Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

Saturday, August 10, 2024

உள் ஒதுக்கீடும், 'தலித்' அரசியலும்!

பட்டியல் சாதிகளுக்குள்ளும், படி நிலை சாதி அமைப்பு முறையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. சேரி அமைப்பில், குடியிருப்புகளும் அந்தந்த சாதிக்கு ஏற்ப வேறு வேறாகத்தான் அமைந்துள்ளன. அவர்கள் தனித் தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கக் கூடியது. இந்துச் சாதிய சமூக அமைப்பில் ஒவ்வொரு சாதியும் மேலே உள்ள சாதியால் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்படுகின்றனர். 

சாதி இந்துக்களால், பட்டியல் சாதியினரே தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது ஒன்றுதான் இவர்களுக்கிடையிலான மிக முக்கியமான பொதுவான அம்சம். அதனால்தான் பட்டியல் சாதியினரை தீண்டத்தகாதவர்கள் (untouchables) என்றே அம்பேத்கர் தனது எழுத்துக்களில் பயன்படுத்தி உள்ளார்.

தீண்டத்தகாதவர்களுக்கிடையிலும் படி நிலை சாதி அமைப்பு முறையில் ஏற்றத் தாழ்வுகளும் பாகுபாடுகளும் நிலவுவதால், இவர்கள் அனைவரையும் தலித் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கி, இவர்கள் எல்லாம் ஒன்று போலக் காட்டுவது பொருத்தமற்றது என்பதே எனது புரிதல்.

இந்து மதம் இருக்கிற வரை சாதி இருக்கும். சாதி இருக்கிற வரை ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும் இருக்கும். 


முதலில் சாதிப்பற்றாகத் தொடங்கி, பிறகு அதுவே சாதி வெறியாக மாறி, தனது சாதிக்காரர்களுக்கு மட்டுமே சலுகை காட்டும் போக்கு அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருப்பதால்தான் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற சாதியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.

பட்டியல் சாதி உள் ஒதுக்கீடு குறித்த சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் சாதியினருக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குள்ளும் நாடு முழுவதும் ஒரு விவாதப் பொருளாக மாறி உள்ளது.

எனவே, இன்றைய சூழலில், இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரையில், OC, BC, OBC, MBC, SC, ST மற்றும் சிறுபான்மையினர் என வகைப்படுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொரு சாதிக்கும் அவரவர்களுக்கு உரிய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைக் கொடுத்து விடுவதுதான் இட ஒதுக்கீடு சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட முடியும். 

ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறப்பதனால் ஒருவருக்குத் தனிப்பட்ட திறமைகள் எதுவும் தானாக வந்து விடுவதில்லை. மாறாக, ஒருவர் பெறுகின்ற கல்வியும் பயிற்சியும் மட்டுமே அவரின் திறமையைத் தீர்மானிப்பதால், திறமை குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

எனது 40 ஆண்டுகால பெல் நிறுவன அலுவலக அனுபவத்தில், மக்கு ஐயர்களையும் பார்த்துள்ளேன், 
திறமைமிகு பட்டியல் சாதியினரையும் பார்த்துள்ளேன். இதுவரை கல்வி-வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், அவற்றைப் பெற்ற பிறகு, அவர்களின் வாரிசுகள், the so called பிற உயர் சாதியினரை முந்திச் செல்கின்றனர் என்பதையும் காண முடிகிறது. 

அனைவருக்கும் தாங்கள் விரும்பிய கல்வி கிடைப்பதற்கும், விரும்புகின்ற வேலையைப் பெறுவதற்குமான ஒரு சமூக கட்டமைப்பு உருவாகும் வரை, சாதி அடிப்படையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும்.

ஊரான்

Thursday, July 11, 2024

தலித்துகளுக்குள் ஆணவப் படுகொலை எனும் அவலம்!

பட்டியல் சாதி மக்களை 'அழுத்தப்பட்டவர்கள்' (suppressed) எனக் குறிக்கும் வகையில் முதன் முதலில் இவர்களை தலித் என்று மராத்தியில் அழைத்தவர் ஜோதிராவ் புலே. 

இந்து மதத்தில் நால்வர்ண அமைப்புக்குள் வராதவர்களை அவர்ணர்கள் என்று அழைப்பதுண்டு. இவர்கள் சனாதன தர்மத்தை ஏற்காதவர்கள்; இந்தியா முழுக்க விரவிக் கிடக்கும் இவர்களை மண்ணின் மைந்தர்கள் என்கிற பொருளில் தலித்துகள் என்று அம்பேத்கர் குறிப்பிட்டார் என்று சொல்வதுண்டு. 

