Showing posts with label கிருமி. Show all posts
Showing posts with label கிருமி. Show all posts

Tuesday, 12 May 2020

அருளற்ற ஆட்சியாளர்கள்! தொடரும் துன்ப துயரங்கள்…..

நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படும் அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயு நிலையில் உள்ள சாம்பல் துகல்களை ஈர்த்து வெளியேற்றுவதற்காக எலக்ட்ரோ ஸ்டாடிக் பிரசிபிடேட்டர் (ESP) என்ற அமைப்பு செயல்படுகிறது. உயர் மின் அழுத்தத்தில் சாம்பல் துகல்கள் எதிர்மறை அயனிகளாக மாற்றப்பட்டு நேர்மறை தகடுகளில் ஈர்க்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இத்தகைய நிகழ்வுக்குப் பெயர் கரோனா விளைவு. (Corona effect). சாம்பல் துகல்கள் அயனிகளாக மாற்றப்படும் போது சூரியனைப் போன்று தீப்பிழம்பாய் காட்சியளிக்கும். இதில் ஒரு மனிதன் மாட்டிக் கொண்டால் சாம்பலாகத்தான் வெளியே வரமுடியும். மிகவும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய ஒரு தொழில் நுட்பம் இந்தக் கரோனா விளைவு.

இதற்குச் சற்றும் சளைத்ததல்ல இன்று உலகையே அச்சுறுத்தும் கரோனா நோய்க் கிருமி. கரோனாவைக் காரணம் காட்டி ஆட்சியாளர்கள் அறிவித்த ஊரடங்கால் மக்கள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது கருணையற்ற இந்த ஆட்சியாளர்கள் கரோனாவைவிடக் கொடியோர் அல்லவோ!

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (557)

“மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ; அத்தகையதே அரசின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்கும் துன்பமும் ஆகும்” என்கிறான் வள்ளுவன்.

துன்ப – துயரங்கள் காட்சிகளாய்…..































ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

கரோனா ஊழல் முறைகேடு! வாலாசாப்பேட்டையில் போராட்டம்!

கரோனா: நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

கரோனாவும் இஸ்லாமியர்களும்: பீலாவுக்கு ஆப்பு வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!