Showing posts with label EWS. Show all posts
Showing posts with label EWS. Show all posts

Friday, 20 March 2026

EWS இடஒதுக்கீடு: SC, ST, OBC ஏழைகளுக்கு ஏன் இல்லை?

இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்ட ஒரு உரிமையாக இருந்து வந்தது. ஆனால், 'பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்' - “Economically Weaker Sections” (EWS) - என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட 10% இடஒதுக்கீடு, அந்த அடிப்படைத் தத்துவத்தையே மாற்றியமைத்துவிட்டது.

SC, ST, OBC என்கிற சமூகப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீட்டு கொள்கைக்கு நடுவில், “பொருளாதார பலவீனம்” என்ற புதிய அளவுகோலைக் கொண்டு வந்து உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், நடைமுறையில் முற்பட்ட வகுப்பினருக்கான (OC) ஒரு பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது.

இது வெறும் அரசியல் வாதம் அல்ல; புள்ளிவிவரங்களே இதை வெளிப்படையாகச் சொல்லுகின்றன.

அதிர்ச்சியூட்டும் கட்-ஆஃப் தரவுகள் (2026)

சமீபத்தில் வெளியான அரசு நிறுவன ஆட்சேர்ப்பு (Artisan Recruitment) முடிவுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. 120 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் வெளியான கட்-ஆஃப் மதிப்பெண்கள்:



BHEL,

• BAP Ranipet – Welder:
EWS கட்-ஆஃப் – 48.75
SC – 57.75
OBC – 55.50

• HPBP Trichy – Fitter:
EWS – 55.75
SC – 68.75
OBC – 73.25

இந்தத் தரவுகள் எதைக் காட்டுகின்றன?

EWS பிரிவில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் அதிக மதிப்பெண் பெற்ற SC, ST, OBC இளைஞர்கள் கடுமையான போட்டியில் வாய்ப்பை இழக்கிறார்கள்.

நேற்றுவரை “தகுதி” மற்றும் “திறமை” பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள், இன்று குறைந்த மதிப்பெண்களுடன் வாய்ப்புகளைப் பெறும் இந்த நிலைமை, அந்த வாதங்களையே கேள்விக்குறியாக்குகிறது.

சட்டச் சிக்கல்: சாதியைத் துறந்தாலும் விடுபட முடியாத கட்டமைப்பு

இங்கே ஒரு சிக்கலான கேள்வி எழுகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஒரு SC/ST/OBC இளைஞர், தனது சாதி அடையாளத்தைத் துறந்து ‘சாதியற்றவர்’ (No Caste) சான்றிதழ் பெற்றால் EWS இடஒதுக்கீட்டைப் பெற முடியுமா?

சட்டப்பூர்வமாக “இல்லை” என்பதே இதற்கான பதில்.

103-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, ஏற்கனவே SC, ST, OBC இடஒதுக்கீட்டிற்குள் வரும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் EWS பிரிவுக்குத் தகுதியற்றவர்கள். ஒருவரிடம் “சாதியற்றவர்” என்ற சான்றிதழ் இருந்தாலும், அரசின் பார்வையில் அவரது பிறப்பு சார்ந்த சமூக அடையாளமே இடஒதுக்கீட்டுத் தகுதியை நிர்ணயிக்கும்.

இதனால், சாதியைத் துறக்க விரும்பும் ஒருவருக்குக்கூட அந்த சமூகப் பெட்டியிலிருந்து வெளியே வர சட்டம் அனுமதிக்கவில்லை.

நாம் எழுப்ப வேண்டிய அடிப்படை கேள்விகள்

இந்தச் சூழ்நிலை சில முக்கியமான முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது.

1. பொருளாதார அளவுகோல் என்றால் அனைவருக்கும் ஏன் இல்லை?

EWS என்பது பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்றால், அதில் ஏன் சமூக அடையாள அடிப்படையில் விலக்கு இருக்க வேண்டும்?

