Monday, January 27, 2025

வீட்டு வாசலில் மாட்டுச் சாணம் தெளிப்பது ஏன்?

வேளாண் உற்பத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால், ஏர் கலப்பை, கவலைகள், மாட்டு வண்டிகளின் பயன்பாடு அநேகமாக அற்றுப் போனதால் மாடுகளும் குறைந்து போயின. இனவிருத்திக்காகவும், கறிக்காகவும், ஜல்லிக் கட்டு-எருதுக்கட்டுகளுக்காகவும் மட்டுமே காளைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிலரது வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. 

மற்றபடி பாலுக்காக கறவை மாடுகள் எப்பொழுதும் போல வளர்க்கப்படுகின்றன. மொத்தத்தில் மாடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து போனதால் மாட்டுக் கொட்டகைகளும், எருக்குழிகளும் சின்னதாய் மாறின அல்லது அநேகமாய் காணாமல் போயின.


முன்பெல்லாம் வீட்டுத் தரையும், வாசலும், தெருவும், ஏன் சுவரும்கூட மண்ணால் பூசப்பட்டவை. நெல், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட களத்து மேடுகளையும் மண் தரையில்தான் அமைப்பார்கள். இத்தகைய மண் தரைகளில் சாணத்தைக் கரைத்துத் தெளித்துப் பூசி மெழுகுவதுண்டு, துடைப்பத்தால் தட்டி தரையில் படிய வைப்பதுண்டு. அது 'பெயிண்ட்' போல தரையில் ஒட்டிக்கொள்வதால் தரை கெட்டியாக இருக்கும்.

கூரை வீடுகளின் மண் சுவர்களில்கூட சுண்ணாம்பு அடிப்பதற்குப் பதிலாக சாணத்தைத்தான் கரைத்துப் பூசுவார்கள். காரணம் சுண்ணாம்பு என்றால் காசு கொடுத்து வாங்க வேண்டும். சாணம் என்றால் தங்களது மாடுகளிடமிருந்தே கிடைக்கும்.

It is an adhesive to the floor and wall, nothing more than that. அதைத் தாண்டி அதற்கு மருத்துவ குணம் வெங்காயம் என்பதற்காக யாரும் தெளிப்பதில்லை, பூசுவதில்லை. சாணம் தெளிப்பதற்கான பயன்பாட்டுக் காரணம் இது ஒன்று மட்டுமே.

சரி, 'அவ்வளவு மருத்துவ குணம்' இருப்பதாகச் சொல்லப்படும் சாணத்தை இன்று ஏன் யாரும் தெளிப்பதில்லை? கிராமங்களில் கூட மொசைக் தரை, சிமெண்ட் வாசல்களுடன் கூடிய காங்கிரீட் வீடுகள் அதிகரித்து விட்டதால் சாணி தெளிப்பது தேவையற்றுப் போனது. களத்து மேடுகளும் எந்திர அறுவடையால் காணாமல் போயின அல்லது காங்கிரீட்டாய் மாறின. 

இதெல்லாம் அக்காவுக்கு எப்படித் தெரியும்? மண் வீட்டில் வசித்து எப்பவாவது சாணி தெளித்திருந்தால்தானே அதைத் தெளிப்பதற்கான காரணம் அக்காவுக்குப் புரிந்திருக்கும். காங்கிரீட் வீட்டிலேயே பிறந்து வளர்ந்தவராச்சே. சரி, இப்பவும் வாய்ப்பிருக்கு. தமிழிசை அக்கா
தனது வீட்டு மொசைக்/கிரானைட் தரைகளிலும், சுவர்களிலும் சாணம் தெளித்து அதன் 'மணம் கமழும் மருத்துவ மகிமையின்' சுகத்தை அனுபவிக்கட்டுமே? யார் தடுத்தது? அதற்கு லட்டி லட்டியாக சாணத்தை அமேசானில்தான் வாங்க வேண்டி வரும். 

சாணம் குறித்த நடைமுறை அறிவு எதுவுமே இல்லாத பஞ்சகச்சங்களும் மடிசார்களும் எடுக்கும் சாண வாந்தியை  அப்படியே இரு கைகளால் ஏந்திக் குடிக்கக் துடிக்கிறார்கள் தமிழிசைகள்‌.  குடிக்கட்டும். அது அவர்களது உணவு, அவர்களது உரிமை. சாணத்தின் பயன்பாடு பற்றித் தெரிந்த நமக்கு அக்காக்கள் வகுப்பெடுக்க வேண்டாம்!

ஊரான்

No comments:

Post a Comment