Showing posts with label காஷ்மீர். Show all posts
Showing posts with label காஷ்மீர். Show all posts

Wednesday, 12 June 2019

வாசிப்பில் முனைப்பு காட்டும் இளைஞர்கள்!


இராணிப்பேட்டை, பெல் வாளகத்தில் செயல்படும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் 19-வது சந்திப்பு கடந்த 30.05.2019 அன்று நடை பெற்றது. 

தோழர் துரை.பாலகிருட்டிணன் நெறியாளுகை செய்தார். 

தோழர் செ.விநோதினி வரவேற்புரை நிகழ்த்தினார். இதுதான் அவருக்கு முதல் மேடை என்றாலும் வரும் காலம் இளைஞர்கள் கையில்தான் என்பதை குறிப்பால் உணர்த்தினார்.

தே.இலட்சுமணன் எழுதிய “பகுத்தறிவாளர் புத்தர்” என்கிற நூல் குறித்து தோழர் மு.தங்கவேல் உரையாற்றினார். சமத்துவத்தை போதித்த பௌத்தத்தை பார்ப்பனர்கள் எவ்வாறு வீழ்த்தினர் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மிக அழுத்தமாக தனது உரையில் வெளிப்படுத்தினார்.

கே.பாலகோபால் எழுதிய “கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்” என்கிற நூல் குறித்து தோழர் நா.பாலாஜி மிகச் சிறப்பாக உரையாற்றினார். காஷ்மீரின் வரலாறு, காஷ்மீர் குறித்த இந்திய பாகிஸ்தான் இரு அரசுகளின் நிலைப்பாடு, இதில் காஷ்மீர் மக்களின் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை முதன் முறையாக இருந்தாலும் மிகத் தெளிவாக இவர் முன்வைத்ததைப் பார்க்கும் போது இவர் இந்நூலை மிக ஆழமாக ஊன்றிப் படித்துள்ளார் என்பதைக் காண முடிந்தது.

வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் வே.இந்திரன் நன்றி கூறினார்.

இத்தகைய வாசிப்புகள் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், சமூகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவும் என்பதை அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் உணர்த்தி வருகிறது.

வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுகள்.

ஊரான்


 

துரை.பாலகிருட்டிணன்
 

 செ.விநோதினி

 
மு.தங்கவேல்

நா.பாலாஜி
 

 பார்வையாளர்கள்

 வே.இந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க முனைத்து மூக்குடைபட்ட ஆதிக்கக் கும்பல்!




 

Saturday, 11 April 2015

உலகம் சுற்றும் வாலிபனும் பண்டிட் தேசமும்!

·   பிரான்சிடமிருந்து 36 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்.

குடிநீருக்கே மக்கள் அல்லாடும் நிலையில் மக்கள் போராடினால் அவர்கள் மீது குண்டு போடவா இந்த போர் விமானங்கள்?

·10 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது.

பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் மீன்வளத்தைக் கொள்ளையடிக்க பச்சைக் கொடி.

·  மின்சாரத்தை மிச்சப்படுத்த பௌர்ணமி அன்று மின்விளக்குகளை அனைத்துவிட வேண்டும். பெட்ரோலை மிச்சப்படுத் மாதத்தில் ஒரு நாள் சைக்கிள் ஓட்ட வேண்டும்.

நாங்கள் மிச்சப்படுத்தினால்தானே நீங்கள் உலகம் சுற்றும் வாலிபனாய் 317 கோடி ரூபாயில் உல்லாசமாய் உலா வர முடியும்!

·         நிலம் கையகச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நிலமில்லாத 30 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கேட்கிறவன் கேனையன் என்றால் கேப்பையில்கூட நெய் வடியத்தானே செய்யும்!

·  ஏழை மக்களுக்கு வீட்டு வசதிகளை வழங்கும் “இந்திரா ஆவாஸ் யோஜனா” திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி 54 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைத்துள்ளது - பீகார் அரசு குற்றச்சாட்டு.

சுவடே இல்லாமல் காங்கிரசின் அடையாளங்களைத் துடைக்கும் வேலைகளில் இதுவும் ஒன்றோ!

·    கான்வென்ட் பள்ளிகள் இந்து மதக்கலாச்சாரத்தை பயிற்றுவிப்பதில்லை; ஆகையால் அந்தப் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை பெற்றோர் அனுப்பக் கூடாது. – கோவா அமைச்சர்.

 கான்வென்ட்டுக்கு அனுப்பாதே! மாடு மேய்க்க காட்டுக்கு அனுப்பு! அப்பதான் கோமிய உற்பத்தி அதிகரிக்கும்! குடிக்க, கொப்பளிக்க, கக்கூஸ் கழுவ என சகல தேவைகளுக்குமான கோமிய உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் இந்து கலாச்சாரம் தழைத்தோங்க வழி வகை செய்ய முடியும்!

·     தமிழ் மொழியின் மூலம்தான் இறைவனைப் புரிந்து கொள்ள முடியும். தமிழ் இல்லை என்றால் இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது. நம்ப மட்டுமே முடியும். – பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி.

தமிழே கூடாது என சிதம்பரம் உள்ளிட்ட கார்பரேட் கோவில்களில் உங்க ஆளு போர்க் கொடி உயர்த்துகிறானே! அங்கே சென்றால் கடவுளை உணர முடியாது என ஒப்புக் கொள்ளலாமா?

·         பா.ஜ.க ஆட்சியில் குஜராத்தில் மதக் கலவரங்கள் குறைந்தள்ளன.

கலவரக்காரன் குஜராத்திலிருந்து வெளியெறிய பிறகு மதக் கலவரங்கள் குறையத்தானே செய்யும்!

·         அம்பானிக்கும் சாமான்யனுக்கும் ஒரே அணுகுமுறை.

அடடா! இதுவல்லவோ சமதர்ம சமுதாயம். கம்யூனிஸ்டுகளெல்லாம் கட்சியை கலைத்து விட்டு காவியில் கரைந்துவிடலாம் போலிருக்கே!

·         காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனிக் குடியிருப்பு.

சப்தமில்லாமல் இந்துக்களை (=பார்ப்பனர்கள்) மட்டுமே கொண்ட பண்டிட் தேசம் உதயமாகிறதோ!

·   கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த தொடக்கக் கல்வி - யுனெஸ்கோ பாராட்டு.

கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டை குட்டிச்சுவராக்கியது காங்கிரசு என கூப்பாடு போட்டு விட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று வெட்கமில்லாமல் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கான ஆய்வறிக்கையை வாங்கும் போது பல்லிளிக்கிறார்களே! 

·   சுப்பிரமணியன் சுவாமி "விராட் ஹிந்துஸ்தான் சங்கம்' என்னும் புதிய ஹிந்துத்துவ அமைப்பை, தொடங்கினார்.இந்த அமைப்பானது அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட ஹிந்துத்துவக் கொள்கைகளை, இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பாடுபடும்.

நாட்டில் இனி கலவரங்களுக்கு பஞ்சமிருக்காது