Showing posts with label மோடி இராணுவம் air force modi oxygen siachin. Show all posts
Showing posts with label மோடி இராணுவம் air force modi oxygen siachin. Show all posts

Thursday, 21 August 2025

மோடியும் முக்கால்னா பிரச்சனையும்!

"இந்தப் படத்தில் மோடிக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் பூனாவை சேர்ந்த யோகேஷ் சித்தார்த்தாவும் அவரது மனைவி சுமீதா சித்தார்த்தாவும். அவர்களைப் பாராட்டுவதற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தாராம் மோடி. மோடியே தனது வீட்டிற்கு அழைக்கிற அளவுக்கு அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்?


யோகேஷ் சித்தார்த்தா ஓய்வு பெற்ற இந்திய வான்படை அதிகாரியாம். அவர் பணியாற்றிய காலத்தில் சியாச்சின் மலைப்பகுதியில் நமது இராணுவ வீரர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதியுற்றார்களாம்.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக  யோகேஷ் சித்தார்த்தா யோசித்தாராம். தனது மொத்த சேமிப்பு பணத்தையும் வைத்திருந்த எல்லா நகைகளையும் தனது சொந்த வீட்டையும் விற்று ரூபா 1.25 கோடி செலவில் சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை அமைத்தாராம். 

இதன் விளைவாக சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் 20 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்களாம். 

பிரச்சனைகளைப் பேசுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிலர்தான் பிரச்சனைகளை தீர்க்கிறார்கள். அரிய இந்தச் சேவையை செய்த சித்தார்த்தாவும் சுமீதா சித்தார்த்தாவும் அமைதியாக இருக்கிறார்களாம். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுமாம்.
 
சல்யூட் டு யூ சார்!"

இப்படி ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. 
மூளையை மொத்தமாகக் கழட்டி வைத்துவிட்டுப் பார்த்தால் இது ஏதோ மிகப்பெரிய தியாகம் அர்ப்பணிப்பு போலத் தோன்றும். 

ஆனால் யு.கே.ஜி அளவுக்கு யோசித்துப் பாருங்கள்,  

"சல்யூட் அடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது பற்றி யோகேஷ் சித்தார்த்தாவுக்குத் தெரிந்தது, நாட்டை ஆளும் மோடிக்குத் தெரியாமல் போனது எப்படி? இலட்சம் கோடிகளை விழுங்கும் இராணுவத்தால் தனது வீரர்களைக் காக்க ஒரு ஒன்னேகால் கோடி ரூபாயை இதற்கு ஒதுக்க முடியாதா?"

இந்த முக்கால்னா பிரச்சினையைத் தீர்க்க வக்கற்ற மோடி, அவ்விருவரையும் அழைத்துப் பாராட்டுவது அவருக்கே வெட்கமாகத் தெரியவில்லையா?"
என்றுதானே கேட்கத் தோன்றும்!

ஊரான்