Showing posts with label ஐயர். Show all posts
Showing posts with label ஐயர். Show all posts

Saturday, 10 August 2024

உள் ஒதுக்கீடும், 'தலித்' அரசியலும்!

பட்டியல் சாதிகளுக்குள்ளும், படி நிலை சாதி அமைப்பு முறையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. சேரி அமைப்பில், குடியிருப்புகளும் அந்தந்த சாதிக்கு ஏற்ப வேறு வேறாகத்தான் அமைந்துள்ளன. அவர்கள் தனித் தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கக் கூடியது. இந்துச் சாதிய சமூக அமைப்பில் ஒவ்வொரு சாதியும் மேலே உள்ள சாதியால் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்படுகின்றனர். 

சாதி இந்துக்களால், பட்டியல் சாதியினரே தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது ஒன்றுதான் இவர்களுக்கிடையிலான மிக முக்கியமான பொதுவான அம்சம். அதனால்தான் பட்டியல் சாதியினரை தீண்டத்தகாதவர்கள் (untouchables) என்றே அம்பேத்கர் தனது எழுத்துக்களில் பயன்படுத்தி உள்ளார்.

தீண்டத்தகாதவர்களுக்கிடையிலும் படி நிலை சாதி அமைப்பு முறையில் ஏற்றத் தாழ்வுகளும் பாகுபாடுகளும் நிலவுவதால், இவர்கள் அனைவரையும் தலித் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கி, இவர்கள் எல்லாம் ஒன்று போலக் காட்டுவது பொருத்தமற்றது என்பதே எனது புரிதல்.

இந்து மதம் இருக்கிற வரை சாதி இருக்கும். சாதி இருக்கிற வரை ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும் இருக்கும். 


முதலில் சாதிப்பற்றாகத் தொடங்கி, பிறகு அதுவே சாதி வெறியாக மாறி, தனது சாதிக்காரர்களுக்கு மட்டுமே சலுகை காட்டும் போக்கு அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருப்பதால்தான் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற சாதியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.

பட்டியல் சாதி உள் ஒதுக்கீடு குறித்த சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் சாதியினருக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குள்ளும் நாடு முழுவதும் ஒரு விவாதப் பொருளாக மாறி உள்ளது.

எனவே, இன்றைய சூழலில், இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரையில், OC, BC, OBC, MBC, SC, ST மற்றும் சிறுபான்மையினர் என வகைப்படுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொரு சாதிக்கும் அவரவர்களுக்கு உரிய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைக் கொடுத்து விடுவதுதான் இட ஒதுக்கீடு சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட முடியும். 

ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறப்பதனால் ஒருவருக்குத் தனிப்பட்ட திறமைகள் எதுவும் தானாக வந்து விடுவதில்லை. மாறாக, ஒருவர் பெறுகின்ற கல்வியும் பயிற்சியும் மட்டுமே அவரின் திறமையைத் தீர்மானிப்பதால், திறமை குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

எனது 40 ஆண்டுகால பெல் நிறுவன அலுவலக அனுபவத்தில், மக்கு ஐயர்களையும் பார்த்துள்ளேன், 
திறமைமிகு பட்டியல் சாதியினரையும் பார்த்துள்ளேன். இதுவரை கல்வி-வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், அவற்றைப் பெற்ற பிறகு, அவர்களின் வாரிசுகள், the so called பிற உயர் சாதியினரை முந்திச் செல்கின்றனர் என்பதையும் காண முடிகிறது. 

அனைவருக்கும் தாங்கள் விரும்பிய கல்வி கிடைப்பதற்கும், விரும்புகின்ற வேலையைப் பெறுவதற்குமான ஒரு சமூக கட்டமைப்பு உருவாகும் வரை, சாதி அடிப்படையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும்.

ஊரான்

Sunday, 9 June 2024

அறுபதாம் கல்யாணத்தின் சூட்சமம் தெரியுமா?

