Tuesday, March 9, 2021

இராணிப்பேட்டையில் உலக மகளிர் தின விழா!

உலக மகளிர் தின விழா மற்றும் சாவித்திரி பாய் புலே நினைவு தினம் பெல் இராணி்பேட்டை அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சார்பில் 09.03.2021 அன்று மாலை இராணிப்பேட்டையில் சிறப்பாக நடைபெற்றது.

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த பெண்களே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். தோழர் பா.சங்கீதா தலைமையில் தோழர் க.சுதா வரவேற்புரை நிகழ்த்த தோழர் நீ.நந்தினி நெறியாளுகை செய்தார். திராவிட மகளிர் பாசறையின் மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மதிவதனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து எழுச்சி உரையாற்றினார். வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் பெல்.இந்திரன் மற்றும் கௌவரத் தலைவர் வழக்குரைஞர் பொன்.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியல் தோழர் சி.காவியா நன்றி உரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது. 

ஆண்களும் பெண்களும் திரளாகக் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர். சாவித்திரி பாய் புலே படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்சியில் ஆளுமை செய்த பெண்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் முறையாக மேடை ஏறினாலும் தங்களாளும் மேடை ஆளுமையைச் செய்ய முடியும் என்பதை செய்து காட்டியப் இந்தப் பெண்கள் இனி வரும் காலங்களில் பல சாதனைகளைப் படைக்கக் காத்திருக்கின்றனர். சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு வாழ்த்துகள்.

ஊரான்

விழாக் காட்சிகள்


பா.சங்கீதா

க.சுதா

நீ.நந்தினி

சே.மதி வதனி

சி.காவியா
















No comments:

Post a Comment