Sunday, October 14, 2012

பாடாய் படுத்தும் டெங்கு!


சொன்னது

‘’டெங்கு அச்சம் தேவையில்லை! – சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் - தினமணி (13.10.2012)

‘’மர்மக் காய்ச்சல் குறித்து பீதியடைய வேண்டாம் - நோய் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் ஜி.கே.துரைராஜ் - தினமணி (13.10.2012)

‘’வேலூரில் மர்மக்காய;ச்சல்: பலி 10 ஆக உயர்வு! – தினமணி (13.10.2012)

‘’தென்மாநிலங்களில் கடந்த ஆண்டில் 2859 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு (12500) உயர்ந்துள்ளது. – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் - தினமணி (13.10.2012)

‘’கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை டெங்கு காய்ச்சலில் 33 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 77 பேர் வரை இறந்துள்ளனர் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தினமணி (13.10.2012)

என்னத்தச் சொல்ல!

எல்லாத்தையுந்தான் நீங்களே சொல்லீட்டீங்களே! அப்புறம் எப்படி பீதியடையாம இருக்க முடியும்?
***********
சொன்னது

''டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஈடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகும் - நோய் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் ஜி.கே.துரைராஜ் - தினமணி (13.10.2012)

''டெங்கு காய்ச்சலை பரப்பும் பகல்நேர கொசுக்கள் சுத்தமான நீரில் உற்பத்தியாகும். – அரசு டாக்டர்கள் - தினமணி (12.10.2012)

வேலூரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். - தினமணி (12.10.2012)

கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். - தினமணி (13.10.2012)

என்னத்தச் சொல்ல!

வேலூரில் மனுசனுக்கேத் தண்ணியில்ல. பெறவு டெங்கு கொசுவுக்கு ஏதப்பா நல்ல தண்ணி?
**************
சொன்னது

‘’வேலூரில் மர்மக்காய்ச்சல்: பலி 10 ஆக உயர்வு! – தினமணி (13.10.2012)

‘’சொசு உற்பத்தியைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். - நோய் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் ஜி.கே.துரைராஜ் - தினமணி (13.10.2012)

‘’தண்ணீரைத் தேக்கி வைக்கும் வாளிகளை நன்கு மூடி பராமரிக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். - பொது மக்களுக்கு அரசு டாக்டர்கள் அறிவுரை - தினமணி (13.10.2012)

‘’டெங்கு: மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய வேண்டும்.

டெங்கு காயச்சலில் இருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் பேண்ட், முழுக்கை சட்டை அணிய வேண்டும், மற்றவர்களும் இதை கடைபிக்கலாம் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் - தினமணி (13.10.2012).

‘’பிரதமர் வீட்டு வளாகத்தில் டெங்கு கொசு:
என்.டி.எம்.சி அதிகாரிக்கு நோட்டீஸ்.

டெங்கு கொசுக்களை அழிக்க உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்கும்படி புதுதில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்.டி.எம்.சி) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. - தினமணி (13.10.2012)

என்னத்தச் சொல்ல!

அங்க யாருமே மண்டய போடல. அதுக்கு நோட்டீசு.
இங்க பத்து பேர் மண்டய போட்டும் நமக்கு உபதேசமாம்?

பிரதமர் வீட்டில் கொசு இருந்தாலும் பிரமருக்கு பாதிப்பு வராதே! அவர்தான் குலாம் நபி ஆசாத்தின் ஆலோசனையை கச்சிதமாக கடை பிடிக்கிறாரே! போதாக் குறைக்கு தலைப்பாகையும் தாடியும் கூடுதல் பாதுகாப்பு.

நோட்டீசை வேலூருக்கு திருப்புப்பா!
**********
சொன்னது

வாளிகளில் பிடித்து வைக்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதால் வாளிகளை நன்கு மூடிவைத்து பராமரிக்கச் சொல்கிறீர்கள்.

ஆமாம்! சென்ற ஆண்டு வரை  கொட்டங்கச்சிகளிலும் உடைந்த சட்டிப்-பானை ஓடுகளிலும் தேங்கும் தண்ணீரில்தான் டெங்கு - சிக்குன் குனியா கொசுக்கள் உற்பத்தியாவதால் அவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்க அவைகளை கவிழ்த்துப் போடச் சொன்னீர்கள்.

என்னத்தச் சொல்ல!

இதைப்புரிந்து கொண்ட டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீருக்குத் தாவி பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டனவோ! எதுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை அடுத்த மூன்று மாத்துக்கு மூடி வையுங்க!.
*******
தொடர்புடைய பதிவு: 

எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!

http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html

2 comments:

  1. கொட நாட்டில் போய் நன்றாக தூங்கி கொண்டிருந்தால், டெங்கு தானாக ஓடி விடும்.

    ReplyDelete