சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ? (13)”
“நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர், (14)”
சிவவாக்கியர்
“சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் (18)”
“கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குலங்களும்
மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. (34)”
“செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே! (35)”
தராவிலும், அதாவது மரத்தால் செய்யப்பட்ட சிலைகளிலும்..
“பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்,
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே! (36)”
“இருக்குநாலு வேதமும் எழுத்தை அறஓதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே! (37)”
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறெதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும உம்முளே! (39)
பணத்தி என்பது பார்ப்பனப் பெண்களைக் குறிக்கும்.
"ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே! (41)"
"சாதியாவது ஏதடா சலம்திரண்ட நீரெல்லாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம் ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி, காரை, கம்பி, பண்டகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ? (46)
"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா! உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே (47)"
மறுபிறப்பு இல்லை என்கிறார்.
இப்படி சங்கிகளை வரிசை கட்டி அடிக்கிறார் சிவவாக்கியர்.
அவரது அடி இன்னும் தொடரும்...
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
.jpeg)
No comments:
Post a Comment