Saturday, May 30, 2015

நாட்டைப் பிடித்தாட்டும் நாமக்கட்டிகள்!

மோடியின் ஓராண்டு கால ஆட்சி சாதித்தது என்ன?  சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு மையத்திற்கான தடை சரியா? தவறா? என்கிற வாதப்பிரதிவாதங்கள் நடக்கும் இந்தத் தருணத்தில் இவர்களின் ஆட்சி எப்படி இருக்குமென்று  1993-ம் ஆண்டே கணித்த, “நாமக்கட்டி ஆளப் போகுது...” என்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது.



பாரதீய ஜனதா… எப்பேற்பட்ட கட்சி தெரியுமா.  பார்ப்பனர்கள், பணக்கார சேட்டுக்கள், பழைய மன்னர்கள்  இவனுங்க நடத்துற கட்சி.
அத்வானியும், அசோக் சிங்காலும், முரளி மனோகர் ஜோஷியும், பஜாஜும், டால்மியாவும், விஜயராஜே சிந்தியாவும் எல்லாம் மேப்படி ஆளுங்கதான்.
இவனுங்க ஆட்சிக்கு வந்தா கேடு காலம் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல. உழைப்பாளி மக்கள் எல்லாருக்கும் ஊத்திக் கொழைச்சி ஒரே நாமமா போட்டுருவானுங்க. சாமானியப்பட்ட நாமம் இல்ல, ராஆஆஆம நாமம்.
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு
நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
ஏ படிச்சவனுக்கு பட்ட நாமம்,
பாட்டாளிக்கு குட்ட நாமம்
விவசாயிக்கு வட்ட நாமம்
நம்ம தேசத்துக்கே இரட்டை நாமம்
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
விடியகாலம் எழுந்திருச்சி, வேகமாக குளிச்சு முழுவி
மாட்டுக்கெல்லாம் நாமம் போட்டு, மறக்காம சாணம் போட்டு
ஏரு பூட்டி வயலில் இறங்கி, வேர்வை சிந்த பாடுபட்டு
அந்தி சாயும் நேரம் பார்த்து ஆண்டை வூடு திரும்பி வந்து
வுழுந்து அவனை கும்பிட்டாக்க
ரெண்டு உண்டக்கட்டி தந்திடுவான்
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
பறையடிக்கிற சாதிக்கு பட்டம் படிப்பெல்லாம் எதுக்கு
துணி வெளுக்குற சாதிக்கு தொழில் கல்விதான் எதுக்கு
அப்பன் தொழிலை செய்யிறதுக்கு இட ஒதுக்கீடு எதுக்கு
மண்டலுக்கு பண்டல் கட்டு, மனுநீதியை தூசி தட்டு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
சங்கம் வைக்க வேணுமா, இந்தா புடி சார்ஜ்ஷீட்
ஏ இன்குலாபு சிந்தாபாத், இன்கிரிமென்டு கட்டு
போனசு வேணுமா போயிட்டு வா டிஸ்மிஸ்ஸூ
அட கோரிக்கையை சொல்லணும்னா வேற ஒரு ரூட்டு இருக்கு
ஒரு கொட்டாய கட்டிகிட்டு பஜகோவிந்தம் பாடு.
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டைப் புடிச்சி ஆட்டப் போகுது
கடனப்பத்தி கவலை விடு, கடவுள் மேல பாரத்தை போடு
ஆலயங்கள் இருக்கும் போது ஆலைகள் எதுக்கு விடு
அகண்ட பாரதத்திலே அமெரிக்காவை இழுத்துப் போடு
அந்த அமெரிக்கா காரனையும் இந்துவாக மாத்திப்புடு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டைப் புடிச்சி ஆட்டப் போகுது
அம்மான்னு சொல்லாதே, மாதாஜின்னு சொல்லு
அப்பான்னு சொல்லாதே, பிதாஜின்னு சொல்லு
வணக்கத்தை தள்ளு, நமஸ்தேஜி சொல்லு
ஆழக் குழி தோண்டி தமிழ அதில் தள்ளு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
பண்டாரம் பரதேசிங்கதான் பள்ளிக்கூட வாத்தியாரு
பத்து அவதாரங்கதான் பாரதத்தின் வரலாறு
பூகோள பாடத்திலே சிவன் தலையில கங்கை ஆறு
அப்ப பாடம் நடத்துறது யாரு
வரலாறு சொல்லித் தர வாரியாரு வருவாரு
விஞ்ஞான தமிழ் வாத்தியாரெல்லாம் விட்டாப் போதும்னு ஓடுவாரு
அத்தனைக்கும் அத்தாரிட்டி காஞ்சி சங்கராச்சாரியாரு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
– மக்கள் கலை இலக்கியக் கழகம் 1993-ம் ஆண்டில் வெளியிட்ட “அசுர கானம்” என்ற பாடல் ஒலிக் குறுந்தகடில் இடம் பெற்றுள்ள பாடல்.
நன்றி: வினவு.