திருப்பத்தூர் மாவட்டம், ஒரு கிராமத்தில் பச்சையம்மன் கோவிலில் இன்று அம்மனுக்குக் கல்யாணமாம். எதற்காக அம்மனுக்குக் கல்யாணம் என்பதை விளக்கி புரோகிதர் ஒருவர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்

ஒரு நாள் இவரது திருமண புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தனது மகள் எங்கே ஒரு போட்டோவில்கூட என்னைக் காணோம், என்னை மட்டும் விட்டுவிட்டு நீங்க மட்டும் ஃபோட்டோ எடுத்தீர்களா?” என்று கடிந்து கொண்டாளாம்.  

பெற்றோர்களின் திருமணத்தை பிள்ளைகள் நேரில் பார்த்திருக்க முடியாதல்லவா? அதனால் தங்களது பெற்றோர்களுக்கு திருமணம் செய்து வைத்து அதை நேரில் பார்க்க வேண்டுமாம். அதற்காக ஐம்பது வயதில் ஒரு கல்யாணம்,  அறுபது வயதில் ஒரு கல்யாணம், எண்பது வயதில் ஒரு கல்யாணம் என பெற்றோர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தால் ஒரிஜினல் கல்யாணத்தை நேரில் பார்க்காத குறை நிவர்த்தி அடையுமாம். இப்படி பெற்றோர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதன் சூட்சுமத்தை அந்தப் புரோகிதர் விளக்கிக் கொண்டிருந்தார்.

 
புகைப்படம் எல்லாம் அறிமுகத்திற்கு வராத காலகட்டத்தில் என்னென்ன கதை அளந்தார்களோ?
இப்படிச் சொன்னால்தானே பெற்றோர்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைப்பார்கள். அறுபதாம் கல்யாணத்தை சும்மா செய்து வைத்துவிட முடியுமா? கல்யாணம் என்றாலே ஐயர் இல்லாமலா? எனவே அறுபதாம் கல்யாணத்திற்கு கண்டிப்பாக புரோகிதரை அழைக்க வேண்டும் என்பது கட்டாயமாகி விடுகிறதுல்லவா? இதில் அறுபதாம் கல்யாணம் மட்டும் விதிவிலக்கா என்ன?
 
அறுபது வயது வரை நல்லபடியாக குடும்ப வாழ்க்கையைக் கடந்ததற்காககத்தான்  அறுபதாம் கல்யாணம் என்று இதுவரை பலர் எண்ணிக் கொண்டிருப்பர்.
 
கல்யாணம் செய்துகொண்ட பிறகு இதுவரை அவர்கள் துன்பத்தையே சந்திக்காமல் இன்ப வாழ்க்கை வாழ்ந்து விட்டார்கள் என்று பொருளா? இல்லை இனி வரும் காலங்களில் அவர்களைத் துன்பம் அண்டாது என்று பொருளா? இன்ப துன்பங்கள் நிறைந்ததுதானே குடும்ப வாழ்க்கை. உழைப்பாளிகள் யாரும் அறுபதாம் கல்யாணம் செய்து கொள்வதாக எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் மட்டுமே அறுபதாம் கல்யாணம் நடப்பதாகத் தெரிகிறது. பசை உள்ள இடத்தில்தானே பக்குவமாய் கரக்க முடியும்.
 
இப்படிப்பட்ட கதைகளும் கல்யாணங்களும் தங்களது வரும்படிக்காக புரோகிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பது மட்டும் இதன் மூலம் தெளிவாகிறது.
 
நூற்றுக்கும் மேற்பட்ட இப்படியான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் இந்துக்களிடையே புகுத்தி, தங்கள் வருவாய்க்கு உத்திரவாதம் செய்து கொண்டனர் பார்ப்பனர்கள் என்று அம்பேத்கர் விரிவான பட்டியல் ஒன்றை தொகுத்திருக்கிறார்.
 
ஏமாளிகள் இருக்கும் வரை ஏய்க்கத் தெரிந்தவன் உன்னை ஏய்த்துக் கொண்டுதான் இருப்பான். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாறப் போகிறாயோ?
 
அறுபதாம் கல்யாணம் செய்து வைத்து ஐயருக்குப் படி அளந்தால் ஐயரைத்தான் நீ வாழ வைக்கிறாய். மாறாக ஆயுள் வரை பெற்றவர்களை கண்கலங்காமல் பார்த்துக் கொள். அதுவே உனது வாழ்க்கைக்குப் பெருமை சேர்க்கும்.
 
