Thursday, September 7, 2017

இந்து மதக் கொடுங்கோண்மை: கவுரி லங்கேஷ் படுகொலை!

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஜவார்கி அருகே சன்னூர் என்கிற குக்கிராமத்தில் தலித் ஒருவருக்குச் சொந்தமான ஒரு கிணற்றில் தலித்துகள் தண்ணீர் எடுக்கிறார்கள் என்பதற்காக அந்தக் கிணற்றில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து கிணற்று நீரை நஞ்சாக்கியிருக்கிறார்கள் இந்து மத கவுடா சாதி வெறியர்கள். 
இத்தகையை இந்து மதவெறிக் கொடுங்கோண்மைக்கு எதிராக துணிச்சலாக, ஒரு பெண்மணி, அதுவும் தன்னந்தனியாய் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த எழுத்தாளர் கவுரி லங்கேஷை கொடூரமாக - கோழைத்தனமாக படுகொலை செய்துள்ளது ஆர்.எஸ்.எஸின் இந்து மதவெறிக் கும்பல். 
கவுரி லங்கேஷ்
'கோழையே..!'
என்னிடம் தோட்டாக்கள்
என்னிடம் அழியா வார்த்தைகள்
எதற்கும் அஞ்ச மாட்டேன்.
நான் கவுரி லங்கேஷ்'
இதுதான் இந்து மதவெறிக் கோழைகளுக்கு அவர் விட்டுச் சென்ற வீரஞ்செறிந்த போர் முழக்கம்.
இந்து மதம் இருக்கின்றவரை சமூக ஏற்றத்தாழ்வுகளும் நீடிக்கவே செய்யும். ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் வரை கவுரி லங்கேஷ்க்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். ஏற்றத் தாழ்வுகள் ஒழிய வேண்டுமனால் இந்து மதத்தை அழித்தாக வேண்டும். இந்து மதத்தை அழிக்க கவுரி லங்கேஷ்களாய், நரேந்திர தபோல்கர்களாய், கோதவிந்த் பன்சாரேக்களாய், எம்.எம்.கல்புர்கிகளாய் உருவெடுப்போம்! 
பெரியாரும், அம்பேத்கரும் காட்டிய வழியில் பார்ப்பன பாசிச இந்து மதவெறிக் கும்பலுக்கு சவக்குழி தோண்ட அணியமாவோம்! 
தொடர்புடைய பதிவுகள்:
நேற்று நான் கல்புர்கி... இன்று நான் கவுரி லங்கேஷ்!

எதற்கும் அஞ்சாத என் தோழியை காவி பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துவிட்டேன்: கவுரி லங்கேஷின் நண்பர் வேதனை

கர்நாடகாவில் தலித் மக்களின் குடிநீர் கிணற்றில் விஷம் கலப்பு: 3 பேர் கைது

1 comment: