'கோன்' ஐ கோனாராக்கி, 'கோனேரி கோன் கோட்டை'யை மீட்கக் கிளம்பி இருக்கிறான் ஒரு கேனன். இந்த கேனனுக்குப் பின்னால் விசில் அடித்துக் கொண்டே பலநூறு கேனன்கள்.
யார் சொன்னது தமிழ்நாடு முன்னேறி விட்டது என்று? இல்லை இல்லை இது வடநாடுதான் என்பதை தம்பிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
செஞ்சிக்கோட்டை
செஞ்சிக்கோட்டையை கட்டியதோடு அதை ஆண்ட எத்தனையோ கோன்கள் இருக்கும்போது கோனேரி கோனை மட்டுமே இவன் தூக்கிக் கொண்டு திரிவது ஏன்?
உலகப் பாரம்பரிய சின்னமாக அண்மைய யுனெஸ்கோ அங்கீகாரத்துடன் செஞ்சிக் கோட்டை அது பாட்டுக்குக் கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள், போகிறார்கள்.
இந்தக் கோட்டையை இவன் யாரிடமிருந்து மீட்கப் போகிறான்? வெள்ளைக்காரன் போய்விட்டான் என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் விடுதலை நாள் கொடியேறினார்கள். ஒருவேளை முகலாயர்களோ, ராஜபுத்திரர்களோ,
நாயக்கர்களோ, மராட்டியர்களோ, நவாபுகளோ மாறுவேடம் பூண்டு மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் இரவோடு இரவாக கோட்டையைக் கைப்பற்றி விட்டார்களா என்ன?
எவனாக இருந்தாலும் இருபது ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு எட்டு மணிக்குக் கோட்டைக்குள் நுழைந்தால் ஐந்து மணிக்கு வெளியே வந்து விட வேண்டும். தம்பிகள் வேண்டுமானால் ஐந்து மணிக்கு மேல் பாறைகளுக்கு பின்னால் கள்ளுண்டு கவிழ்ந்து கிடக்க வாய்ப்பு உண்டே ஒழிய ஒருவனும் கோட்டைக்குள் இருக்க முடியாது. இந்தத் தம்பிகளை கோட்டையில் இருந்து மீட்கக் குரல் கொடுத்தாலாவது அதில் ஒரு நியாயம் இருக்கும்.
கோனேரி கோனை மீட்பதற்கான உனது குரலும், அயோத்தியையும் மதுராவையும் வாரணாசியையும் திருப்பரங்குன்றத்தையும் மீட்பதற்காகக் குரல் எழுப்பும் உனது சகலபாடிகளின் குரலும் சங்கமிக்கும் இடம் நாக்பூர்தான் என்பதை தமிழர்கள் உணராத வரை தமிழ்நாடு வடநாடாய் மாறுவதை ஒருபோதும் தடுக்க முடியாது.
ஊரான்
No comments:
Post a Comment