Wednesday, May 13, 2015

மாப்பிள்ளை குதிரையில் வந்தால் குற்றமா?


இது என்ன? மாப்பிள்ளை தலைக்கவசம் அணிந்து கொண்டு குதிரைமீது வருகிறார்? வடிவேலு தலைக்கவசம் அணிந்து கொண்டு ஆட்டோ ஓட்டும் நகைச்சுவை போன்றதல்ல இது. 

உயர்சாதி பயங்கரவாதத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள தனது திருமண நாளில் மாப்பிள்ளை அழைப்பின் போது ஒரு தாழ்த்தப்பட்ட மணமகனுக்கு நேர்ந்த கதி இது.

மாலை நேர மாப்பிள்ளை அழைப்பு என்றால் வசதியில்லாதவர்கள் நடையாகவே அழைத்து வருவார்கள். சற்றே வசதி இருந்தால் ஒரு திறந்தவெளிக்காரில் அழைத்து வருவார்கள். குதிரைகளையும் யானைகளையும்கூட பயன்படுத்துவார்கள். இது அவரவர் வசதியைப் பொருத்தது.

மத்தியப்பிரதேசத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட மணமகன் மாப்பிள்ளை அழைப்பின் போது குதிரை மீது அழைத்து வரப்படுகிறார். இவர் குதிரை மீது வந்தால் என்ன? யானை மீது வந்தால் என்ன? 

ஒரு தாழ்த்தப்பட்டவன் குதிரை மீது வருவதா? என கொக்கறிக்கின்றனர் உயர்சாதி வெறியர்கள். கற்களைக் கொண்டு தாக்குகின்றனர். பிறகு குதிரையையே அபகரித்துச் செல்கின்றனர்.

ஆனால் மணமகன் வீட்டார் மாப்பிள்ளைக்கு தலைக்கவசம் அணிவித்து மற்றொரு குதிரையைக் கொண்டு மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். அப்பொழுதும் உயர்சாதி வெறியர்கள் கற்களைக் கொண்டு தாக்கி உள்ளனர்.

இது ஏதோ உயர்சாதியைச் சேர்ந்த ஒரு சிலர் செய்தது என சாதாரணமாக கருதிவிடமுடியாது. இது தொடர்பாக 71 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதிலிருந்து அந்த ஊர் உயர்சாதியினரில் பெரும்பகுதியினர் இந்தத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உணர முடிகிறது.

இது அப்பட்டமான சாதி வெறி. இப்பவெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் என கேள்வி எழுப்பும் ”சாதி பாராட்டாத” ”சாதி வெறியற்ற” சாதி பற்றாளர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: Dalit groom attacked for riding a horse

Tuesday, May 12, 2015

ஜெயா வழக்கு: ஆதரவும் எதிர்ப்பும்!

ஆதரவும்!
வெற்றி வெற்றி .....



இந்த நாட்டின் நீதி யாருக்கு?
மக்கள் முதல்வர் விடுதலையானதையொட்டி தமிழ்நாடு முழுக்க “பொதுமக்கள்“ பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
ஆனந்தத்தில் அடிபொடிகள்...


இந்தப் பச்சப்புள்ள முகத்துல இப்ப சிரிப்பைப்பாருங்க! 

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர்வழக்கறிஞர் 
தமிழ்செல்வன் மற்றும் பல வழக்கறிஞர்கள் அம்மா விடுதலை அறிவிப்பிற்கு நன்றி 
தெரிவிக்கும் வகையில் மொட்டையடித்து எம் ஜி ஆர் சிலை முன் நேர்த்திக்கடன் 
செலுத்தினார்கள்

அடிபொடிகளிடம் பொதும் என்கிறாரோ!

வேங்கை  வெளியே வருது!
எச்சரிக்கை!
அது வேற வாயி...இது நார வாயி...