2. ஏழை என்றால் ஏழைதானே?

₹8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் ஒரு SC/ST/OBC இளைஞன் ஏழை இல்லையா?

3. தகுதி என்ற வாதம் எங்கே போனது?

குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வெளியே தள்ளப்படுவது எந்த “தகுதி”க் கொள்கையை பிரதிபலிக்கிறது?

4. சாதி ஒழிப்பு எங்கே?

ஒருவர் சாதியையும் மதத்தையும் துறக்க முன்வந்தாலும் சட்டம் அவரை மீண்டும் அதே சாதிப் பெட்டிக்குள் அடைத்து வைப்பது, சாதி ஒழிப்பின் பாதையில் ஒரு பெரிய முரண்பாடு அல்லவா?

முடிவுரை

இன்றைய சட்ட அமைப்பில் SC, ST, OBC சமூகங்களைச் சேர்ந்தவர்கள் EWS பிரிவுக்குள் நுழைவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால் இந்த நிலைமை ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், அது அனைத்துச் சமூகங்களிலும் உள்ள ஏழைகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது “பொருளாதார நீதியின்” பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அநீதியாகவே மாறிவிடும்.

ஒரு காலத்தில் மண்டல் கமிஷனை எதிர்த்து நாடு முழுவதும் தீவிரமான அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன. இன்று EWS இடஒதுக்கீட்டின் முரண்பாடுகளை எதிர்த்து அறிவார்ந்த விவாதங்களும் அரசியல் எதிர்ப்புகளும் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது.

சமூகநீதி என்பது வெறும் கோரிக்கை மட்டுமல்ல; அது நடைமுறையில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.

ஊரான்

Monday, 16 December 2024

வகுப்புவாரியிலிருந்து சாதிவாரியை நோக்கி.. - 13

வகுப்புவாரியிலிருந்து சாதிவாரியை நோக்கி.. 

இந்தத் தொடரின் முதல் பகுதியில் குறிப்பிட்டதைப் போல, 

தமிழ் நாட்டில், அருந்ததியருக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான பள்ளர், பறையர் சாதி மக்களின் கோபம், 

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து (MBC) வன்னியர்களுக்கு என தனி உள் ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிரான மிகவும் பிற்படுத்தப்பட்ட பிற சாதி மக்களின் கோபம், 

மத்திய அரசுப் பணிகளில் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு வழங்கப்பட்ட தனி EWS ஒதுக்கீட்டுக்கு எதிரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் கோபம், 

மேலும்,

கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பஞ்சமசாலி லிங்காயத்துகள் தங்களுக்குத் தனி ஒடுக்கீடு கோரி, 

மகாராஷ்டிராவில் மராத்தாக்களுக்குத் தனி ஒதுக்கீடு கோரி,

ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஜாட்டுகளுக்குத் தனி ஒதுக்கீடு கோரி,

என நாடெங்கிலும் ஒவ்வொரு சாதியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 


தற்போது இந்தியாவில் உள்ள எல்லாச் சாதியினரும், வகுப்புவாரி அடிப்படையிலும், EWS  அடிப்படையிலும் இட ஒதுக்கீடு 
பெற்று வரும் சூழலில், எதற்காகத் தற்போது ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு எனத் தனி ஒதுக்கீடு கேட்டுப் போராடுகின்றனர்?

ஏற்கனவே நாம் குறிப்பிட்டதைப் போல கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமுதாய அளவிலும் சாதிகளுக்கிடையில் சமனற்ற நிலையே இன்றும் நீடிக்கிறது. 