ஊரான்

Thursday, 13 June 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!..... தொடர்-3


மனை வாங்கி, பூமி பூஜை போட்டு, இடைக்கால மின் இணைப்புப் பெற்று, போர் போட்டு, கடைக்கால் எடுத்து, பிளிந்த் போட்டு, சுவர் எழுப்பி, லாப்ட் கட்டி, இங்கே லிண்டில் போட்டு, தளம் அமைத்து, மாடிப்படி அமைத்து, வாசக்கால் ஜன்னல் வைத்து, அவைகளுக்கு கதவுகள் போட்டு, கூடவே செப்டிக் டேங்க் கட்டி, சுற்றுச் சுவர் எழுப்பி, கேட் அமைத்து, ஒயரிங் வேலை முடித்து, தரைக்கு கிரானைட்டோ டைல்சோ போட்டு, பிறகு சுவர்களுக்குப் பட்டிப் பார்த்து, பிரைமர் அடித்து, மீண்டும் பட்டிப் பார்த்து, இறுதி வண்ணம் பூசி–கதவு ஜன்னல்களுக்கும் சேர்த்தே–மின் இணைப்பை நிரந்தரமாக்கினால் வீடு ரெடி. ஆனால் குடி போக முடியுமோ! கூடாது.

மனை வாங்கிய நாள் முதல் வீடு கட்டி முடிக்கப்படும் நாள் வரை இங்கே எத்தனையோ முன் பின் முகம் தெரியா தொழிலாளர்கள் வியர்வை சிந்தி இருப்பார்கள். அவர்களது உழைப்பை நீக்கி விட்டால் அங்கே எஞ்சி இருப்பது வெறும் மண் மட்டும்தான்.

அரையும் குறையுமாக, வெள்ளை அடிக்கும் போதே ஐயரைப் பார்த்து நாள் குறிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை என்றால் சொந்த பந்தம், சுற்றம் நட்பு புடை சூழ எல்லோரையும் அரவணைக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் புரோகிதனுக்கு என்றைக்கு சாத்தியமோ அந்த நாளே உமக்கு ஷேமமான நாள் என்பதால் நீரும் அதற்குத் தலையை ஆட்டி, அட்வான்சை தட்டிலே வைத்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும். முழுமையாக முடித்துவிட்டு கிரகப் பிரவேசம் செய்தால் பார்க்கிறவா கண்ணுட பட்டுடுமாம். ஆகவே குறையா இருக்கும் போதேதான் பிரவேசம் நடத்தனுமாம். குறைப் பிரசவத்தை ஜனங்களே ஏற்கும் போது நீர் ஏனய்யா இடையில் வம்புக்கு வருகிறீர்!

ஐயரைப் பார்த்தாச்சு. நாளும் குறிச்சாச்சு. பதட்டம் தொற்றிக் கொள்கிறது. வீட்டிற்காக உழைத்தவனை அழைக்கிறோமோ இல்லையோ சொந்த பந்தங்களில் ஒருவர்கூட விடுபட்டு விடக்கூடாது. நட்பில்கூட எதுவும் மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போட்ட மொய்யை குறைவில்லாமல் மீட்டெடுக்க வேண்டுமல்லவா?

ஐயர் கொடுத்தப் பட்டியலைக் கடைக்காரனிடம் நீட்டினால் ஒரு சிலவற்றை இல்லை என்கிறான். இருப்பதை வாங்கிக் கொண்டு மற்றவைகளையும் பிற கடைகளில் தேடிப் பிடித்து பேரம் பேசி சொஞ்சம் சில்லரைகளை மிச்சப்படுத்திய தெம்போடு திரும்புகிறான். ஐயருக்கு கட்ட வேண்டியதில் பேரம் பேசியிருந்தாலே சில நூறையாவது மிச்சப்படுத்தியிருக்கலாமே! அப்படி எல்லாம் யோசிக்கவே கூடாது. அதெல்லாம் தெய்வக் குத்தம்.