கடவுள் சோதிப்பார் -ஆனால் 
நம்புபவர்களை கைவிடமாட்டார்- 
ஆத்மார்தமான 
பிரார்த்தனைகள் நிறைவேறும்


ஜெயலலிதா இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக முடியும்: 
தமிழருவி மணியன் 

இறுதித் தீர்ப்பு அல்ல!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து
தீர்ப்பு சரியா தப்பா? வெளிப்படையா சொல்லாம இது என்ன மொன்னையா இறுதித் தீர்ப்பு அல்ல!” 
இப்படி மீண்டும் நடக்கலாம் என்பதாலா?

அடுத்து இதுதானே...வாங்க வாங்க..guys.



எதிர்ப்பும்!


தீர்ப்பு எழுதப்பட்ட நாளன்று எடுக்கப்பட்ட புகைப்படம் இது smile emoticon
தீர்ப்பு வாசிக்கப்பட்ட நாள் மட்டும்தான் இன்று 



குமாரசாமி கால்குலேட்டர். (Made In Bangaluru)


 சட்டம் இருப்பவனுக்கு வளைந்து போகும், இல்லாதவனுக்கு விலங்கு போடும்.

 
 பணம் பாதாளம் வரை பாயும்

 நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதி மன்றம். அது அனைத்து நீதி மன்றங்களுக்கும் மேலானது Kalaignar Karunanidhi

கொளத்தூர் ஞாபகம்.



 பத்து சதவிகிதம் வரை சுடலாம் : நீதியரசர் அனுமதி!
டி குன்கா படிச்சப்ப வேற syllabus குமாரசாமி படிச்சப்ப வேற syllabus .






இவர்கள் கையில்தானே தீர்ப்பு இருக்கிறது!

குறிப்பு: முகநூல் மற்றும் வலைதளங்களில் வெளியான கருத்துப் படங்களை உங்களோடு பகிர்ந்துள்ளேன். கருத்துப் படங்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி!

Tuesday, May 5, 2015

சாதியைத் தாங்கிப் பிடிக்கும் மூன்று தூண்கள்!

இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய் 


மிகச் சரியான தருணத்தில் நிகழ்த்தப்பட்ட அருந்ததிராய் அவர்களின் இந்த உரை தலித்துகள் மத்தியில் மட்டுமல்ல சமூக மாற்றத்தை விரும்புகிற அனைவரிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

பா.ஜ.க பார்ப்பனக் கும்பலின் அம்பேத்கர் மீதான வெற்று புகழுரைகளைக் கண்டு தலித் அமைப்புகளும் தலைவர்களும் இனியும் ஏமாறமாட்டார்கள் என நம்புவோம்.

அதோ போல அம்பேத்கரைப் படிக்காமல் பார்ப்பன மேலாதிக்கத்துக்கு முடிவு கட்டமுடியாது என்பதை பகுத்தறிவாளர்களும் உணருவார்கள் என நம்புவோம்.

”சாதிக்கு எதிரான இந்த போராட்டத்தை நாம் தொடர வேண்டுமெனில் பார்ப்பனீயத்துக்கும், முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் உள்ள தொடர்பை நாம் தொடர்ச்சியாகவும் அனுபவபூர்வமாகவும் நிறுவ வேண்டும்.என அருந்ததிராய் அவர்கள் மிகச் சரியாக சுட்டிக் காட்டியதை தலித் இயக்கங்களும், பகுத்தறிவாளர்களும் புரிந்துகொண்டு கம்யூனிசப் புரட்சியாளர்களோடு கரம்கோர்க்கும் போது சாதிக்கு எதிரான போராட்டத்தில் நம்மால் வெல்லமுடியும்.

தீண்டாதவர்களைப் பொறுத்தவரையில் இந்து மதம் கொடூரங்களின் கூடாரம்.”
அம்பேத்கரைப் படித்தால்தான் இதை உணரமுடியும் மேலும் விரிவாக அறிந்து கொள்ள பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கீழ்கண்ட தொகுப்பு நூல்களை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

