Showing posts with label தர்ப்பணம். Show all posts
Showing posts with label தர்ப்பணம். Show all posts

Monday, 5 August 2024

ஆறும் நீரும் இல்லை என்றால் அவாளுக்குச் சோறு இல்லை!

ஆடியில்
கரைபுரளும் காவிரியால்
வீடுகளும் பயிர்களும் 
மூழ்கினால் என்ன?

வறண்ட பாலாற்றில்
ஆடிக் காற்றில்
மணற்துகள்கள்
பறந்தால் என்ன?

மேகவெடிப்புகளும்
பெருமழை 
நிலச்சரிவுகளும் 
நம் அன்பிற்கினிய 
உயிர்களைக் 
காவு கொண்டால் என்ன?

கடல் சீற்றம் 
கடற்கரைகளைக்
கபளீகரம் செய்தால் என்ன?

எங்கும் மரண ஓலம் 
நம் நெஞ்சைப் 
பிளந்தால் என்ன?

அவர்களுக்குத் தேவை
ஆறும் நீரும் மட்டுமே!

இந்து தமிழ் திசை, 05.08.2024

 
ராமேஸ்வரம், அம்மா மண்டபம், திருவையாறு

பாலாறு, வேலூர்

நமக்கோ
பிறப்பென்றால் மகழ்ச்சி
இறப்பென்றால் துக்கம்!
ஆனால்,
இரண்டையும் சமநோக்கில் பார்க்கும் கூட்டமொன்று,
 
முன்னோர்கள் என்றும்
படையல் என்றும்
திதி என்றும்
தர்ப்பணம் என்றும்
ஆற்றை நோக்கி 
நீரை நோக்கி
நம்மை
இழுத்துச் சென்றது!
 
இனி வரும் காலம்
நலமாய் இருக்கும்
என நம்பி
இருந்ததை எல்லாம்
எடுத்துச் சென்றாய் அங்கு!

அங்கே,
தர்ப்பப் புல்லில்
உனைக் கட்டிப் போட்டு
நீ எடுத்துச் சென்றதை 
சுருட்டிச் சென்றது
ஒரு கூட்டம்!
 
ஆறும் நீரும் 
இல்லை என்றால்
அவாளுக்குச் சோறு இல்லை!
இதை உணர்ந்ததால்
அவர்கள் வாழ்கிறார்கள்!
உணராத நீயோ 
ஒவ்வொரு ஆண்டும் 
ஆடிப்பெருக்கில்
ஓடுகிறாய்
ஆற்றை நோக்கி
நீரை நோக்கி!
 
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்