Friday, 1 September 2017

நீட் தேர்வு: அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்!

ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதாவைக் கொன்று விட்டார்கள்.

நீட் தேர்வை கட்டாயமாக்கி அனிதாவை தற்கொலைக்குத் தூண்டிய பிரதமர் உள்ளிட்ட காவிக்கூட்டம் முழுவதும் கொலைக் குற்றவாளிகளே! 

இந்தக் காவிக் குற்றவாளிகளின் குற்றச் செயலுக்கு உதவி செய்த உச்சிக்குடுமி மன்றமும் குற்றவாளியே!

காவிகளின் காலை நக்கிக் கொண்டு குற்றச் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ், உயர் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் உள்ளிட்ட ஒட்டுண்ணிக் கூட்டத்தைச் சேர்ந்த அனைவரும் குற்றவாளிகளே! 

ஜெயலலிதா என்கிற ஒரு கிரிமினல் குற்றவாளியை கொஞ்சமும் கூச்சமின்றி செத்த பிறகும் 'இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா' என கூப்பாடு போடும் ஒரு கூட்டத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

பல லட்சக் கணக்கில் தொண்டர்களைக் கொண்ட - அதுவும் சமூக நீதிக்கு பேர் போன தமிழக அரசியல் கட்சிகள் நீட்டுக்குப் பாடை கட்டத் தவறியது நமக்கெல்லாம் தலைகுனிவில்லையா?

காவிக்கூட்டததையும், காவிகளின் அடிவருடிகளான 'அம்மா' கூட்டத்தையும் தமிழகத்திலிருந்து கருவறுக்காமல் அனிதாக்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு ஒரே வழி தமிழகம் மீண்டும் மெரினாவாகவேண்டும்.

Thursday, 31 August 2017

ஆண்மீகத்தின் வேர்களைத் தேடி...........

ஆண்மீகத்தின் வேர்களைத் தேடி...........

பஞ்சாப்பை பற்ற வைத்த குர்மீத் ராம் ரகீம்


ஆணுருப்பை இழந்த கேரளாவின் காகேசனந்தா 



ராம்பால்


 நாராயணி சக்தி அம்மா


ரஞ்சிதா புகழ் பிரேமானந்தா


சிறீ சிறீ ரவி சங்கர்


ஆசாராம் பாபு


பங்காரு


ராம் தேவ்

காட்டு வேட்டை ஜக்கி வாசுதேவ்


அமிர்தானந்த மயி


காஞ்சி சின்னவாள்


காஞ்சி நடுவாள்


புட்டபர்த்தி சாய்பாபா



திருச்சி பிரோமானந்தா


 ஆயுத பேரப் புகழ் சந்திராசாமி


மேலே உள்ளவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்தான். ஆசிரமம் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் அட்டூழியங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. கார்பரேட் ஆண்மீகமும் கருப்புப் பணமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். 


வேதாத்திரி மகரிஷி


காஞ்சிப் பெரியவாள்


ரமண மகரிஷி


சீரடி சாய்பாபா 


 சுவாமி விவேகானந்தன்


 ராமகிருஷ்ண பரமஹம்சன்


ராமானுஜன்


இவர்களின் மூலதனம்  ஆண்மீகம் மட்டுமே. ஆண்மீகத்தின் பெயரால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இன்றைய கார்பரேட் சாமியார்களே சாட்சி. இவர்கள் தவிர உள்ளூர் அளவில் எண்ணிலடங்கா சாமியார்களும் வலம் வருகிறார்கள். கிருத்துவ மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆண்மீகத்தின் தோற்றுவாய் மதம். மதம் இருக்கும் வரை ஆண்மீகம் இருக்கும். ஆண்மீகம் இருக்கும் வரை ராம் ரகீம்கள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள். 

Sunday, 19 June 2016

அவுத்து வுடறதுக்கு அளவே இல்லையா?

"தமிழ், சமஸ்கிருதம் இவ்விரு மொழிகளும் சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்தவையாகும்." - இது இல.க மலர்ந்த முத்து.

