Friday, June 26, 2015

“ஓடறான் புடி! ஓடறான் புடி!”

இப்பொழுது தமிழ் நாட்டில் பனங்கள்ளும் இல்லை; தென்னங்கள்ளும் இல்லை;; ஈச்சங்கள்ளும் இல்லை. முன்பெல்லாம் அரசுக்குத் தெரியாமல் கள்ளு இறக்கினால் கலால் பிரிவு நல்லாவே கல்லா கட்டும். இப்பொழுது சாராயத்தில் அரசாங்கமே கல்லா கட்டுவதால் கலால் பிரிவுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.

அடர்ந்த காடு-மலைகளுக்கு நடுவே கஞ்சாச் செடி வளர்த்தாலும் மோப்பம் பிடித்து கஞ்சாவை பொசுக்கி விடுகிறது அரசு. கஸ்டம்சைத் தாண்டி அவ்வளவு லேசில் ஹெராயின் உள்ளே நுழைந்து விட முடியாது. கஞ்சாவும், ஹெராயினும் அப்படியே கிடைத்தாலும் விற்பவன் திருட்டுத் தனமாக மிகவும் சாதுர்யமாகத்தான் விற்க வேண்டும். அதனால் கஞ்சாவும், ஹெராயினும் கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் அதற்கு பலியாகுபவர்கள் சிலரே.

ஆனால் அனைவருக்கும் மிக எளிதாக கிடைக்கும் ஒரே போதைப் பொருள் சாராயம்தான். சாராயம் நமக்குத்தான் போதைப் பொருள். நமது காசைப் பிடுங்கி நமது உடலை உருக்கி சுடுகாட்டுக்கு வழி காட்டும் டாஸ்மாக் நிறுவனம் அரசுக்கு ஒரு அட்சய பாத்திரம். டாஸ்மாக் அரசுக்குத்தான் அட்சய பாத்திரம். நமக்கோ பிச்சைப் பாத்திரம்.

இந்த லட்சணத்தில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி நாமக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றுள்ளது. இதை விட கேளிக்கூத்து வேறு என்ன இருக்க முடியும்?
 
“ஓடறான் புடி! ஓடறான் புடி!” என கூப்பாடு போடும் திருட்டுப் பயலுக்கும் சாராய போதையில் மக்களை மூழ்கடிக்கும் இந்த மானங்கெட்ட அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.

 வள்ளுவனும், அல்லாவும், ஏசுநாதருமே சொல்லிக் கேட்காத குடிமக்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் கொண்டாடி விட்டால் மட்டும் போதையை விட்டு விடுவார்களா என்ன?

நாம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தாமல் இருக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தின் அட்சயப் பாத்திரம் சுக்கு நூறாக நொறுக்கப்பட வேண்டும்.

அதற்கு….

டாஸ்மாக் கடை முன்னால் பெரிய பள்ளம் வெட்டப்பட வேண்டும். பெண்கள் தினமும் அங்கே குப்பைகளை கொட்ட வேண்டும். மாணவர்களும் இளைஞர்களும் கடையிலேயே ஒண்ணுக்கு அடிக்க வேண்டும். எதுவும் அசையவில்லை என்றால் டாஸ்மாக் கடை கக்கூசாக மாற வேண்டும். ஆற்று மணலை கொள்ளையடிக்கும் மணல் லாரிகளை மடக்குவது போல சாராயம் ஏற்றி வரும் லாரிகளை மடக்கி விரட்ட வேண்டும். புதுவைப் பெண்களைப் போல சாராயக் கடைகளை சூறையாடாமல்  போதையிலிருந்து மக்களை ஒரு போதும் மீட்க முடியாது.
 
வெல்லட்டும் மக்கள் அதிகாரம்!
 
புதுவை பெண்கள் சாராயக் கடையை சூறையாடிய படங்கள்.
 


 
 
 
 

 
தொடர்புடைய பதிவுகள்:
 
 

Saturday, June 13, 2015

தாலியைத் துறப்பதே தமிழனின் அடையாளம்!