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் (MBC) உள்ள  கள்ளர், மறவர், வன்னியர் போன்ற சாதிகளோடு ஒப்பிடும் பொழுது நாவிதர், வண்ணார், குறவர், ஒட்டர் போன்ற சாதிகளின் கல்வி பொருளாதார சமூகநிலையும் சமமானதல்ல. இவர்கள் அனைவரையும் ஒரே தொகுப்பில் வைத்திருப்பதால், இந்தத் தொகுப்பிலேயே உள்ள மிகவும் கீழ்நிலையில் உள்ள நாவிதர், வண்ணார், குறவர், ஒட்டர் போன்ற சாதிகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். 

அதேபோல, மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) உள்ள கொங்கு வெள்ளாளர், நாயுடு, ரெட்டி, முதலியார், வன்னியர், கள்ளர், மறவர் போன்றச் சாதிகளின் கல்வி பொருளாதார சமூக நிலையும் சமமானதல்ல. கொங்கு வெள்ளாளர், முதலியார் ஆகியச் சாதிகளோடு ஒப்பிடும் போது வன்னியர்களுக்கான வாய்ப்பும்; நாயுடு, ரெட்டி போன்றச் சாதிகளோடு ஒப்பிடும் பொழுது கள்ளர், மறவர் சாதிகளுக்கான வாய்ப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும்.

பட்டியல் சாதி வகுப்பில் உள்ள பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகிய மூன்று சாதிகளும் கல்வி பொருளாதார சமூக நிலையில் சமமாக இல்லை. விகிதாச்சார அடிப்படையில் தங்களுக்கு உரிய பங்கைப் பட்டியல் வகுப்பிலிருந்து 
அருந்ததியர்களால் பெற முடிவில்லை. ஆகையால்தான் அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததியர்கூட தனி ஒரு சாதி அல்ல. அதுவும் சில சாதிகளை உள்ளடக்கிய ஒரு வகுப்புதான் (Category). உள் ஒதுக்கீடு வந்த பிறகு, அருந்ததியர் சாதிகளுக்குள் இட ஒதுக்கீடு குறித்து இப்போதைக்குப் பிரச்சனை எதுவும் எழவில்லை என்றாலும் எதிர்காலத்தில் இவர்களுக்கிடையில்கூட, இட ஒதுக்கீடு தொடர்பாகப் பிரச்சனைகள் வரக்கூடும். 

அப்படியானால், வகுப்புவாரி விதாச்சாரப் பிரதிநிதித்துவ கோரிக்கை (Class based reservation) என்பது, சாதிவாரி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவக் கோரிக்கையாக
(Caste based reservation) உருவெடுத்து வருகிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அலுவலகங்களில் நிலவும் சாதிய முரண்கள் குறித்து அடுத்து பார்ப்போம். 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்
















Friday, 29 November 2024

இட ஒதுக்கீடு சிக்கல்களுக்கு வழிகாட்டும் தலைவன்!

பட்டியல் சாதி இட ஒதுக்கீட்டிற்குள் அருந்ததியர்களுக்கான மூன்று சதவீத உள்ஒதுக்கீடு  செல்லும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஒட்டி, இதற்கு எதிராக   பள்ளர் பறையர் சாதித் தலைவர்களின் அறிக்கைகளும், போராட்டங்களும், உச்சநீதிமன்ற மேல் முறையீடும், பட்டியல் சாதிகளுக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
 
வன்னியர்களின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு எடப்பாடி ஆட்சி காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட 
சாதிகளுக்கான (MBC) 20 % இட ஒதுக்கீட்டிலிருந்து 
வன்னியர்களுக்கு என அவசர அவசரமாக  கொண்டு வரப்பட்ட 
10.5% தனி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக MBC பட்டியலில் உள்ள பிறசாதியினர் அதற்கு எதிராகக் குமுற நீதிமன்றமும் அந்த இட ஒதுக்கீட்டை இரத்து செய்து அவர்களின் குமுறலைத் 
தணிக்கஇன்று மீண்டும் அதே கோரிக்கையை வன்னியர்கள் வலியுறுத்த
அதற்காகச் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோர, MBC சாதிகளுக்குள் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.