மொழிய பத்தின இவங்க காமெடி தாங்க முடியல!

இவங்க சிலாகிக்கும் சமஸ்கிருதத்தின் இன்றைய நிலை அறிய......கல்யாணம் முதல் கருமாதி வரை விடாது துரத்தும் சமஸ்கிருதம்!

Saturday, 26 March 2016

“பாரத் மாதா கீ ஜே!” சொல்லலாமா? கூடாதா?

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் ‘பாரத் மாதா கீ ஜே!’ எனச் சொல்ல மறுத்ததற்காக ஆல் இண்டியா மஜ்லிஸ்-ஏ-இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான் என்னும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

‘பாரத் மாதா கீ ஜே!’யில்தான் தேசப்பற்று இருக்கிறதாம். ‘பாரத் மாதா கீ ஜே’ என ஒருவன் சொல்லிவிட்டால் அவன் தேசப்பற்று உள்ளவனாம். சொல்லாதவனெல்லாம் தேசத்துரோகியாம். அதனாலே, `இந்தியாவில், ‘பாரத் மாதா கீ ஜே’ என்று சொல்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம்’’ என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொல்கிறார்.

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் தற்போது "நாங்கள் ஜெய் ஹிந்த் அல்லது பாரத் மாதா கீ ஜே!” என்ற கோஷத்தை எழுப்புவோம்' என்று கூறத் தொடங்கிவிட்டார்களாம். அதனாலே தேசியம் குறித்த விவாதத்தில் பாஜகவுக்கு சித்தாந்த ரீதியிலான வெற்றி கிடைத்துவிட்டதாம். இப்படி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவிக்கிறார்.

ஆனால் தேசியம் குறித்தும் ‘பாரத் மாதா கீ ஜே!’ குறித்தும் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

“இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மதித்து நடப்பதும், இந்திய நாட்டிற்காக உழைப்பதும், நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதும்தான் தேசப்பற்று” என்கிறார் ஒரு தொழில் முனைவோர்.

“ஒருவன் தான் அணிந்திருக்கும் டி-சட்டையில் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என எனக் குத்திக் கொள்வதில் இல்லை தேசப்பற்று. மாறாக சாதி-மத-இன வேறுபாடுகளை மறந்து இந்தியர்கள் அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதிலும், ஊழல் மற்றும் மதவாதத்திற்கு எதிராக குரல்கொடுப்பதிலும் இருக்கிறது தேசப்பற்று” என்கிறார்  ஒரு டாஸ்மாக் ஊழியர்.

“கடல்தான் எனக்கு சோறு போடுகிறது; உடை தருகிறது; எனது குழந்தைகளுக்கு படிப்புத் தருகிறது. எனது குடும்பத்தையே வழி நடத்துகிறது; எனவே கடல்தான் எனக்குத் தாய். கடல் தாய்க்குப் பிறகுதான் ‘பாரத மாதா’, சாமிகள், கோவில்கள் இன்ன பிற.,இன்ன பிறவெல்லாம். என்னைப் பொருத்தவரை கடல்தான் தேசத்தைவிடப் பெரியது” என்கிறார் ஒரு மீனவர்.

“தெருக்களையும், கழிவறைகளையும் சுத்தம் செய்யும் ஒரு துப்புறவுத் தொழிலாளிக்கு, தன்மானத்திற்காகப் போராடும் ஒரு தலித்துக்கு, ”‘பாரத் மாதா கீ ஜே!’” என்பது பொருளற்ற ஒன்று. பல நூற்றாண்டுகளாக ஆதிக்கச் சாதியினரின் வன்கொடுமைகளுக்கு ஆட்பட்டுவரும் தலித்துகளுக்கு ‘பாரத் மாதா கீ ஜே!’ என்கிற முழக்கம் ஒரு இழிவான முழக்கமாகும். தலித்துகள் மீது அநீதியையும், தீண்டாமையையும் கடைபிடிக்கும் சாதி அமைப்பு முறை தொடர வேண்டும் என விரும்புகின்றவர்கள்தான் ‘பாரத மாதா’ பற்றி பேசுகின்றனர். என்னைப் பொருத்தவரை தேசப்பற்று என்பது இந்த நாட்டில் வாழ்பவர்களைப் பற்றி பேசுவதும், சமத்துவம், சமூக நீதி, சுதந்திரம் மற்றும் ஊழலற்ற தம்மை பற்றி பேசுவதுமாகும். இடை நீக்கம் செய்யப்பட்ட MLA வாரிஸ் பதான் மட்டுமல்ல நான்கூட ‘பாரத் மாதா கீ ஜே!’ சொல்ல மாட்டேன் என்கிறார் ஒரு துப்புறவுத் தொழிலாளி.