அன்றைய மாறுவேட போட்டிக்குத் தயாராக வேண்டும் என்பதால் வேட்டி ஒன்றையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டான். பேண்ட்டோடு பூஜை செய்தால் அண்டகாசுரன் பெண்டு எடுத்து விடுவானல்லவா?

மஞ்சள், கும்குமம், மாவிலை, பூசனி, எலுமிச்சை, அரிசி, அகத்திக் கீரை, தேங்காய், மாங்காய், புளி, லொட்டு, லொசுக்கு என பூஜைக்குத் தேவையான அனைத்தும் ரெடி. கன்றும் பசுவும் வேண்டுமே. எங்கே தேடுவது? எப்படி அவைகளை ஓட்டி வருவது? கவலையே வேண்டாம். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும். ஒரு தளமானாலும் அடுக்குமாடி குடியிருப்பானாலும் ஏற்றி இறக்க, சாணம் போட, கோமியம் பேய எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தமாய் ஒரு அமௌண்ட்டை கோமாதா அக்கவுண்ட்டில் சேர்த்துவிட்டால் போதும். அமௌண்ட் கொஞ்சம் அதிகம் என்றாலும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும். கோமாதா இல்லாமல் பூஜை போட்டால் அண்டகாசுரன் சும்மா விடுவானா?

தொடர்புடைய பதிவுகள்

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!......தொடர்-2
அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!


Wednesday, 5 August 2015

வாழ்ந்து வரும் கடந்த காலம்!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

“மனுவின் திட்டப்படி நால்வர்ணத்திற்கு உள்ளே உள்ளவர்கள், நால் வர்ணத்திற்கு வெளியெ உள்ளவர்கள் என இரண்டு முக்கியமான சமூகப் பிரிவுகள் உள்ளன.”

“பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் – இந்த நான்கு பிரிவினர்தான் நால்வர்ணத்திற்கு உள்ளே உள்ளவர்கள்.” 

பள்ளர், பறையர், சக்கிலியர் என அறியப்படுகிற இன்றைய தீண்டப்படாதவர்கள் நான்கு வர்ணத்திற்கு வெளியே உள்ளவர்களின் நகல்கள்தான்.

“சமுதாயச்சிந்தனையைவிட வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு. அது, வகுப்பினர்களிடையே சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டது. எனவே தனி நபர்களிடையே ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்டது.”

“தெளிவாகச் சொல்வதென்றால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாதவர்கள் ஆகிய வகுப்பினர்கள் எல்லோரும் சமநிலையில் அதாவது ஒரே மட்டத்தில் உள்ளவர்களாக இல்லை. அவர்கள் படி நிலையில் அதாவது ஒருவரைவிட ஒருவர் உயர்வான நிலையில் இரக்கிறார்கள். இந்தக் கூற்றை எந்த இந்துவும் மறுக்கமாட்டார். ஒவ்வொரு இந்துவுக்கும் இது நன்கு புரியும்”

பிராமணர் என்பது ஒரு சாதி அல்ல. ஐயர், வடகலை ஐயங்கார், தென்கலை ஐயங்கார் போன்ற பல்வேறு சாதிப்பிரிவினர்களை உள்ளடக்கியதே பிராமணர் என்பது. ஐயர், ஐயங்கார் உள்ளிட்ட சாதியினரிடையே ஏற்றத் தாழ்வுகள் /  கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வர்ணத்தில் ஒரே வர்ணமாக அதாவது பிராமண வர்ணமாக தங்களைக் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் தங்களை பிராமணர்கள் என அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்து சமூக அமைப்பில் மற்றபிற அனைத்து சாதியினருக்கும் மேலானவர்களாக நிலை நிறுத்திக் கொள்கின்றனர். அதனால்தான் ஒரு பிராமணன் மற்ற அனைத்து சாதியினரையும் தனக்கு கீழானவர்களாக கருதுகிறான்.