இட ஒதுக்கீடு மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறுவோரை கோட்டா என 
இதுவரை ஏளனம் செய்து வந்த பார்ப்பனர்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு எனக்கூறி ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய்
வருவாய் ஈட்டும் அரிய வகை 
ஏழைகளுக்காக, பாஜகவின் 
முன்னெடுப்பில், மார்க்சிஸ்ட் 
கம்யூனிஸ்ட் கட்சியினர் (CPI-M) 
வெண் சாமரம் வீச10% தனி கோட்டாவை பார்ப்பனர்கள் தங்களுக்காக எடுத்துக்கொண்ட தந்திரத்தைக் கண்ட இதர ஒடுக்கப்பட்ட மக்களின் குமுறலாலும்,
 
இட ஒதுக்கீட்டின் பலன்களை 

அருந்ததியர்கள் தங்களுக்கான பங்கையும் பிடுங்கிக் கொள்கிறார்கள் என்று பள்ளர்களும் பறையர்களும் பொருமுவதாலும்,
 
இட ஒதுக்கீட்டின் பலன்களை 
அனுபவித்துக் கொண்டே  இட ஒதுக்கீட்டினால் 
பள்ளர்களும் பறையர்களும்தான் பயன் பெறுகிறார்கள் என வன்மம் கக்கும் நடுநிலைச் சாதியினராலும்
 
முன்பு போல அனைத்து வகையிலும் தங்களால் மேலாதிக்கம் செலுத்த முடியவில்லையே என்ற பார்ப்பனர்களின் புலம்பலாலும்,
 
சாதிகளுக்கு இடையிலான பகைமையும் வன்மமும் நாளுக்கு நாள் கனன்று 
கொண்டே வருகிறது.
 
கும்புடுறன் சாமி” என்று முன்பு 
குனிந்து நின்றவர்கள், இன்று 
நெஞ்சு நிமிர்த்தி “ஹாய்” 
சொல்லிச் செல்கிறார்களே என்ற ஆதங்கம் 
மேலோங்கதமிழ்நாட்டில் பிற 
சாதியினரால் தாங்கள் 
ஒடுக்கப்படுவதாக உச்சிக் குடுமியை சிலிர்த்துக் கொண்டு பார்ப்பனர்கள் 
ஓலமிட்டு ஒப்பாரி வைத்ததை 
அண்மையில் தமிழகம் கண்டது.

இன்று அறிக்கைகளாகவும், கருத்துகளாகவும், 
ஆர்ப்பாட்டங்களாகவும் உள்ள இந்தக் கனல் என்றைக்கு பெரும் காட்டுத் தீயாகப் பற்றும் என்று எவராலும் யூகிக்க முடியாத நிலையில், இதைத் தணிப்பதற்கு என்னதான் வழி என்று பலரும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

பார்ப்பனர்கள் இச்சமூக 
மக்களைப் பல்வேறு சாதிகளாகப் 
பகுத்து, அவர்களுக்கிடையே படிநிலை 
ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஆதிக்கம் செய்து 
வந்தார்களோ, அதே சாதியை 
ஆயுதமாகக் கொண்டு, 
இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி 
வேலை வாய்ப்புகளில் ஓரளவு 
முன்னைற்றம் கண்டு‌ 
பார்ப்பனர்களின் ஆதிக்கம் 
ஆட்டம் காணக் காரணமாக 
இருந்த அம்பேத்கர் பெரியார் 
வழியில் மற்றும் ஒருவர் 
பயணித்துள்ளார்.
 
இட ஒதுக்கீட்டினால் சாதிகளுக்கு இடையில் உருவாகும் முரண்களுக்கு 
முற்றுப் புள்ளி வைக்கவும் அவர் 
வழிகாட்டி உள்ளார்யார் அவர்அவர் காட்டிய வழி எது
அடுத்து பார்ப்போம்!
 
தொடரும்

ஊரான்