செய்தி ஆதாரம்: THE HINDU 27.03.2016. நன்றி!

Sunday, 28 February 2016

ரூ.8 கோடியை விழுங்கிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி!

மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியைச் சுற்றியுள்ள பருத்தி விவசாயிகள்  400 பேர் தாங்கள் உற்பத்தி செய்த 20 ஆயிரம் குவிண்டால் பருத்தியை 2014 ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணா ஆலையின் நிர்வாகி சுனில் பிரபாகர் தலாதுலேவுக்கு விற்பனை செய்துள்ளனர். அதற்கான தொகை ரூ.8 கோடியை சுனில் பிரபாகர் தலாதுலே இதுவரை விவசாயிகளுக்குத் தரவில்லை. சுனில் பிரபாகர் தலாதுலே மீது வார்தா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அந்த நபரும் கைது செய்யப்பட்டார். ஆனால் பணம் மட்டும் இதுவரை விவசாயிகளுக்குப் போய்ச் சேரவில்லை. 

இதில் சராசரியாக ஒரு விவசாயிக்குச் சேர வேண்டிய தொகை ரூ2 லட்சம். இது ஒரு குடும்பத்தின் ஓராண்டு உழைப்பு மட்டுமல்ல அவர்கள் வாங்கிய கடனும் இதில் அடங்கும்.

உழைப்பின் பலன் தங்களுக்கு கிட்டவில்லை; அதனை ஒருவன் அபகரித்துவிட்டால் அவர்கள் எப்படி வாழ முடியும்? இது குறித்து மாநில - மத்திய அமைச்சர்களிடம் முறையிட்டும் பலன் ஏதும் இல்லை. கடைசியில் நாகபுரியிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் முன்பு இந்த 400 விவசாயிகளும் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகளின் போராட்டக் குழுத் தலைரவர் ராம் நாராயண் பாடக் அறிவித்துள்ளார்.

ரூ.8 கோடியை அபகரித்தவன் அந்த ஆலையின் நிர்வாகி மட்டுமல்ல. அவன் ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி. அதனால்தான் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் முன்பு  போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

விவசாயிகளோடு விவசாயிகளாக இவர்களும் தற்கொலை செய்து கொள்ளாமல் சுனில் பிரபாகர் தலாதுலே ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகியாக இருந்த போதும்,  மகாராஷ்டிரா மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க ஆட்சிகள் நடந்தபோதும் சுனில் பிரபாகர் தலாதுலே வுக்கு எதிரான விவசாயிகளின் இந்தப் போராட்ட நடவடிக்கை பாராட்டக் கூடியது.

இப்பொழுது புரிகிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் விவசாயிகளின் தற்கொலைகள் ஏன் அதிகமாக நடக்கிறது என்று! ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகமும் அங்கேதானே இருக்கிறது!

ஆர்எஸ்எஸ் இருக்கும் வரை  சுனில் பிரபாகர் தலாதுலேக்கள் இருப்பார்கள்.  சுனில் பிரபாகர் தலாதுலேக்கள் இருக்கும் வரை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.

(செய்தி ஆதாரம்: தினமணி 28.02.2016)

தொடர்புடைய பதிவுகள்:

பிகார்: ‘பிலிக்கா பொலோனிக்கா’வை என்ன செய்ய?