பார்ப்பனரல்லாத பிற உயர்சாதியினர் (OC), பிற்படுத்தப்பட்டோர் (BC or OBC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலுக்குள் அடங்கும் சாதியினர் தங்களை சத்திரியர்கள், வைசியர்கள் என கூறிக்கொண்டாலும் பிராமணர்களைப் போன்று இவர்கள் ஒரு வர்ணமாக அறியப்படுவதில்லை. யார் சத்திரியன், யார் வைசியன் என்பதில் இவர்களுக்கிடையில் பெரும் சச்சரவு நிலவுகிறது. சூத்திரர்கள் என்று எந்தச் சாதியனரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாததால் எந்தெந்தச் சாதிகள் சூத்திர வர்ணத்துக்குள் அடங்குவர் என்பது ஆய்வுக்குரியதாகவே உள்ளது. 

திராவிட நாட்டை ஆண்ட சத்திரியர்கள் அனைவருமே சூத்திரர்கள்தான் என மனுவே பிரகடனப்படுத்தியிருக்கிறான். (மனு:10:44). எனவே தென்னிந்தியாவைப் பொருத்தவரையில் சத்திரர்கள் என யாரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. கலியுகத்தில் சத்திரர்களே கிடையாது என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இது பற்றி வேறு ஒரு சமயத்தில் விரிவாகப் பார்ப்போம்.  

“மனுஸ்மிருதியில் மனுவால் விதிக்கப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வு நிலை, வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே உள்ள ஒரு நிகழ்வு என வாதிடக்கூடும். அது பழைய வரலாறு, மற்றும் இன்றைய இந்துக்களின் வாழ்க்ககை நடைமுறையில் அதற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் கூறலாம். இதைவிடப் பெருந்தவறு வேறு இருக்க முடியாது என நிச்சயமாகக் கருதுகிறேன். மனுநியதி என்பது ஒரு கடந்தகால நடைமுறையல்ல. தற்காலத்தின் இறந்தகாலத்தைவிட அது அதிக மெய்யானது. அது ‘வாழ்ந்து வரும் கடந்த காலம்’. எனவே எந்த நிகழ் காலத்தையும் போலவும் அது ஓர் உண்மையான நிகழ்கால விசயம்தான்.”

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

மனு நிர்ணயித்திருந்த ஏற்றத்தாழ்வுக் கோட்பாடு பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வருவதற்கு மன்பே இந்த நாட்டின் சட்டமாக இருந்தது பற்றி இனி பார்ப்போம்.


தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...

Sunday, 9 June 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... இறுதிப் பகுதி


பாடலில் பொருள் இல்லை என்றாலும் ஒரு சில பாடகர்களின் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும். அந்த அளவிற்கு அவர்களின் குரல் வளம் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். சிறந்த குரல் வளம் உள்ள பாடகர்களை பிறவிப் பாடகர்கள் என்று சொல்வதை நாம் கேள்விப்படத்தானே செய்கிறோம். அவ்வாறு சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. பயிற்சியின் மூலம் இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டாலும், குரல் வளம் சரியாக அமையவில்லை என்றால் ஒரு சிலரின் பாடல்கள் நம்மை ஈர்ப்பதில்லை. இசை நுணுக்கங்களை தெரிந்து கொள்ளாமல் சிறந்த குரல் வளத்தைக் கொண்டிருந்தாலும் ஒருவர் சிறந்த பாடகர் ஆகிவிட முடியாது. அதற்கு இசை நுணுக்கங்கள் குறித்த அறிவும், பயிற்சியும் தேவை. ஒரு சிலரின் குரல் வளம் சிறப்பாக இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பிறவியிலேயே அவர்களுக்கு அமைந்திருக்கும் குரல்வளை அதிர்வு நாளங்கள்தான் (vocal chord).

குரல்வளை அதிர்வு நாளங்கள் சரியாக அமையாததால்தான் ஒரு சில ஆண்கள் பெண்களைப் போன்ற குரல் அமைப்பையும், ஒரு சில பெண்கள் ஆண்களைப் போன்ற குரல் அமைப்பையும் கொண்டிருக்கின்றனர். பெண்களின் குரல் மெண்மையானதாகவும், ஆண்களின் குரல் தடிமனானதாகவும் நமக்கு பதிவாகிவிட்டதால்தான் மாறுபட்ட குரல் அமைப்பைக் கொண்டோரை நாம் பரிகாசத்தோடு பார்க்கிறோம். பெண்களின் குரல் அமைப்பு ஆண்களிடமும், ஆண்களின் குரல் அமைப்பு பெண்களிடமும் இருந்திருந்தால் அதையும் ஏற்றுக் கொண்டுதான் இருப்போம்.