தமிழில் இடத்தைக் குறிக்கும் சொல் தளம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள். தளம் என்கிற சொல்தான் மராத்தியில் தலித் என்று மருவியது. எனவே தலித் என்றால் மண்ணின் மைந்தர்கள் என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுவதோடு இச்சொல் பொருந்தினாலும், வர்ணசாதி அமைப்புக்குள் வரும் பல்வேறு இதர சாதியினரும் மண்ணின் மைந்தர்கள்தானே? எனவே மண்ணின் மைந்தர்கள் என்ற பொருளில் பட்டியலின மக்களை தலித்துகள் என்று அழைப்பது பொருத்தமானதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. 

ஆனால், அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் தலித் என்று புலே பயன்படுத்தியதும், சனாதனத்தை ஏற்காத அவர்ணர்கள் என்ற பொருளில் தலித் என்று பயன்படுத்துவதும் இன்றைய சூழலில் தலித் என்ற சொல் பொருந்துமா என்றும் தெரியவில்லை.


பள்ளர், பறையர், அருந்ததியர் உள்ளிட்ட தீண்டத்தகாத சாதியினர் உள்ளிட்ட அவர்ணர்கள், தலித்துகள் என்று அழைக்கப்பட்டாலும் இந்து மதம் அவர்களை உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்கிடையில் படிநிலை சாதிய ஏற்றத்தாழ்வுகளை கடைபிடிக்க வைத்துவிட்டது. அதனால்தான், தலித்துகள் என்று அடையாளப்படுத்தப்படும் அருந்ததியர் போராட்டங்களில் பிற தலித்துகள் பங்கேற்பதில்லை. பட்டியல் பிரிவு மக்கள் அனைவரும்  தங்களுக்குள் சமமாக நடத்தப்படுவதில்லை. இதுதான் இன்றைய கள எதார்த்தம். 

பட்டியல் சாதியில் உள்ள அனைவருமே சாதி இந்துக்களால் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டாலும்,
படிநிலை சாதி அமைப்பு முறையில் பட்டியல் சாதிகளுக்குள்ளும் உயர்வு தாழ்வு பார்க்கும் சனாதனமே கோலோச்சுகிறது.  அதனால்தான் பள்ளர் சாதிப் பெண்ணை காதலித்து மணம் முடித்தால் அருந்ததிய இளைஞன் பள்ளர்களால் ஆணவப் படுகொலை செய்யப்படுகிறான். 

கிராம கட்டமைப்பில்கூட சாதி இந்துக்கள் ஊர் என்கிற இடத்தில் தனியாகவும், பட்டியல் சாதி மக்கள் சேரி என்கிற இடத்தில் தனியாகவும் வாழ்கின்றனர். 

சாதி இந்துக்கள்கூட அருகருகே ஒன்று கலந்து வாழ்வதில்லை. சாதி வாரியாக அவர்கள் தனித்தனி தெருக்களில்தான் வாழ்கின்றனர். 

பார்ப்பனர்கள் அக்கிகாரம் எனத் தனியாகவும், பிற சாதியினர் தனித்தனி தெருக்களிலும் வாழ்வது இன்றும்கூட தொடர்கிறது. வெள்ளாளர்கள் மேலத்தெருவிலும், அவர்களுக்குக் கீழானவர்கள் கீழவீதிகளிலும் வாழ்வதை சனாதனம்தான் உறுதி செய்கிறது. 

சேரிகளிலும் இதே கட்டமைப்புதான். பள்ளர்களும், பறையர்களும், அருந்ததியர்களும் ஒரே தெருவில் இரண்டறக் கலந்து வாழ்வதில்லை. அவர்கள் தனித்தனி தெருக்களில்தான் வாழ்கின்றனர். இங்கேயும் மேல் பகுதியில் பள்ளர்களும், அதற்குக் கீழே பறையர்களும், அதற்கும் கீழே அல்லது சேரிக்கு வெளியே அருந்ததியர்களும் வாழ்கின்றனர். இந்தக் கட்டமைப்பும் சனாதனத்தை உள்ளடக்கியதுதான். பள்ளர்களும், பறையர்களும் அருந்ததியரை வையும் போது 'அவன் கெடக்கிறான் சங்கிலிப் பய' என்றுதான் சொல்கிறார்கள்.

