Friday, April 27, 2018

இராமதாஸ் அப்பாவியாம்!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையிலான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று தி.மு.க, அ.தி.மு.க போன்ற அக்கட்சிகள் வலியுறுத்துவது நியாமில்லை” இது இராமதாசின் புலம்பல்.

அய்யா இராமதாஸ் அவர்களே!
‘ஆண்ட பரம்பரைகளான’ நீங்கள் எல்லாம் உங்கள் கிரீடங்களை கழட்டி வைத்துவிட்டு BC/MBC/OBC என மண்டியிட்டு கல்வி-வேலை வாயப்புகளை கெஞ்சிப் பெறலாம். இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வந்த உங்களைப் பார்த்து “கோட்டா“ என நாக்கை புடுங்கிற மாதிரி பார்ப்பனர்கள் கேள்வி கேட்டாலும் உங்களுக்கு தன்மான உணர்ச்சி வருவதில்லை. ஆனால் தீண்டத்தகாதவர்கள் உங்களைப் போன்றே இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வந்து உங்களுடன் சமமாக உட்கார்ந்தால் உங்களுக்கு குண்டி எறிகிறது. அதுவும் உங்களுக்கு மேலே அதிகாரம் செலுத்தும் அதிகாரியாக வந்துவிட்டால் உடம்பே எறிகிறது. உங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என ஒட்டு மொத்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ”தகுதி, திறமை” பேசி பார்ப்பன அவதாரம் எடுக்கிறீர்கள்.
நீங்கள் என்னதான் ஆண்ட பரம்பரை என அலப்பறை செய்தாலும், பார்ப்பனர்களின் வேதங்களையும் சட்டங்களையும் மதிக்காமல், பார்ப்பன புரோகிதர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் ஆட்சி செலுத்தியதால் உங்களது முன்னோர்களை சத்திரிய நிலையிலிருந்து சூத்திரர் நிலைக்கு தரவிறக்கம் செய்யப்பட்ட கதை உங்களுக்குத் தெரியுமா? (மனு 10-43 & 44). உங்களது முப்பாட்டன்களே சூத்திரர்களான பிறகு நீங்கள் மட்டும் எப்படி சத்திரியர்களாக முடியும் என்று என்றைக்காவது யோசித்ததுண்டா?
இன்றைய காலகட்டத்தில், அதாவது கலியுகத்தில் சத்திரியர்கள், வைசியர்கள் என்று யாரும் கிடையாது; கலியுகத்தில் பார்ப்பனர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டும்தான் உண்டு, சத்திரிய மறறும் வைசிய வருணங்கள் கிடையாது என பார்ப்பனர்கள் வகுத்து வைத்துள்ளதாவது தெரியுமா? பார்ப்பன அதிகாரத்திற்கு டெல்லியே மண்டியிடும் போது தைலாபுரம் மட்டும் தலை நிமிர்ந்து விடுமா என்ன? படையாச்சி, கவுண்டர், நாயகர், ரெட்டி என நீங்கள் ஊருக்கொரு அவதாரம் எடுத்தாலும் படிநிலைச் சாதி அமைப்பில் உங்களுக்கு மேலே உள்ள ‘உயர்’சாதியினர் உங்களை ‘பள்ளி’ப்பசங்க என ஏளனம் செய்கிறார்களே! அப்பொழுதுகூட உறைக்கவில்லையா நீங்கள் சத்திரியர்கள் இல்லை என்று. உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இழிவைப் போக்க உங்களுக்கு வக்கில்லை.
ஆனால் தீண்டத்தகாதவன் ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது. டூ வீலரில் போகக் கூடாது. காதலிக்கக் கூடாது. திருமண ஊர்வலத்தின் போது குதிரை மீது ஊர்வலம் போகக் கூடாது. சொந்தமாக குதிரை வளர்க்கக் கூடாது. பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்கக் கூடாது. தெரு வழியாக பிணத்தை எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலில் நுழையக் கூடாது என கொக்கறிப்பீர்கள். மீறினால் கௌசல்யாக்களையும் திவ்யாக்களையும் விதவையாக்குவீர்கள். இம்மாபாதகச் செயல்களைச் செய்வோர் உங்களுக்கு அப்பாவிகளா? 

பாவிகள் எல்லாம் அப்பாவிகளாக அவதாரம் எடுத்தால் அது கலியுகத்திற்கே அடுக்காது!

திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்கான வழக்குகளில்கூட அப்பாவி மக்கள் மீது பல்வேறு பொய்வழக்குகள் தொடுக்கப்பட்டுதான் வருகின்றன. அதற்காக அத்தகைய சட்டப் பிரிவுகளையே நீக்கக் கோருவீர்களா? 

காவல்துறையில் ஆகப் பொரும்பான்மையினர் தீண்டத்தக்க உயர் மற்றும் இடைநிலைச் சாதியினரே! அப்படியிருக்க வன்கொடுமை சட்டத்தின் கீழ் தீண்டத்தக்க உயர் மற்றும் இடைநிலைச் சாதியினரான தங்களது சாதியினர் மீதே இவர்கள் பொய் வழக்கு போடுகிறார்கள் எனக் கூறுவது உங்களுக்கே வேடிக்கையாகத் தெரியவில்லையா?

தீண்டாமை என்கிற மாபாதகச் செயலை தீண்டத்தக்க உயர் மற்றும் இடைநிலைச் சாதியினர் முற்றிலுமாக  கைவிட்டு விட்டால் வன்கோடுமைச் தடுப்புச் சட்டமே தேவைப்படாதே! பொய்வழக்கு புலம்பல்களுக்கு இது ஒன்றுதான் மருந்து என்பது மருத்துவராகிய உங்களுக்கு தெரியாத ஒன்றா என்ன?

தொடர்புடைய பதிவுகள்.

தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்!


7 comments:

  1. நன்றி ஐயா. பிற படைப்புகளையும் படித்து கருத்து கூறினால் எனது எழுத்துகளை மேலும் செம்மையாக்க முடியும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்களுக்கு எல்லாம் ஒரு மனநோய் போல, சமூக நீதி போராளி மருத்துவர் ஐயா வை இழிவு படுத்தி பேசினால் உங்களுக்கு போராளிகள் என்ற நினைப்பு.... பாவம்... மக்கள் பார்வையில் என்றுமே நீங்கள் கோமாளிகள் தான்....

    ReplyDelete
    Replies
    1. நான் இழிவு படுத்தியதாக நீங்கள் கருதும் கருத்து எதுவோ! கட்டுரை மீதான விமர்சனத்தை முன் வையுங்கள். அதை விடுத்து கோமாளிகள் - போராளிகள் - மன நோய் என அரற்றுவதன் மூலம் உண்மையை மறைத்துவிட முடியாது.

      Delete
  3. பெரும்பான்மை மக்கள் தன்னை உயர் சாதி என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள், அவர்களுக்கு பகுத்தறிவு ஒன்று தான் சிறந்த மருந்து என்பதை போல் உள்ளது உங்களின் பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பெரும்பான்மை மக்கள் தன்னை உயர் சாதி என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள், அவர்களுக்கு பகுத்தறிவு ஒன்று தான் சிறந்த மருந்து என்பதை போல் உள்ளது உங்களின் பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete