Monday, November 18, 2019

பீயா? பீதாம்பரமா?


ஆபாச பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்தான் என திருமா பேசியதற்கு பார்ப்பனர்கள் மட்டுமல்ல வன்னியர் உள்ளிட்ட சில சூத்திரச்சாதி வெறியர்களும் இந்துமதக் காவலர்களாக பிதற்றித் திரிகின்றனர். திருமா பேசியது நூற்றுக்கு நூறு உண்மை.. இது குறித்து முகநூலில் எனது எதிர் வினையாக நான் எழுதியதைத் தொகுத்து உங்களுக்காக.

"வார் கொண்ட வனமுலையாள்"
கச்சணிந்த வனநகில்களையுடைய- திருவாரூர்.

"அளைப்பிரி யாஅரவு அல்கு லாளொடு"-
வலையினின்றும் நீங்காத பாம்பின் படம் போன்ற அல்குலைப் பெற்ற-திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) –

சிவனின் மனைவி உமையாளைத்தான் தேவாரத்தில் இப்படி வர்ணிக்கிறான் சுந்தரன். இப்படி நிறைய உண்டு. அல்குல்=பெண் குறி. கண் என்றும் இடை என்றும் கதைப்போரும் உண்டு. இவை இரண்டும் பாம்பின் படம் போன்று இல்லை என்பது பாமரனுக்கும் விளங்கும்.

அடி அம்மாடி என்ன ஒடம்பு! அங்கங்கே பச்ச நரம்பு!- வைரமுத்துவின் இந்த வரிகளே நமக்கு அருவருப்பைத் தருகிறது. "பஞ்சுண்டஅல் குல்பனை மென்முலையா ளொடு" (திருப்பரங்குன்றம்) - பாம்பின் படம் போலும் அல்குலையும், பருத்த மென்மையான தனங்கைளையும் உடைய - சிவனின் மனைவி உமையாளைத்தான் தேவாரத்தில் இப்படி வர்ணிக்கிறான் சுந்தரன்.

தேவாரம் பாடிய சுந்தரனுக்கு இரண்டு பொண்டாட்டி. திருவாரூரில் பரவையார் என்கிற முதல் பொண்டாட்டி. திருவொற்றியூர் சென்ற போது சங்கிலியார் என்கிற இரண்டாவது பொண்டாட்டி. இரண்டாவது பொண்டாட்டிக்குத் தூது பார்த்தவன் சிவன். இன்பங்களை ஆரத் துய்த்து சங்கிலியாரை அங்கேயே விட்டுவிட்டு பல ஊர் சுற்றி பிறகு திருவாரூர் வருகிறான். விவரம் அறிந்த பரவையார் சுந்தரனை சேர்க்க மறுக்கிறாள். காமத் தீ மூண்டெழுந்ததால் சிவன் இரண்டு முறை தூது சென்று சேர்த்து வைக்கிறான். (திருவாரூர், திருவொற்றியூர், திருப்புன்கூர் பாடல்களில் விவரம் காண்க).

"அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின்அரைதனில் உடை தனை அவிழ்த்தும்"... அருமை வாய்ந்தவிலைமாதர்களின் மலர் போன்ற அடிகளைப் பிடித்தும்,(அவர்களுடைய) எண்ணத்தை அறிந்த பின்பு இடுப்பில் கட்டியஆடையை அவிழ்த்தும்,

"அங்கு உள அரசிலை தடவியும் இரு தோள் உற்றுஅணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டைமென்று பல் இடு குறிகளும் இட" ... அங்குள்ள அரசிலை போன்றஉறுப்பைத் தடவியும், அவர்களுடைய இரண்டு தோள்களிலும் பொருந்திஅணைத்தும், அங்கையின் அடிப்பாகம் தோறும் நகக் குறிகள் இட்டும்,இதழ்களை மென்று பற்களால் பல குறிகள் பதித்தும்,

"அடிக் களம் தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டுஉருக்கும் அங்கியின் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும்அநுபவம் உறு பலம் உற" ... அடி நெஞ்சில் மயில் குயில் புறா ஆகியஇப் பறவைகள் போன்று பெரிய ஒலி எழச் செய்தும், உருக்க வல்லநெருப்பிலிட்ட மெழுகு போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால்
வருகின்ற பயன்களைப் பெற,

"கையின் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து உருக்கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியின் முழுகிமெய் உணர்வு அற உழைத்திடும் கன கலவியை மகிழ்வதுதவிர்வேனோ" ... கையில் உள்ள பழம் போல் விளங்கிய தனங்களின் மீதுவிழுந்து உருவம் கலங்கி உடல் உருகி, அமுதம் பெருகும் பெருத்த உந்தித்தடத்தில் முழுகி, மெய் உணர்வு அற்றுப் போகும் வண்ணம் உழைக்கின்றபெருத்த கலவி இன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளுவதை விட்டு ஒழியேனோ? திருப்புகழ் பாடல் -7. வாய் மணக்குதா?

"நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்தஅகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திடஅமுது இதழ் பருகியும்" - திருப்புகழ் பாடல் - 10 ... மணம் தோய்ந்த பஞ்சணையின் மேல்மனம் பொருந்த அணைத்த மார்பில் அவர்களது இரு மார்பகங்களைஎதிர்பொர, நகக் குறி அழுந்த, இதழ் அமுதைப் பருகியும்,.... திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்!

பீயை, பீ என்றுதானே சொல்ல வேண்டும். பீதாம்பரம் என்கின்றனர் சிலர். என்ன செய்ய?