Showing posts with label புரோகிதர் அம்பேத்கர். Show all posts
Showing posts with label புரோகிதர் அம்பேத்கர். Show all posts

Wednesday, 24 July 2024

சடங்குகளில் வயிறு வளர்க்கும் புரோகிதர்கள்!

ஒரு மனிதன் இறந்த பிறகு உயிர் உடலை விட்டுப் பிரிந்தாலும் அவனது ஆத்மா ஆவியாக உலவிக்கோண்டுதான் இருக்குமாம். உயிரோடு இருந்த போது அவன் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்து அவனது ஆத்மாவை நரக லோகத்திற்கு அனுப்புவதா இல்லை சொர்க்க லோகத்திற்கு அனுப்புவதா என்பதை சித்திரகுப்தனை வைத்து தீர விசாரித்து எமதர்மன் தீர்ப்பு எழுதுவானாம்.‌

தீர்ப்பு எழுதிய பிறகு அந்த ஆத்மா சொர்க்கத்தை நோக்கியோ அல்லது நரகத்தை நோக்கியோ பயணிக்கும் போது பல்வேறு லோகங்களைக் கடந்து செல்ல வேண்டுமாம்.‌ அதற்குக் கால அவகாசம் பிடிக்குமாம். ஒரு மாதம் முடியும் போது ஆத்மாவிற்கு அகோரப்பசி எடுக்குமாம். பசியைப் போக்கிக் கொள்ள தனது வீட்டை நோக்கி திரும்பி ஓடிவருமாம். அப்பொழுது படையல் போட்டு சாப்பாடு தயாராக வைத்திருக்க வேண்டுமாம். அங்கே வரும் ஆத்மா சாப்பாட்டில் உள்ள சத்தை மட்டும் உறிஞ்சி வயிற்றை நிறப்பிக்கொண்டு மீண்டும் சொர்க்கத்தை நோக்கியோ அல்லது நரகத்தை நோக்கியோ பயணிக்குமாம்.ஒரு மாதம் கழித்து மீண்டும் வருமாம். மீண்டும் படையல், உணவை உறிஞ்சி வயிற்றை நிறப்புதல், மீண்டும் சொர்க்கத்தை நோக்கிய அல்லது நரகத்தை நோக்கியப் பயணம்….

இப்படியாக ஓர் ஆண்டு முடியும் போது பெரும் பசியோடு ஆத்மா வருமாம் அப்பொழுது பெரும் படையல் போட வேண்டுமாம்இப்படி மாதந்தோறும் ஆண்டு தோறும் ஆத்மாவின் பசியை ஆற்ற போடப்படும் படையலுக்குப் பேர்தான் நீத்தாருக்குக் கொடுக்கும் திதியாம்.

80 வயதில் ஒரு தந்தை இறக்கும் பொழுது அவருடைய மகனின் வயது ஒரு 50 என்று எடுத்துக் கொண்டாலும் அதன் பிறகு அந்த மகன் தனது இறுதிக் காலம் வரை கிட்டத்தட்ட 80 வயது வரை அதாவது 30 ஆண்டுகளுக்கு இறந்த தனது தந்தைக்குத் திதி கொடுக்க வேண்டும். தந்தை இறக்கும் வயதைப் பொருத்து இந்தக் காலம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். இப்படி திதி கொடுப்பது தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறதே ஒழிய அந்த ஆத்மாவானது சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைந்ததாகத் தெரியவில்லை‌. 

இப்படியாக ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் ஆத்மாவின் வயிற்றை நிறப்புகிறேன் என்ற பெயரில் புரோகிதப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றை நிறப்பிக் கொள்கிறார்கள்.

திதி கொடுக்கும் அவசியத்தைப் பற்றி விளக்கும் ஒரு புரோகிதப் பார்ப்பானின் வீடியோ ஒன்றை முகநூலில் பார்த்துவிட்டு கீழ்கண்ட கருத்தைப் பதிவு செய்தேன்.


ன்னென்ன கதை விடுறான் பாருங்க பொழப்புக்காக? அடேய்! திதி கொடுக்கிறது ஆத்மாவின் வயிற்றை நிறப்ப அல்ல; உன்னைப்போன்ற பார்ப்பானின் வயிற்றை நிறப்ப நடப்படுவதுதான் திதி. நல்லா உருவாக்கி இருக்கீங்கடா கதையை”.

இதில் என்ன தவறு இருக்கிறது? இதுதானே உண்மை. அதனால்தானே எனது இந்தக் கருத்தின் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.  
திதி கொடுக்கவில்லை என்றால் அதாவதுஆத்மாவிற்கு படையல் போடவில்லை என்றால் குடும்பத்திற்கு பெரும் கேடு விளையுமாம். இந்த அச்சம்தானே பார்ப்பானின் மூலதனம்.

தங்களது பிழைப்புக்காக திதி கொடுப்பது போன்ற எண்ணற்ற சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உருவாக்கி அதன் மூலம் இன்றுவரை வயிறு வளர்ப்பவர்கள் பார்ப்பனர்கள்தானே!

இது குறித்து அம்பேத்கர் அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அடுத்து பார்ப்போம்.
 
தொடரும்.
 
ஊரான்
 
தொடர்புடைய பதிவுகள்