Showing posts with label meditation. Show all posts
Showing posts with label meditation. Show all posts

Monday, 9 September 2024

மொய்: காசைவிட எழுத்து வலிமையானது!

மொய் எழுதலாமா?

"மொய்" - அது திரும்ப அடைக்கப்பட வேண்டிய கடன். கடனை அடைக்கவில்லை என்றால் பிறகு பிணக்குதான்.

எனவே,

"மொய் எழுதாதீர்கள். 'எழுதியதை எழுதுங்கள்'. காசைவிட எழுத்து வலிமையானது".

கடந்த நாற்பது ஆண்டுகளாக, திருமணங்களில் எழுத்தைத் தவிர வேறெதையும் நான் எழுதியதில்லை. 
யாருக்கு தியானம் தேவை?

எங்கே தியானம் போதிக்கப்படுகிறதோ அங்கே சனாதனம் புகுத்தப்படுகிறது என்று பொருள். இப்பொழுது யோகாவையும் சனாதனம் உள் வாங்கிக் கொண்டது.

அறிவாளிகளுக்கு தியானம் தேவைப்படாது. உழைப்பாளிகளுக்கு யோகா தேவைப்படாது. இவை இரண்டும் யாருக்கானது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி.
***

ஞானம்: முட்டாள்களின் பிதற்றல்

ஞானம் என்றாலும், அறிவு என்றாலும் ஒன்றுதான். முன்னது சமஸ்கிருதம், பின்னது தமிழ். 

ஒரே பொருளைத் தரக்கூடிய சொற்களுக்கிடையில் வேற்றுமையைக் கற்பித்து மக்களை மயக்கும் மாயவித்தைக்கு ஒரு சிலர் மயங்கவும் செய்கின்றனர். 

அறிவு எனும் அழகு தமிழ் இருக்க ஞானம் எனும் சனாதன நச்சு எதற்கு? அறிவை விழுங்கு, ஞானத்தை துப்பு.
***

வினை தீர்ப்பவனா? வினை விதைப்பவனா?

விநாயகன் உள்ளிட்ட இந்து மதக் கடவுள்கள் அனைத்தும் பொதுமக்களின் ஆன்மிகத் தேவைக்காக உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக, பார்ப்பனர்களின் வருவாய்க்காக உருவாக்கப்பட்டவை. 

இது புரியாதவரை, புதிய புதிய கடவுள்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். பார்ப்பனர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டேதான் இருப்பார்கள். 
பொதுமக்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
***

விநாயகர் சதுர்த்திக் கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பதனால் சுற்றுச் சூழல் கெடாதா?

***
ஆன்மீகத்தால் யாருக்கு ஆதாயம்?

ஆன்மீகத்தால் அல்லல் தீரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சமூக நீதிதான் மக்களை உய்விக்கும் என்ற திராவிடக் கருத்தியலை தமிழர்கள் நம்புகிறார்கள். பொதுவுடமைதான் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வல்லது என்று கம்யூனிஸ்டுகள் நம்புகிறார்கள். 

இங்கே, யார் வேண்டுமானாலும், திராவிடக் கருத்தியலை கரிச்சுக் கொட்டலாம். கம்யூனிசத்தை வசை பாடலாம். ஆனால், ஆன்மீகத்தை மட்டும் எவரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாதாம். என்னங்கடா உங்க நியாயம்?

திராவிடக் கருத்துக்களால், கம்யூனிசக் கோட்பாடுகளால் பலன் அடைபவர்கள் பாமரர்கள். ஆனால், ஆன்மீகத்தால் பலன் அடைபவர்கள் பார்ப்பனர்கள் மட்டும்தானே? இது ஏன் உனக்கு உரைக்கவில்லை?

***
அவாள்களுக்கு 'ஆன்மீகம்' ஒரு 'வணிகப் பொருள்!' 
'ஆன்மீகம்' அருவமானது. அதற்காக நீ பணத்தை இழக்கிறாய். அவன் பணத்தை ஈட்டுகிறான்.

***
கடவுள் இருக்கிறது என்று நம்புகிற அனைவருமே மன நோயாளிகள்தான். மனநோயாளிகளின் நாடு எப்படி முன்னேறும்?

***
இந்த உலகில் யார் இருக்கலாம்?

இந்த உலகில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள் இருக்கலாம். இவர்கள் இந்த உலகின் நவீன கால சிற்பிகள்.

ஆனால், இந்த உலகில் புரோகிதர்கள், குருக்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் என்ற போர்வையில் ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கக் கூடாது. காரணம் இவர்கள் மனித குலத்தின் அழிவுச் சக்திகள்.

ஊரான்

குறிப்பு: கடந்த மூன்று நாள் முகநூல் பதிவுகள்

Friday, 31 May 2024

குமரிக் கொட்டம் முடிவுக்கு வருமா?

மாலைநேர மறைவிடமாய் தமிழ்நாடு

சிறு பிள்ளைகளுக்கு 'போரடிக்கும்' பள்ளிகளின் விடுமுறைக் காலம் இது. வெளியே போகலாம் என சிறுவர்கள் அடம்பிடிக்க, மாலை ஐந்து மணி வாக்கில் அருகில் உள்ள ஜலகாம்பாறைக்குப் பயணமானோம்.  

