Thursday, June 19, 2025

சாகட்டும்! அந்த ஒரு சிலரோடு முடியட்டும் சாராய சாக்காடு!

கள் இறக்குவதன் மூலமாகத்தான் பனை தொழில் பாதுகாக்கப்படுமா? கள் இறக்கினால் தமிழ்நாடு ஓஹோவென்று உயர்ந்து விடுமா? பனையில் இருந்து வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் சாத்தியமில்லையா? 

பனை வெல்லம், கருப்பட்டி, இதைத்தாண்டி வேறு என்ன வேண்டும்? நொங்கு, பனங்கிழங்குகூட காசுதானே? சும்மாவா கிடைக்கிறது? பனம்பழம் அதன் கூழை ஏன் 'மார்க்கெட்டிங்' செய்யக்கூடாது? 

தென்னை, பயன்பாடு சொல்ல வேண்டியதில்லை. அது தரும் எல்லாமே பயன்தான். பிறகெதற்கு கள்?

கள்ளுண்ட கோமாளி

கள் வேண்டும் என்றால் ஈச்சமரம்கூட வளர்க்கலாமே?  மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பதே இன்றைய தேவை.

கள்ளை எல்லோரும் குடிப்பதில்லை. குடிகாரர்கள் மட்டுமே பனை-தென்னை மரத்தடிகளில் தவம் கிடப்பார்கள். 
கள் ஒரு உணவு என்று பேசுபவன் மகா மடையன். கள் தேவை என்று கோருவது குடிகாரர்களின் கோரிக்கை.

எந்த ஒரு தொழிலிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள் உடல் நலனுக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. 

கள்ளில் ஆல்கஹால் அளவு குறைவு என்று பேசுபவர்களே? டாஸ்மாக் சரக்கில் ஆல்கஹாலின் அளவைக் குறைத்து விட்டால் அது போதைப்பொருள்  இல்லை என்று ஆகிவிடுமா? ஆல்கஹால் அது எந்த அளவில் இருந்தாலும் அதனால் போதை ஏறுகிறது என்றால் அதை ஆதரிப்பது மக்களுக்கு எதிரானதே!  மக்களுக்கு எதிரானதை ஆதரிப்பவர்கள் மக்கள் விரோதிகளே!

கள் இறக்கினால் ஒருசிலருக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கலாம்.
காசு பணம் கிடைக்கும் என்பதற்காகக் காமக்கிழத்தியாய் ஆக முடியுமா? 

ஒரு சிலருக்காக பலர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? பலருக்காக சிலர் விட்டுக் கொடுப்பதுதானே உலக நியதி!

சாராயம், கள்ளு, போதைப் பொருள்களை ஒட்டுமொத்தமாக, உடனடியாக ஒழிக்க முடியாது என்று சொல்வது கோழைத்தனத்தின் அல்லது இயலாமையின் அல்லது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு. 

சாராயத்த உடனடியாக நிறுத்திவிட்டால் அதிலிருந்து மீள முடியாமல் ஒரு சிலர் மாண்டு போகலாம் என்று உரைப்போரும் உண்டு. சாகட்டும்! அந்த ஒரு சிலரோடு முடியட்டும் சாராய சாக்காடு!

ஊரான்

1 comment:

  1. இல. சக்திவேல்Thursday, June 19, 2025 at 5:47:00 AM PDT

    மிகச் சரியான வாதங்களை எடுத்து வைக்கிறீர்கள் ; இவற்றை நாம் ஒரு அறிவிப்பாக ஏதாவது ஒரு பத்திரிகை மூலம் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட களவாணி தலைவர்களும் மக்களால் புறக்கணிக்க படுவார்கள். நன்றி

    ReplyDelete