தொகுதி: 1
சாதி பற்றியவை
இந்தியாவில் சாதிகள்
சாதி ஒழிப்பு
தொகுதி: 6
இந்து மதத்தத்துவம்
இந்து சமூக அமைப்பு – அதன் இன்றியமையாக் கோட்பாடுகள்
இந்து சமூக அமைப்பு – அதன் தனித் தன்மைகள்
இந்து மதத்தின அடையாளங்கள்
தொகுதி: 7
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும்
மறைவிலிருந்து வெளிப்பட்ட பண்டைய இந்தியா
பண்டைய அமைப்பு முறை: ஆரிய சமூகத்தின் நிலை
மதிப்பிழந்து போன புரோகிதத் தொழில்
சீர்திருத்தக்காரர்களும் அவர்களுக்கு நேர்ந்த கதியும்
பௌத்த சமயத்தின் நலிவும் வீழ்ச்சியும்
பிராமணிய இலக்கியம்
பிராமணியத்தின் வெற்றி: மன்னன் கொலை அல்லது எதிர்புரட்சியியன் தோற்றம்
குடும்ப ஒழுக்க நெறிகள்
பகவத் கீதை பற்றிய கட்டுரைகள்
எதிர்புரட்சிக்கு தத்துவ அடிப்படையில் பாதுகாப்பு: கிருஷ்ணனும் கீதையும்
விராட பருவம் மற்றும் உத்தியோக பருவம் பற்றிய பகுப்பாய்வு குறிப்புகள்: விராட பருவம்
பிராமணர்கள் – சத்திரியர்கள் போராட்டம்
சூத்திரர்களும் எதிர்புரட்சியும்
மகளிரும் எதிர்துபுரட்சியும்
தொகுதி: 8
மதம்
ஒருவர் இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்பாடு
வேதங்களின் தோற்றம்-பிராமணீய விளக்கம் அல்லது சுற்றி வலைத்துப் பேசும் தந்திரம்
வேதங்களின் தோற்றம் பற்றி மற்ற சாத்திரங்களின் சான்று
பிராமணர்கள் திடீரென்று வேதங்கள் பொய்யாதவை என்றும் கேள்வி கேட்கக்கூடாதவை என்றும் ஏன் அறிவிக்கிறார்கள்?
பிராமணர்கள் அதற்கு மேலும் சென்று வேதங்கள் மனிதராலோ கடவுளாலோ படைக்கப்படாதவை என்று ஏன் அறிவித்தார்கள்?
வேதங்களின் உள்ளடக்கம்: அவை அறநெறி அல்லது ஆன்மீகப் பண்பு கொண்டவையா?
தலைகீழ் மாற்றம் அல்லது பிராமணர்கள் வேதங்களைத் தங்களுடைய மிகத்தாழ்ந்த சாஸ்திரங்களுக்கும் தாழ்ந்தவையாக எவ்வாறு அறிவித்தார்கள்?
உபநிடதங்கள் எவ்வாறு வேதங்கள் மீது போர் தொடுத்தன?
உபநிடதங்கள் எவ்வாறு வேதங்களுக்குக் கீழ்பட்டவையாக ஆக்கப்பட்டன?
பிராமணர்கள் இந்துக் கடவுளர்களை ஒருவருடன் ஒருவர் ஏன் சண்டையிடச் செய்தார்கள்?
இந்துக் கடவுள்களைப் பிராமணர்கள் ஏன் எழுச்சியும் வீழ்ச்சியும் பெறச்செய்தார்கள்?
பிராமணர்கள் ஏன் கடவுள்களை அரியணையிலிருந்து இறக்கிவிட்டுப் பெண் தெய்வங்களை அரியணையில் அமர்த்தினார்கள்?
அகிம்சை என்ற புதிர்
அகிம்சையிலிருந்து மீண்டும் இம்சைக்கு
பிராமணர்கள் எப்படி ஓர் அகிம்சைக் கடவுளை இரத்த வெறி கொண்ட பெண் தெய்வத்துக்கு மணம் செய்வித்தார்கள்?
வேதங்கள் குறித்த புதிர்
வேதாந்தம் பற்றிய புதிர்
திரிமூர்த்தி சம்பந்தமான புதிர்
ஸ்மார்த்த தர்மமும் தாந்திரிக தர்மமும்
வேதங்களின் பொய்யாமை
சமூகம்
நான்கு வருணங்கள் – பிராமணர்கள் இவற்றின் தோற்றத்தைப் பற்றி உறுதியாகக் கூறுகிறார்களா?
நான்கு ஆசிரமங்கள் – இவை ஏன் எப்படித் தோன்றின?
மனுவின் பைத்தியம் அல்லது கலப்புச் சாதிகள் பற்றிய பிராமணிய விளக்கம்
தந்தை வழியிலிருந்து தாய் வழிக்கு மாற்றம். பிராமணர்கள் இதன்மூலம் என்ன ஆதாயம் பெற விரும்பினார்கள்?