இப்படி பிறப்பால் தீர்மானிக்கப்படுகின்ற பல்வேறு அம்சங்களை உடல் கட்டமைவு சார்ந்த கூறுகளாகக் கொள்ளலாம். இவைகள் சாதி – மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவாக அமைகின்ற அம்சங்களாகும்.

சாதி - மதம் சார்ந்த அடையாளங்களும் பண்புகளும்

ஒரு மனிதன் தனது வளர்ச்சிப் போக்கில் சாதி – மதம் உள்ளிட்டு தான் சந்திக்கின்ற பல்வேறு விசயங்கள் குறித்து, பல்வேறு விதமான பண்புக் கூறுகளை தனதாக்கிக் கொள்கிறான். அதற்கேற்றவாறு சில புறத் தோற்ற அடையாளங்களையும் ஒருவன் ஏற்படுத்திக் கொள்கிறான்.

பூணூல், குடுமி, பஞ்சகச்சம், மடிசார் புடவை போற்ற அடையாளங்கள் ஐயர் – ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களின் அடையாளங்களாகவும்; இடப்புற சேலை மாராப்பு இடையர் குலப் பெண்களின் அடையாளமாகவும் இன்றளவும் நீடிக்கின்றன. இத்தகைய அடையாளங்கள் ஒருவன் தான் சார்ந்திருக்கின்ற சாதி மற்றும் மதத்தைப் பொருத்து மாறுபடுகின்றன. அவன் தன்னை இவ்வாறு அமையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்ளும் மனநிலையையும் வளர்த்துக் கொள்கிறான்.

இந்து மத ஆண்கள் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்துக் கொள்வதும் பெண்கள் பூவும், பொட்டும், தாலியுமாக இருப்பதும் இந்து மத அடையாளங்களாக தொடர்கின்றன. இதில் ஆண்கள் முன்ன – பின்ன இருந்தாலும் பெண்களின் அடையாளங்கள் அவசியம் என அன்றாடம் உணர்த்தப்படுகிறது. இவற்றை மீறுவது பெண்மைக்கு அழகல்ல என்கிற மனநிலைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

தான் பழகுகிற மனிதர்கள், படிக்கிற நூல்கள், பார்க்கிற சம்பவங்கள் மூலம் பெறக்கூடிய கருத்துக்களை சுயபரிசீலனை செய்வதன் மூலம் ஒரு சிலர் சாதி – மத வட்டத்திற்கு புறம்பான அல்லது நேர் எதிரான சில பண்புகளை வளர்த்துக் கொள்வதும் உண்டு. இத்தகையவர்களே பகுத்தறிவாளர்களாக - சீர்திருத்தவாதிகளாக அறியப்படுகிறார்கள். மற்றபடி ஆகப் பெரும்பான்மையினர் தாங்கள் சார்ந்திருக்கிற சாதி மற்றும் மத வட்டத்திற்கு ஏற்புடைய பண்புகளையே கொண்டிருக்கின்றனர்.

மனம் சார்ந்த தனி மனிதப் பண்புகள்

மேலும் ஒவ்வொருவனும் சுயேச்சையான சில தனி மனிதப் பண்புகளையும் கொண்டிருக்கிறான்.இவைதான் ஒருவனை மற்றவனிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன.

சாதி - மதம் சார்ந்த பண்புகளில் ஒன்றுபட்டிருக்கும் அதே வேளையில் தனிமனிதப் பண்புகளில் வேறுபட்டே காணப்படுகின்றனர்.

சமூகத்தில் நிலவும் அரசியல் – பொருளாதார – பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்பவும், ஈடுபடும் தொழிலுக்கு ஏற்பவும் ஒவ்வொரு தனிமனிதனும் சில தனி மனிதக் குணங்களை வளர்த்துக் கொள்கிறான்.

இது கோபக்காரர்கள் நிறைந்த உலகம். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு காட்டாமல் வாழ்வதென்பது அரிதாகிவிட்டது. இந்த வெறுப்பு தனி மனிதன் சார்ந்த வெறுப்பாகவோ அல்லது சாதிமதம்இனம்தேசம் சார்ந்த வெறுப்பாகவோ இருக்கிறது.

