Wednesday, August 21, 2024

மறந்தும் மனிதர்களைப் பற்றி மட்டும் எழுதி விடாதே!

அருந்ததியர்களை இழிவாகப் பார்க்கும் பறையர்களைப் பற்றி எழுதினால் பறையர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

பறையர்களை இழிவாகப் பார்க்கும் வன்னியர்களைப் பற்றி எழுதினால் வன்னியர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

வன்னியர்களை இழிவாகப் பார்க்கும் முதலியார்கள்-வெள்ளாளர்களைப் பற்றி எழுதினால் முதலியார்கள்-வெள்ளாளர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

பள்ளர்களை இழிவாகப் பார்க்கும் முக்குலத்தோரைப் பற்றி எழுதினால் முக்குலத்தோர் கோபித்துக் கொள்கிறார்கள்.

முக்குலத்தோரை
இழிவாகப் பார்க்கும் நாய்க்கர்களைப் பற்றி எழுதினால் நாய்க்கர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

நாடார்களை இழிவாகப் பார்க்கும் பிள்ளைமார்கள் பற்றி எழுதினால் பிள்ளைமார்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

பிறர் எல்லோரையும் இழிவாகப் பார்க்கும் பார்ப்பனர்களைப் பற்றி எழுதினால் பார்ப்பனர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். 

ஏதோ ஒரு வகையில், 
சாதிய இழிவுகளைப் பற்றி 
யாரும் எழுதக்கூடாது என்பதே இவர்கள் அனைவரின் எண்ணமாக உள்ளது. 



எனவே, எழுது

மேகங்களை, மழைத்துளிகளை
நதிகளை, குளங்களை
நிலவை, கதிரவனை 
பகலை, காரிருளை
மலைகளை, பனித்துளிகளை
விதைகளை, தளிர்களை
செடி-கொடிகளை, மலர்களை, 
மரங்களை, காய்-கனிகளை 
 
மான்களை, மயில்களை
சிங்கம் புலி கரடிகளை 
ஆடுகளை, மாடுகளை 
நாய்களை, பன்றிகளை கோழிகளை, குருவிகளை
நாரைகளை, தேரைகளை

இவை, 
எவை பற்றியும் எழுது
எப்படி வேண்டுமானாலும் எழுது
எழுதிக் கொண்டே இரு
இவைகளுக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே?
ஆனால், மறந்தும்
மனிதர்களைப் பற்றி மட்டும் 
எழுதி விடாதே!
அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஆயிற்றே?

ஊரான்

No comments:

Post a Comment