Sunday, July 23, 2023

புருவத்தை நெறி!

பாட்டாளிகளின் 
பாடுகளில் பங்கேற்காமல், 
தம் பேச்சாற்றல், 
எழுத்தாற்றல் திறமைகளை 
புகழுக்கும் பணத்திற்கும் 
விற்பனை செய்யும் 
விற்பன்னர்கள் நிறைந்த 
உலகமடா இது! 

நீயோ 
வாய் பிளந்து நிற்கின்றாய், 
இரசிக்கின்றாய்; 
சிரிக்கின்றாய்!
உன்,
கண நேர சிரிப்பே
அவர்களின் மூலதனம்!
பிறருக்காய் 
சிரித்தது போதும்
உன் 
வாழ்வின் மகிழ்ச்சிக்கு 
வழி காண 
புருவத்தை நெறி!

ஊரான்


No comments:

Post a Comment