Wednesday, October 14, 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்?

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. 


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்கிற பட்டிமன்றம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இலஞ்ச ஊழலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

இராணிப்பேட்டை நகரம் உலகச் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் பத்தாவது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 


இவை எல்லாம் வெறும் குற்றச்சாட்டுகளை அல்ல. பல்வேறு ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்ட செய்திகள் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை உறுதிசெய்கின்றன. நல்லவற்றில் நாம் முதலிடத்தைப் பிடிக்க முடியாதா என்கிற ஏக்கம் மட்டும்தான் நம்மிடம் மிஞ்சியிருக்கிறது. 

தவறுகளுக்கு எதிரான விடாப்பிடியான போராட்டத்தை நடத்தும் போது மட்டுமே குறைந்த பட்சம் நல்லவற்றின் பட்டியலில் நாம் ஓர் இடத்தையாவது பெற முடியும். தற்காலிக வெற்றி என்றாலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்கள் இதை நிலைநாட்டி இருக்கிறார்கள். 

போராட வேண்டும் என்றால் தரவுகள் வேண்டும். தரவுகள் இருந்தாலும் மக்களை நெஞ்சுரம் மிக்கவர்களாக மாற்றுகின்ற ஆற்றலுள்ள அமைப்புகளும், விலை போகாத தலைவர்களும் வேண்டும். அவர்களை மக்கள்தான் அடையாளம் காண வேண்டும்.

வேலூர் மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர்,  இலஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இராணிப்பேட்டையில் செயல்படும் நூற்றுக்கணக்கான ஆலைகளின் சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்து, சுற்றுச்சூழலைக் காப்பதற்கான பொறுப்பு வேலூர் மண்டல அதிகாரியிடம்தான் இருக்கிறது. இராணிப்பேட்டை ஆலைகளின் சுற்றுச்சூழல் குறித்து இந்தத் தொடரில் சற்று விரிவாக எழுதவிருக்கிறேன். 

வேலூர் சுற்றுச்சூழல் அதிகாரியின் லஞ்ச ஊழல் முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் கீழ்கண்ட இணைப்புகளில் உள்ளன.

1. விகடனில்-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.vikatan.com/amp/story/news%252Fcrime%252Fvellore-government-official-arrested-over-bribery&ved=2ahUKEwif__md7bXsAhXryzgGHXhKDLUQFjACegQIChAB&usg=AOvVaw2JMDVnUY1zqAVHgd0Xgae3&ampcf=1

2.தினமணியில்-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.dinamani.com/tamilnadu/2020/oct/14/environmental-associate-chief-engineer-house-rs-33-lakh-confiscated-3484791.amp&ved=2ahUKEwif__md7bXsAhXryzgGHXhKDLUQFjAAegQIAxAC&usg=AOvVaw2b2VLnxtlz6tzmQiOjuE93&ampcf=1

தொடரும்...


பொன்.சேகர்
வழக்குரைஞர்


No comments:

Post a Comment