Sunday, December 9, 2018

பார்ப்பனியம் எனும் அழுக்கு!


"டாக்டர்,  3 மாத்திரையும் 2 ஊசியும் போட்டு 200 ருபாய் வாங்கிட்டாரு…
ரொம்ப மோசம்டா..

அது சரி, 
கனபதி ஹோமம் செஞ்சவனுக்கு எவ்வளவு கொடுத்தே..?

2500 ரூபா குடுத்தேன்..

அவன் என்ன குடுத்தான்..?

கோமியம் குடுத்தான்…"

இது BK @Periyar BK என்பவரது பதிவு. சிந்திக்கத் தூண்டும் இப்பதிவை முகநூலில் நானும் பகிர்ந்தேன். இப்பதிவிற்கு எதிராக தனது புலம்பலைக் கொட்டித் தீர்த்தார் ஒரு பார்ப்பனர். ஒருவர் நமக்கு நண்பராக இருந்தாலும் அவர் தன்னை பார்ப்பனர் எனக் கருதிக்கொள்ளும்வரை அவரை பார்ப்பனர் என விளிப்பதே சரி.   

இதோ அவரது புலம்பல்

“பார்ப்பனர்களுக்கு எதிராக உங்களுக்கு ஏன் கோபம்? அவர்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? பார்ப்பனர்கள் ஏற்கனவே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர் என்று சொல்லி உங்களைப் போன்றவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களை யார் கனபதி ஹோமம் செய்யச் சொன்னது? அதற்குப் பணம் கொடுக்கச் சொன்னது? எந்தப் பார்ப்பனரும் அவராக உங்கள் வீட்டிற்கு வருவதுமில்லை; எதையும் கேட்பதுமில்லை. புத்திசாலிகளான நீங்கள் பார்ப்பனர்களை பின்பற்ற வேண்டியதில்லையே! கல்வி-வேலை வாய்ப்பு-பதவி உயர்வு உள்ளிட்ட எல்லாவித அரசுப் பலன்களையும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். நூறு ஆண்டுகளுக்கு இடஒதுக்கீட்டை நீங்கள் பெற்றாலும் உங்களில் ஒருவரும் உயர்ந்தவர்களாக வளரப் போவதுமில்லை; முன்னேறப் போவதுமில்லை. உங்களது மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.”

அவர் ஆங்கிலத்தில் போட்டிருந்த பதிவின் எளிமையான மொழியாக்கம் இதுதான். 2000 ஆண்டுகளாக கல்வி கற்க உரிமை பெற்ற சமூகப் பின்னணி கொண்ட ஒருவர் ஆங்கிலத்தில் எழுதுவதும், தற்போதுதான் கல்வியைச் சுவைக்கும் ஒருவர் தமிழில் எழுதுவதும் சமூக எதார்த்தம்தானே!

 அவரின் பேற்கண்ட புலம்பலுக்கு நான் எழுதிய எனது பதில்

"பார்ப்பனர் (இதுதான் தமிழ்) (பிராமணர்-இது வடமொழி்) என தன்னை ஒருவர் ஏன் அழைத்துக் கொள்ள வேண்டும்? பார்ப்பனர் என்பது சாதியா? இல்லையே. அது வர்மாச்சே. ஒருவர் தன்னை பார்ப்பனர் என கருதிக் கொள்வாரேயானால் அவர் மனு வகுத்த சனாதன தர்மத்தை ஆதரிப்பவர். அதாவது சமூகத்தில் ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு முறையை நியாயப்படுத்துபவர் ஆவார். இதைத்தான் பார்ப்பனியம் என்கிறோம். பார்ப்பனியம் செய்த மிகப் பெருந் தீங்கே இதுதான். சமூகத்தில் நிலவும் தீண்டாமைக்கு இதுதான் அடிப்படைக் காரணம். அதனால்தான் பார்ப்பனியத்தின் மீது எங்களுக்கு கடுங்கோபம்.

கனபதி பூஜை மட்டுமல்ல இதுபோன்ற என்னற்ற சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் தங்களுடைய பிழைப்பிற்காக புகுத்தியவர்கள் பார்ப்பனர்கள். இதை மீறினால் பெருங்கேடு என அப்பாவி மக்களை அன்றாடம் அச்சுறுத்துவது பார்ப்பனியம். இந்தக் கேடுகெட்ட சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்கள் விட்டொழிக்க வேண்டும் என புத்தர் காலம் தொடங்கி இன்றுவரை என்னற்ற தலைவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய போராட்டத்தின் ஒரு வடிவம்தான் மேற்கண்ட பதிவு.

இரண்டாயிரம் ஆண்டுகளாக எம்மக்களுக்கு கல்வியை மறுத்தது பார்ப்பனியம். இன்றுதான், எம்மக்கள் (இங்கே எம்மக்கள் என நான் குறிப்பிடுவது பார்ப்பனரல்லாத மக்களைத்தான்) படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னமும்கூட பலர் தற்குறிகளாகத்தான் இருந்து வருகிறார்கள். 2000 ஆண்டுகளை ஒப்பிடும் போது முன்னேறுவதற்கு 100 ஆண்டுகள் என்பது மிகச் சொற்பமே!

உயர்சாதி அடையாளமாக இருக்கும் பூணூலை அறுத்தெறிந்து விட்டு அடித்தட்டு மக்களோடு கரம் கோர்க்க வாருங்கள். அது ஒன்றுதான் உங்கள் மீது படிந்துள்ள பார்ப்னிய அழுக்கைப் போக்க சிறந்த வழி."  

2 comments:

  1. Replies
    1. எது Nonsense.? 2500 ரூபாய்க்கு கோமியம் கொடுத்தானே அதுவா?

      Delete