மதுரை முருக பக்த மாநாட்டில் அண்ணாவை இழிவுபடுத்தியக் காணொளி; மேடையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்த அதிமுக தலைவர்கள். அண்ணாவை மட்டுமல்ல திராவிடத்தையும் சேர்த்தே சங்கிகள் இழிவுபடுத்துவது ஒன்றும் அதிசயமல்ல.
அண்ணா பெயரிலும், திராவிடம் பெயரிலும் கட்சி நடத்தும் அதிமுக-காரனுக்கு இதெல்லாம் உரைக்கவில்லையா என திமுக, கம்யூனிஸ்ட், சிறுத்தைகள் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
திமுக-விலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி கண்டதே சங்கிகளின், அதாவது பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில்தான் என்பதை மறந்துவிட்டு, ஏதோ, அண்ணாவையும் திராவிடத்தையும் தாங்கிப் பிடிப்பதற்காகவே அதிமுக இருப்பதாக எண்ணுவோர்களுக்குத்தான் மேற்கண்டவாறு கேள்விகள் எழும்.
பொதுவாக ஒரு கட்சியிலிருந்து ஒரு பிரிவினர் வெளியேறும் போது புதிதாக ஒரு பெயரில் செயல்படுவதைவிட, ஏற்கனவே பிரபலமாக உள்ள, தான் செயல்பட்டக் கட்சிப் பெயரோடு ஒரு முன்னொட்டையோ அல்லது பின்னொட்டையோ சேர்த்துக்கொண்டு செயல்படுவதன் மூலம் மக்களிடம் சுலபமாக பரிச்சயமாக முடியும் என்பதற்காகத்தான் 'அண்ணா' என்ற முன்னொட்டைக் கொண்டு அதிமுக என்று தனது கட்சிக்கு நாமகரணம் சுட்டிக் கொண்டார் எம்.ஜி.ஆர். மற்றபடி எம்.ஜி.ஆர் தொடங்கியக் கட்சிக்கு
கொள்கை அடிப்படையில் அண்ணாவுக்கும் திராவிடத்திற்கும் எந்தப் பிணைப்பும் கிடையாது.
எம்.ஜி.ஆருக்கோ அதன் பிறகான ஜெயலலிதாவுக்கோ திராவிடக் கருத்தியலில் எள்ளளவும் உடன்பாடில்லை என்றாலும், உடன்பாடு இருப்பது போலக் காட்டிக் கொண்டால்தான் அரசியல் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அண்ணாவின் வாரிசுகள் போல நாடகமாடிய ஒரு நாடகக் கம்பெனிதான் அதிமுக.
ஆனால், இவை எல்லாம் தெரிந்தும், தங்களின் சுய நலனுக்காக 'சமூகநீதி காத்த வீராங்கணை' என ஜெயலலிதாவுக்கு 'ஆசிரியரே' அரிதாரம் பூசியதால் அம்மையாரும், 'அண்ணா நாமம் வாழ்க' என வசனம் பேசி 'அம்மா'வாய் அவதாரம் எடுக்க முடிந்தது.
தாங்கள் சொல்வதை மட்டும் கேட்டு பிழைப்புக்காக மண்டியிடும் எடுபிடிகளை இருவரும் திட்டமிட்டே வளர்த்தனர். அத்தகைய எடுபிடிகளின் எச்சங்கள்தான் இன்று அதிமுக-வில் எஞ்சி இருப்பவர்கள். அதன் உச்சபச்சம்தான் 'திராவிடம் என்றால் அது புராணம் படித்தவர்களுக்குத்தான் தெரியும்' என்கிற எடப்பாடியின் உளறல். அவர்களிடம் போய் அண்ணாவையும் திராவிடத்தையும் எதிர்பார்ப்பது நரகலில் நல்லரிசி தேடுவதாகும்.
அன்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டார்கள் என்றால், இன்று சங்கிகளின் கட்டளைகளுக்கு அதிமுக எடுபிடிகள் அடிபணிகிறார்கள்.
எந்தக் கொள்கைப் பின்னணியும் இல்லாத, பிழைப்புவாத அதிமுக என்கிற பார்ப்பன அடிமைக் கூட்டம் முற்றிலுமாக அழிவதே இன்றைய உடனடி தேவை. முருக பக்த மாநாடு இதற்கு வித்திட்டது என்ற மகிழ்ச்சி அடைவோம். துரோகிகளைவிட எதிரிகளை எதிர்கொள்வது எளிதுதானே?
ஊரான்
No comments:
Post a Comment