இருட்டில் இருக்கப் பயம், தனியாக இருக்கப் பயம், விலங்குகளைக் கண்டு பயம், பறவைகளைக் கண்டு பயம், மரணத்தைக் கண்டு பயம், நோயை நினைத்தால் பயம், தண்ணீரைப் பார்த்தால் பயம், வேலையைக் கண்டு பயம் என பலர் பயபீதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

எதிலும் நாட்டமின்றி வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவதும், சிடுசிடுப்பாக நடந்து கொள்வதும், எளிதில் சீற்றமடைவதும், முரட்டுத்தனமாய் இருப்பதும், பிறர் மீது பொறாமை கொள்வதுமாய் பலர் இருப்பதையும் நாம் காண்கிறோம்.

பக்திப் பரவசமாய் இருப்போரும், காமக் குரோதத்துடன் நடந்து கொள்வோரும் நம்மைச் சுற்றிதான் வாழ்கின்றனர்.

படு கஞ்சத்தனமும், சுயநலமும் நம்மைச் சுற்றிதான் உலவுகின்றன.

வாயடிப்போரும், பேசா மடந்தைகளும், நாணுவோரும், அழுமூஞ்சிகளும் நம் அக்கம் பக்கத்தில்தான் வாழ்கின்றனர்.

ஒருவன் தனது வாழ்க்கையின் போக்கில்தான் இத்தகைய மனம் சார்ந்த குணங்களை (mind symptoms) வளர்த்துக் கொள்கிறான்.

அதுபோலத்தான் காதல், வாடகை வீடு, கோவில் வழிபாடு, பொதுக்குழாய் – கிணற்று நீர் போன்றவற்றில் கடைபிடிக்கப்படும் சாதித் தீண்டாமை, உணவு – மொழித் தீண்டாமை, பூணூல் உள்ளிட்ட சாதி மத அடையாளங்களை அணிந்து கொள்வதிலும் தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதிலும் பெருமிதமடைதல், அடக்கி ஆள வேண்டும் என்கிற ஜனநாயகத்திற்கு எதிரான ஆதிக்க மனநிலை, இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் மீதான காழ்ப்புணர்ச்சி, ஜாதகம் – ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை, சடங்குகள் – சம்பிரதாயங்களை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான பார்ப்பனிய பண்புகளையும், குணங்களையும் ஒருவன் வளர்த்துக் கொள்கிறான்.

எனது பார்ப்பனத் தோழி ஐந்து வயதிலிலேயே மாமியானது இப்படித்தான்? அவள் முதல் வகுப்பைத் தாண்டும் போதே பார்ப்பனியத்தை கைப்பற்றிக் கொள்கிறாள். இப்படித்தான் ஒவ்வொரு சாதியைச் சார்ந்த மற்றும் மதத்தைச் சார்ந்த குழந்தைகளும் அந்தந்த சாதி, மதத்திற்கான குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். சாதிகளும், மதங்களும் நிறுவனங்களாய் அதாவது அமைப்புகளாய் இருப்பதனால் அத்தகைய அமைப்புகளுக்குள் ஒருவர் இருக்கும் வரை அதன் பண்புகளையும் குணங்களையும்தான் கொண்டிருக்க முடியும்.

எங்க லேங்வேஜ கிண்டல் பண்றீங்காளா? இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்?” என கோபத்தோடு எழுந்து சென்ற போதுஅடியேய்! எங்கள பார்க்க வருவீயாடி?” என எனது துணைவியார் கேட்ட போதுஎங்க மாமா வீட்டுக்கு எப்பவாவது வருவோம். அப்படி வரும்போது நேரம் கெடச்சா, ஆண்ட்டி! உங்கள மட்டும்தான் வந்து பார்ப்பேன். இந்த அங்க்கிள கண்டிப்பா பார்க்க மாட்டேன்என்று சொன்னவள் மீண்டும் வருவாள்; அவள் மடிசார் மாமியானது பற்றி புரிய வைக்க!

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...

முற்றும்.
நன்றி!
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்