சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உருவாக்கி அதன் மூலம் இன்றுவரை வயிறு வளர்ப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம்.
ஆகப் பெரும்பான்மையான மக்கள் நம்பி வாழும் வேளாண்மையை, ஈனத்தொழில் என்று ஒதுக்கி வைத்துவிட்டு, வேதம் ஓதுவதை மட்டுமே தங்களுக்கானத் தொழிலாகத் தீர்மானித்துக் கொண்டனர் பார்ப்பனர்கள். வேதம் ஓதுவதால் மட்டுமே பெரிய அளவில் வருவாய் கிடைக்காது என்பதனால், புரோகிதம் மற்றும் ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை தமதாக்கிக் கொண்டனர்.
பிறப்பு-திருமணம் என மகிழ்ச்சிக்கான சடங்குகள், பிறகு தந்தை-இறுதியில் மரணம், தெய்வங்களுக்குப் படையல், அதைத் தொடர்ந்து நீண்டகால துக்கம் என வாழ்க்கை நெடுகிலும், ஒரு தீய நுண்ணறிவாளனைப் போன்று புரோகிதன், மனிதனை நிழல் போலத் தொடர்வதால், அவன் எங்கும் நீக்கமற
நிறைந்திருக்கிறான்.
சாஸ்திரங்களை மீறுதல் பயங்கரமான தண்டனைக்குரியதாக மக்களை நம்ப வைத்திருக்கிறான். 99% மக்கள் இதற்குப் பலியாகி உள்ளனர். காண முடியாத சக்திக்கும், திக்கற்ற மனிதனுக்கும் இடையில் ஒரு சாத்தானைப் போல, புல்லுருவியாக, தரகனாக
இருந்து கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டுகிறான்.
மூடநம்பிக்கைகளுக்கு
ஆதரவாக புரோகிதன் இருப்பதால், மகிச்சிகரமான திருமணமானாலும், துக்ககரமான மரணமானாலும் இரண்டு சம்பவங்களையும் புரோகிதன் சமநோக்கில்தான் பார்க்கிறான்.
ஆதரவாக புரோகிதன் இருப்பதால், மகிச்சிகரமான திருமணமானாலும், துக்ககரமான மரணமானாலும் இரண்டு சம்பவங்களையும் புரோகிதன் சமநோக்கில்தான் பார்க்கிறான்.
புரோகிதம்
நாகரிகத்திற்கு ஒரு முட்டுக்கட்டை; எனவே, புரோகிதத்தைக் கட்டுப்படுத்தி, அதன் வளர்ச்சியை
தடுக்க வேண்டிய அதே வேளையில், புரோகிதத் தொழிலை
ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டி உள்ளது என்பதையும்
அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். புரோகிதத்தில் தீமைகளே மலிந்து கிடப்பதால் அதை உடனடியாக ஒழித்துக்
கட்ட வேண்டும்; ஒத்தி போடக்கூடாது" என்கிறார்.
"ஒரு அலுமினிய டம்ளர் கூட வாங்க முடியாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒரு ஆண் இறந்த
பிறகு, இறப்புச் சடங்குகளைச் செய்வதற்கு, ஒரு வெள்ளிக் கிண்ணம் வேண்டும் என்று புரோகிதன்
வலியுறுத்துகிறான்; ஒரு மனிதன் செத்த பிறகும்
செலவு வைக்கும் இந்த இழிந்த புரோகிதத் தொழிலை துடைத்தெறிய வேண்டும்; அதற்கான வீரமிக்கப்
பணியில் அறிவாளிகளும், படித்த இந்துக்களும், முகமதியர்களும், கிருத்தவர்களும்
ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைக்கிறார் அம்பேத்கர்.
(தொகுப்பு நூல்: தொகுதி-36).
என்றோ ஒழித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டிய புரோகிதத் தொழில், மேலும் மேலும் பலமடைந்தே வருகிறது. துன்ப துயரங்கள் நிறைந்த இச்சமூகக் கட்டமைப்புதான் இதற்குக் காரணம் என்றாலும், நாம் அதை உணர்வதற்கே ஜோதிடமும் புரோகிதத் தொழிலும் தடையாக இருப்பதால் இவற்றை தடை செய்வதைத்தவிர வேறுவழி ஏதுமில்லை.
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
.jpeg)
3 comments:
உண்மையே! அலுமினிய டம்ளர் கூட வாங்க இயலாத ஏழையிடம் இறப்புச் சடங்குக்காக வெள்ளி கிண்ணம் கேட்பது என (மூடநம்பிக்கை ஆயுதமாக பயன்படுத்தி) படுகேவலமாக நடந்து கொள்ள பார்ப்பனர்களுக்கு எவ்வளவு மன தைரியம்.நம்பிக்கைகள் என்ற பெயரில் அனைத்து ஏமாற்று வேலைகளும் தொடர்கிறது.நன்றி.
நன்றி
மூட நம்பிக்கைகளை இன்னும் பலர் நம்புவதற்கு காரணமாக இருப்பது அதில் ஏதோவொரு வகையில் தீர்வு கிடைக்கும் அதன்மூலம் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று வழிவழியாக நம் மூதாதையர்கள் மூலமாக நமது ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவு இவ்வளவு வேகமாக வளர்ந்து கொண்டு வந்தும் மக்களின் நம்பிக்கைகள் தொடர்வதால் புரோகிதம்,சோதிடம்,பில்லி-சூனியம், பிறப்பு, வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளுக்கும் சோதிடம்,வாஸ்து சாஸ்திரம் என தொடர்ந்து இறப்பிற்குப் பின்னர் வருடாவருட திதி என தொடர்ச்சியாகவே உள்ளது.பள்ளிக்கல்வியிலேயே டாக்டர் சி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளை ஆங்காங்கே தூவ வேண்டும்.மதசார்பற்ற அரசு என்று சொல்லிக் கொண்டே சோதிடனை ராஜகுருவாக அரசு பொறுப்பில் அமர்த்துவது என்ன மாதிரியான ரகமோ!நல்லவேளை தேமுதிக பிரேமலதா விசிக வன்னி அரசு இருவரின் எதிர்ப்பு அந்த நிலையை மாற்றியது-ராஜகுரு பதவி ரத்தில் முடிந்தது கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது.
Post a Comment