Wednesday, June 28, 2023

நெஞ்சைப் பிளக்கிறதே!

ஜூன் மாதத்திலும்...
கடல் போல் காட்சியளிக்கும் ஏரி,
புது மண்ணின் அரவணைப்பில்
புதுப் பொலிவு பெற்ற ஏரிக்கரை,
தென்மேற்கிலிருந்து வீசும் மெல்லிய பூங்காற்று, 
கண்ணைக் குளிர வைக்கும் எழில்மிகு மலைத் தொடர், 
கடலின் பேரலையில் தள்ளாடிக் தவழும் பெருங் கப்பலைப் போல...
காற்றலையால் எழும் ஏரி நீரின் மெல்லலையில் 
தள்ளாடிக் தவழும் நீர்ப்பறவைகள்,
இதழ் விரித்து மலர்ந்திருக்கும் அல்லி மலர்கள்,
பெருமீன்கள் நீரின் ஆழத்தில் ஓய்வெடுக்க, 
சிறு குஞ்சுகளோ மேலெழுந்து நீந்திக் களிக்க,
காலை நேர வேளையிலே...இவை மனதை வருடினாலும்
கரையின் இருமருங்கிலும் சரிந்து 
குவிந்து கிடக்கும் 
சாராய பாட்டிகள்...
நெஞ்சைப் பிளக்கிறதே!

தமிழ்மணி

குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், மட்டவெட்டு, அத்திமூரான் கொட்டாய் ஏரிக்கரை.















No comments:

Post a Comment