கடந்த பத்து மாதங்களாக பத்திரிக்கை மற்றும்
தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை நாம் எதைப் பற்றி அதிமாகப் பேசிக்
கொண்டிருக்கிறோம்?
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பற்றிப்
பேசுகிறோமா?
நோக்கியா போன்ற ஆலைகள் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான
தொழிலாளர்கள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார்களே! அது பற்றி பேசுகிறோமா?
ஆலை விபத்துகளால் ஆன்றாடம் பலியாகும் தொழிலாளர்கள் பற்றி பேசுகிறோமா?
படித்த இளைஞர்கள் வேலை தேடி அலையும் அவலம்
பற்றி பேசுகிறோமா?
பெருகி வரும் கல்விக் கட்டணங்கள் பற்றி பேசுகிறோமா?
அதிகரித்து வரும் நோய்கள் பற்றியோ அதற்கான
மருத்துவச் வசதிகள் மற்றும் செலவு குறித்தோ பேசுகிறோமா?
ஒருபக்கம் கடும் வறட்சி! குடிநீருக்கே மக்கள்
அல்லல்படும் துயரமான சூழலில். காலிக் குடங்களுடன் ஆங்காங்கே தாய்மார்களின் போராட்டம்
நடக்கிறதே! அதைப்பற்றி பேசுகிறோமா?
பருவம் தவறி பெய்த மழையால் வடஇந்திய மாநிலங்களில்
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து பேசுகிறோமா?
பெரும் கடன் சுமையில் சிக்கி மீளமுடியாமல்
தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி பேசுகிறோமா?
பருவ காலத்தில்கூட மழை பொய்த்து விடுகிறது.
ஆனால் தமிழக வீதிகளில் எப்பொழுதும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் சாராயம் பற்றியோ, இந்தச்
சாராயத்தால் அன்றாடம் தாய்மார்களின் தாலி அறுக்கப்படுவது பற்றியோ பேசுகிறோமா?
வாழ்வாதாரத்திக்காகப் போராடும் மக்கள் மீது ஏவப்படும் காவல்துறையின் அடக்குமுறைகள் பற்றி பேசுகிறோமா?
இப்படி மக்கள் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகள் பற்றி பேசாமல்..........
கோட்சே பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்
பகவத் கீதையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்
சமஸ்கிருதம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்
மாட்டிறைச்சி பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்
.
கிருஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி
பேசிக்கொண்டிருக்கிறோம்.
மசூதிகள் ஆன்மீகத் தலங்கள் இல்லை என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்துப் பெண்கள்
குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
தாலி பற்றியும் பூணூல் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
மக்களின் நலன் புறம்தள்ளப்பட்டு பார்ப்பனர்களின் நலனை மட்டும் முன்னெடுக்கும் தற்போதைய இந்துத்துவவாதிகளின் ஆட்சி தொடருகிறவரை நாம் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்போம்!