”தாலி இல்லைன்னா ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்கிற கற்பு என்னாகுறது” என்று கேட்கிறீர்களே! மகாபாரதத்தில் துரௌபதி என்றொருத்தி இருப்பது தெரிந்துதான் கேட்கிறீர்களா?
கட்டிய புருஷனின் உயிருக்கு ஆதாரம் – தாலி. “விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி!” இதெல்லாம் தெரியாதா மாப்ள?
தாலி– இந்துக்களின் கலாச்சாரமா?- எனக்குத் தெரிந்து மனுதர்ம சட்டத்தில் தாலிகட்டுவது பற்றி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்து மதத்தின் அத்தாரிட்டி மனுவே தாலி பற்றி பேசாத போது நீங்க ஏய்யா முந்திரி கொட்டை மாதிரி?
தாலியை முதலில் அணிந்தது தேவரடியார்கள் எனில் தாலி தேவதாசிகளின் அடையாளமாகத்தானே இருக்க முடியும். அதே ஏன் நம் குலப்பெண்கள் சுமக்க வேண்டும்?
தாலி தமிழனின் பாரம்பரிய அடையாளம் எனில் கணவன் இறந்த பிறகு தாலி அறுக்கும் நிகழ்வு எந்த ஒரு பழந்தமிழ் இலக்கியத்திலும் ஏன் இடம் பெறவில்லை?
பல்லாண்டுகால தமிழனின் வரலாற்றில் எப்போதும் இல்லாது – இடையில் புகுந்த தாலியை பிடித்துத் தாங்கிக் கொண்டிருப்பது தமிழனின் அடையாளத்தையே அழிக்கும் கயமைத்தனம் அல்லவா?
தாலியைத் துறப்பதே தமிழனின் அடையாளம்!

நான் தமிழன். நீங்க?

வினவு தளத்தில் வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை என்கிற கட்டுரைக்கு நான் எழுதிய மறுமொழி இது. தாலி குறித்த பல புதிய தகவல்களைத் தருகிறது இக்கட்டுரை.

Wednesday, June 3, 2015

பெரியாரையும் அம்பேத்கரையும் படிக்கத்தூண்டும் பார்ப்பனர்கள்!

சமஸ்கிருத வாரம், இந்தி திணிப்பு, பகவத் கீதை தேசிய நூல், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்குத் தடை என தொடர் நடவடிக்கைகள் மூலம் பெரியாரையும் அம்பேத்கரையும் படி படி என நம்மைத் தூண்டும் பார்ப்பனர்களுக்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். பெரியாரையும் அம்பேத்கரையும் இனியும் படிக்காமல் இருப்பது பார்ப்பனர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். பார்ப்பனர்களுக்கு துரோகம் செய்யாதீர். பெரியார் அம்பேத்கர் நூல்களைத் தேடுங்கள்!.தேடுங்கள்!! தேடிப்பிடித்துப் படியுங்கள். பரப்புங்கள். 

பெரியாரையும் அம்பேத்கரையும் நாம் படித்துவிட்டால் அதன் பிறகு பார்ப்பனர்கள் ஓய்ந்து விடுவார்கள். பார்ப்பனியம் ஒழிக்கப்படும். சமூகத்தில் அமைதி நிலவும். இன்றைய காலகட்டத்தில் பார்ப்பனர்கள் மேற்கொள்ளும் மேற்கண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் சமூக அமைதிக்கானவையே. அதற்காக மீண்டும் ஒருமுறை பார்ப்பனர்களுக்கு நன்றி! நன்றி!!. 

குறிப்பு: இங்கே பார்ப்பனர் என்று குறிப்பது இந்து சாதிய அமைப்பு முறையை ஏற்றுக்கொண்டு அதை நியாயப்படுத்தும் அர்ஜீன் சம்பத் முதல் எச்.ராஜா வரை உள்ள சனாதனிகள் அனைவருக்கும் பொருந்தும்.

தொடர்புடைய பதிவு:

சாதியைத் தாங்கிப் பிடிக்கும் மூன்று தூண்கள்!