கேரளாவில் பருவமழை தொடங்கி விட்டது, அதன் தாக்கம் திருப்பத்தூர் வரை எட்டிவிட்டதால், தூரலில் குழந்தைகள் குதூகலிக்க வெளியே அழைத்து வந்தது வீண் போகவில்லை.

ஜலகாம்பாறை வரத்தின்றி வற்றியிருந்தது. அடர்ந்த காடுகளும் நெடிதுயர்ந்த மரங்களும் நம் கண்களைக் கவர்ந்தாலும் சற்றே அச்சமூட்டும் மெல் இரவு நேரம் அது. படிகளில் ஏறி உலாவலாம் என்றால், பாட்டில்களோடு சில இளைஞர்கள் நமக்கு முன்னே மரங்களின் பின்னே ஒதுங்கினர். தமிழ்நாடே இன்று மாலை நேர மறைவிடமாய் மாறியபின் ஜலகாம்பாறை மட்டும் விதிவிலக்கா என்ன?

காடுகளையும் மலைகளையும் வயல்களையும் தோப்புகளையும் எத்தனைமுறை கண்டாலும் புதியவற்றைக் காணும் பொழுது அவை நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.

குமரிக் கொட்டம் முடிவுக்கு வருமா?

நேற்று பெய்த மழையில் பூமித்தாய் நனைந்து குளிர்ந்து மலர்ந்திருந்ததால், தோட்டத்தில் சிறிது நேரம் களை எடுத்து,  பின் களைப்புக்கு சற்றே இளைப்பாரி மாலையில் தொடர் வண்டியில் வாலாஜா நோக்கிப் பயணமானேன்.

படுகளக் காட்சிபோல வலப்புறமாய் ஏலகிரி நீண்டிருக்க, கோடை மழையால் உழவு கண்ட புழுதி மண்ணின் வாசம் நாசிகளில் சங்கமிக்க, வலப்புறமும் இடப்புறமும் வரிசைகட்டி நிற்கும் தென்னைகள்  கேரளத்தை நினைவூட்ட,

சேலம்-அரக்கோணம் MEMU விரைவு வண்டியில் அறுபது ரூபாய்க்கு அலுப்பின்றி பயணமானேன். இதில் முப்பது ரூபாயை* ஆட்டயப் போட்டவன் குமரியிலே கொட்டமடிக்க, நானோ பயணத்தில் லயித்திருந்தேன்.

முடியாதவர்கள் காலை நீட்டிப் பயணிக்கவும், பதின்ம வயதினர் சன்னல் ஓர இருக்கைகளில் அரட்டை அடிக்கவும், முதுகு வலிப்போர் சற்றே எழுந்து நிற்க, நடமாடஇளைப்பாற, இருக்கைகள் ஏற்றதல்ல எனக் கருதும் உழைப்பாளிகள் தரையில அமர்ந்து இயல்பாய் பயணிக்க ஏற்ற வண்டி இது.

எளியோர்கள் பயணிக்கும் இந்த வண்டியின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்ச உணர்வோடு ஜூன் நான்கை** எதிர்நோக்கித் தூரலின் சாரல்களினூடே வாலாஜா ரோடில் இறங்கி, ஒரு தானி மூலம் இல்லம் சேர்ந்தேன்.

ஊரான்

* முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% பயணச் சலுகையை கரோனா காலத்தில் பறித்துக் கொண்டு மோடி கன்யாகுமரி வந்திருந்த போது எழுதப்பட்டது.

** ஜூன் 4 நடுவண் அரசின் வரவு செலவு தாக்கல்.

Monday, 16 October 2023

தியானம் - வேலையற்றவர்களின் வேலை!

தியானம் (meditation) நல்லதா?

ஹோமியோபதி கோட்பாட்டின்படி தியானம் (meditation) என்பது ஒரு நோய். desire to be alone, don't want to talk with others என்கிற குறிகள் கன்னபிஸ் இன்டிகா என்ற ஹோமியோ மருந்து நிரூபணத்தில் உறுதி செய்யப்பட்டவை. மேற்கண்ட குறிகள் இயல்புக்கு மாறானவை. இயல்புக்கு மாறானவைதான் நோய்க்குறிகள். 

குழப்பத்தில் (confusion) உள்ளவர்கள்தான் வழி தெரியாத போது தியானத்தை நாடுவார்கள். தெளிவாக இருப்பவர்களுக்குத் தியானம் தேவைப்படாது. தியானம் என்பது தற்காலிகமாக பிரச்சனையிலிருந்து ஒதுங்கி இருப்பது. தியானத்தில் இருக்கும்போது கூட அவன் மனதில் பிரச்சனைகள்தான் ஓடிக்கொண்டிருக்கும். தியானத்திலிருந்து வெளியே வந்த பிறகு குழப்பங்கள் தொடரவே செய்யும்.

பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண தெளிவுதான் (clarity) தேவை. தெளிவு பெற விவரங்கள் தேவை. அதற்கு வெளி உலக அனுபவங்களும்,  உரையாடல்களும், விவாதங்களுமே உதவும். இதற்கு தியானம் ஒரு போதும் உதவாது.

confusion is disease, clarity is health என சும்மாவா சொன்னார், கிரேக்க நாட்டு ஹோமிமியோபதியர் வித்தல் காஸ். 

தியானம் - வேலையற்றவர்களின் வேலை.

ஊரான்