கலிவர்ஜ்யா அல்லது பாவத்தைப் பாவம் என்று கூறாமல் அதன் செயல்பாட்டைநிறத்தி வைக்கும் பிராமணியக் கலை
வருணாசிரம தர்மத்தின் புதிர்
கட்டாயத் திருமணம்
அரசியல்
மன்வந்தரக் கோட்பாடு
பிரமம் என்பது தர்மம் அல்ல பிரம்மத்தால் என்ன பயன்?
கலியுகம்-பிராமணர்கள் ஏன் அதை முடிவற்றதாகச் செய்தார்கள்?
கலியுகம் குறித்த புதிர்
இராமன் கிருஷ்ணன் பற்றிய புதிர்
தொகுதி: 9
தீண்டப்படாதவர்கள் அல்லது இந்தியச் சேரிகளின் குழந்தைகள்
தீண்டப்படாதவர் என்ற நிலைமையின் கொடுமை
தீண்டாமை அதன் மூல ஊற்று
தீண்டாதோர் அவர்களின் எண்ணிக்கை
அடிமைகளும் தீண்டாதோரும்
இந்தயிச் சேரி-தீண்டாமையின் மையம்
மனித உறவுக்குத் தகுதியற்றவர்கள்
தீண்டாமையும் சட்டங்கெட்டச் செயல்களும்
சட்டங் கெட்டச் செயல்கள் ஏன் சட்டபூர்வமாகின்றன
பிரச்சனையின் மூலங்கள்
இணையான வழக்குகள்
இந்துக்களும் பொது மனசாட்சியில்லாமையும்
இந்துக்களும் அவர்களது சமூக உணர்வற்ற தன்மையும்
இந்துவும் சாதியில் அவரது நம்பிக்கையும்
தீண்டாதவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பவை
நிர்வாகத்தின் எதிர்ப்பு நிலை
பாரபட்சப் பிரச்சனை
தனிமைப்பட்டு நிற்கும் பிரச்சனை
தொகுதி: 10 (தொகுதி ஒன்பதின் தொடர்ச்சி)
சமூகம்
நாகரிகமா, கொடுங்குற்றமா
இந்துக்கள் கட்டிய வீடு
இந்து சமூதாயத்தின் அடிக்கல்
தீண்டத்தகாதவர்களுக்கு எதிராகத் தீண்டத்தக்கவர்கள்
சாதியின் சாபக்கேடு
அரசியல்
பல இலட்சங்களிலிருந்து பின்னத்துக்கு
தீண்டத்தகாதவர்களின் எழுச்சி
இக்கடான நிலையில்
அவர்களுடைய விருப்பங்களே எமக்குச் சட்டங்கள்
திருவாளர் காந்தியின் சமுதாய நோக்கு
காந்தியும் அவரது உண்ணாவிரதமும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓர் எச்சரிக்கை
சமயம்
இந்துக்களிடமிருந்து விலகிச் செல்லுதல்
சாதியும் மதமாற்றமும்
தீண்டப்படாதவர்கரளக் கிறித்தவர்களாக்குவது
சமயம் மாறியவரின் நிலை
தொகுதி: 13
சூத்திரர்களைப் பற்றிய புதிர்
சூத்திரர்களின் தோற்றம் பற்றிய பிராமணியக் கொள்கை
சூத்திரர்களின் நிலை பற்றிய பிராமணியக் கொள்கை
சூத்திரர்களுக்கு எதிராக ஆரியர்கள்
ஆரியர்களுக்கு எதிராக ஆரியர்கள்
சூத்திரர்களும் தாசர்களும்
சூத்திரர் என்போர் யார்?
வருணங்களின் எண்ணிக்கை மூன்றா நான்கா?
பிராமணர்களுக்கு எதிராக சூத்திரர்கள்
சூத்திரர்கள் தாழ்நிலைக்குத் தள்ளப்படுதல்
சமரசத்தின் கதை
உரைகல்லில் சோதிக்கப்படும் கோட்பாடு
தொகுதி: 17
தீண்டப்படாதோரின் மொத்த மக்கட்தொகை
தீண்டப்படாதோரின் முக்கியத்துவம்
தீண்டப்படாதோரின் அரசியல் கோரிக்கைகள்
இந்துக்களின் எதிர்ப்பு
கூட்டுத் தொகுதிகளும் தலித் தொகுதிகளும்
ஆட்சித் துறை
அரசுப் பணித்துறைகள்
தனிக் குடியேற்றங்கள்
சாதியும் அரசியலமைப்புச் சட்டமும்
இந்தக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்
தொகுதி: 25
அம்பேத்கரின் நினைவலைகள்
பல்வகைக் குறிப்புகள்-மனுவும் சூத்திரர்களும்