடம் அறங்கேறி வருகின்றன. அதனால் மேலும் சில செய்திகளைத் தொகுத்து தொடரை முடிக்கலாம் எனக் கருதுகிறேன்.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹோலேனாசிபூர் வட்டத்தில் உள்ள சிகரணஹள்ளி கிராமம் எச்.டி.தேவகவுடாவின் சொந்த ஊரான ஹாரண்டஹள்ளியிலிருந்து 2 கி.மீ.தொலைவில் உள்ள ஓர் ஊர். இவ்வூரில் 20 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் “ஸ்ரீபசவேஸ்வரா ஸ்ட்ரீ சக்தி சங்கா” என்கிற சுயஉதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆகஸ்டு 31ந்தேதி அன்று தாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீபசவேஷ்வரா கோவில் சிறப்பு பூஜையின் போது இந்த சுயஉதவிக்குழவைச் சேர்ந்த 9 ஒக்கலிக சாதிப் பெண்களுடன் 4 தலித் பெண்களும் கோவிலுக்குள் சென்றுள்ளனர். தலித் பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என ஒக்கலிக சாதியைச் சேர்ந்த தேவராஜா என்பவர் எதிர்த்துள்ளார்.

மறுநாள் ஆதிக்கச் சாதியினர் ஒன்றுகூடி கூட்டம் நடத்தி சுயஉதவிக்குழுவிற்கு ரூ.1000 அபராதம் விதித்ததோடு, தலித் பெண்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவிலின் புனிதம் கெட்டு தீட்டுபட்டுவிட்டதாகக்கூறி தீட்டுக்கழிப்பு சடங்கினை சுயஉதவிக் குழுவினரே செய்ய வேண்டும் என் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.

கோவில் திருவிழாவிற்கு தாங்களும் பணம் கொடுத்துள்ளதால் கோவிலுக்குள் நுழைய முழு உரிழமை தங்களுக்கு உண்டு எனக்கூறி அபராதத் தொகையை செலுத்த முடியாது என தலித் பெண்கள் மறுத்துள்ளனர்.

ஸ்ரீபசவேஷ்வரா கோவிலுக்குள் தலித் பெண்கள் நுழைந்தது குறித்து கேள்வி எழுப்பும் ஆதிக்கச் சாதியினரை கடும் வெஞ்சினத்தோடு எதிர்க்கிறார் 60 வயதை நெருங்கும் ஹரிஹர்பூர் கிராம பஞ்சாயத்து உறுப்பிராக இருந்த தாயம்மா.

சில ஆண்டுகளுக்கு முன்பு “ஹாசன் ஜில்லா பரிசத்” மூலமாக எச்.டி.தேவகவுடா அவர்கள் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் நிதி உதவியுடன் அந்தக் கோவிலில், அனைவருக்கும் பயன்படும் வகையில் சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால் அது தற்போது ஒக்கலிக பவனாக மாற்றப்பட்டு அச்சமுதாயக் கூடத்திற்குள் தலித்துகள் நுழைவதை தடுத்து வருகின்றனர் ஒக்கலிக சாதியினர்.

2001ல் தாயம்மா, தனது மகளின் திருமணத்தை நடத்திக்கொள்ள சமுதாயக்கூடத்தைத் தருமாறு அணுகிய போது முதலில் வாடகைக்குத் தர ஒப்புக் கொண்டு, பிறகு சாவியைக் கொடுக்க மறுத்தவிட்டனர். வேறு வழியின்றி பல்வேறு சிரமங்களுக்கிடையில் தனது வீட்டு வாசலிலேயே தனது மகள் திருமணத்தை நடத்தியுள்ளார் தாயம்மா.

அதே போல ஆதிக்கச்சாதியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றின் போது சமுதாயக்கூடத்திற்குள் சிறுவன் ஒருவன் நுழைந்துவிட்டதாகக் கூறி அவன் தலித் என்ற ஒரே காரணத்திற்காக அங்கிருந்து அடித்துவிரட்டப்பட்டுள்ளான்.

தலித்துகள் தங்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வேறு இடம் எதுவும் கிடையாது என்பதாலும், சமுதாயக்கூடம் அரசின் நிதியில் கட்டப்பட்டது என்பதாலும் சமுதாயக்கூடத்தில் நுழைவதற்கு தலித்துகளுக்கு முழு உரிமை வேண்டும் என்கிறார் பத்மம்மா என்கிற தலித் பெண்.

கோவிலுக்குள்ளும் சமுதாயக்கூடத்திற்குள்ளும் தலித்துகள் நுழைவதை தடுப்பது சட்ட விரோதம் எனவும், விவரங்கள் கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடக்கப்படும் எனவும்  மாவட்ட சமூக நல அலுவலர் N.R.புருஷோத்தம் அறிவித்திருந்தாலும் அக்கோவிலில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை நிறுத்தப்படுமா என்பது ஐயத்திற்குரியதே! அம்பேத்கர் மொழியில் சொல்வதானால்---
சில சமயம் சட்டத்தைவிட மக்கள் (ஆதிக்கச் சாதியினர்) கருத்து வலிமை பெற்றிருக்கிறது; சட்டத்தின் கடுமையைக் குறைப்பதுடன் அதை வலுவிழக்கச் செய்கிறது. --- சில சமயங்களில் பொதுமக்கள் (ஆதிக்கச் சாதியினர்) கருத்து பலம் பெற்று சட்ட வழிமுறைகளை ஒதுக்கித் தள்ளி அவற்றை செயலற்றதாகவும் ஆக்கிவிடுகிறது.
சட்டப்படி தீண்டப்படாதவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆளுமை சமூகத்தால் மறுக்கப்படுகிறது.
ஏனெனில் இந்துச் சமூகம் தீண்டப்படாதவனை அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தீர்மானகரமாக இருக்கிறது.

தலித்துகளுக்கு உள்ளதாகச் சொல்லப்டும் சட்ட உரிமைகள் அனைத்தும் ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகி விடுகிறது என்பதே யதார்த்தம்.

(செய்தி ஆதாரம்: THE HINDU: 07.09.2015)

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்:

எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!