கள எதார்த்தம் இப்படி இருக்க, பட்டியல் சாதி பிரிவு மக்களை தலித்துகள் என்று அழைப்பதற்கான அடிப்படை எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அம்பேத்கர் மொழியில் வேண்டுமானால் இவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கலாம். அம்பேத்கர் தனது எழுத்துக்களில் அப்படித்தான் அழைக்கிறார். இல்லையேல் பட்டியல் சாதியினர் என அழைக்கலாம். இவர்களுக்குள் பிரச்சனை எழும் போது குறிப்பிட்ட சாதிகளைத்தான் குறிப்பாகச் சொல்ல வேண்டும். இங்கேயும் அனைவரையும் தலித்துகள் என்று அழைத்தால் அது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். அருந்ததியரை, பள்ளர் படுகொலை செய்தால் அதை தலித்துகளின் ஆணவம் படுகொலை என்று அழைத்தால் அது கேலிக்கூத்துதானே?

தங்களுக்கும் கீழானவர்கள்தான் என பள்ளர்-பறையர்களால் கருதப்படும் பழங்குடியினர் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்பதும் இங்கே நினைவுகூறத் தக்கது.

பட்டியல் சாதிகளுக்குள்ளும், அதாவது தலித்துகளுக்குள்ளும் சனாதனம் கோலோச்சும் பொழுது, அவர்களுக்குள்ளும் சாதியப் படிநிலையில் ஏற்றத்தாழ்வுகள் கடைபிடிக்கப்படும் பொழுது, அவர்களை, அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளிளோ அல்லது சனாதனத்தை ஏற்காத அவர்ணர்கள் என்ற பொருளிளோ இனியும் அவர்களை தலித்துகள் என்று அழைப்பது பொருத்தமானதுதானா? மண்ணின் மைந்தர்கள் என்ற பொருளில் அழைப்பது பொருத்தமானதல்ல என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

எனவே, கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் அவர்களை, பட்டியல் சாதியினர் என்று அழைப்பதும், சமூக வாழ்வியல் முறைகளில் அந்தந்த சாதிகளாகவே அழைப்பதும் பொருத்தமாக இருக்கும் எனக் கருதலாமா?

அருந்ததியர் சாதியைச் சார்ந்த அழகேந்திரன் என்பவர், பள்ளர் சாதிப் பெண்ணை காதலித்து மணம் முடித்ததற்காக,
பள்ளர் சாதியைச் சார்ந்த பிரபாகரன் என்பவரால்  அண்மையில் அரங்கேறிய ஆணவப் படுகொலை உணர்த்தும் பாடம் இதுதானோ?

ஊரான்

Saturday, March 26, 2016

“பாரத் மாதா கீ ஜே!” சொல்லலாமா? கூடாதா?

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் ‘பாரத் மாதா கீ ஜே!’ எனச் சொல்ல மறுத்ததற்காக ஆல் இண்டியா மஜ்லிஸ்-ஏ-இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான் என்னும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

‘பாரத் மாதா கீ ஜே!’யில்தான் தேசப்பற்று இருக்கிறதாம். ‘பாரத் மாதா கீ ஜே’ என ஒருவன் சொல்லிவிட்டால் அவன் தேசப்பற்று உள்ளவனாம். சொல்லாதவனெல்லாம் தேசத்துரோகியாம். அதனாலே, `இந்தியாவில், ‘பாரத் மாதா கீ ஜே’ என்று சொல்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம்’’ என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொல்கிறார்.

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் தற்போது "நாங்கள் ஜெய் ஹிந்த் அல்லது பாரத் மாதா கீ ஜே!” என்ற கோஷத்தை எழுப்புவோம்' என்று கூறத் தொடங்கிவிட்டார்களாம். அதனாலே தேசியம் குறித்த விவாதத்தில் பாஜகவுக்கு சித்தாந்த ரீதியிலான வெற்றி கிடைத்துவிட்டதாம். இப்படி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவிக்கிறார்.

ஆனால் தேசியம் குறித்தும் ‘பாரத் மாதா கீ ஜே!’ குறித்தும் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

“இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மதித்து நடப்பதும், இந்திய நாட்டிற்காக உழைப்பதும், நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதும்தான் தேசப்பற்று” என்கிறார் ஒரு தொழில் முனைவோர்.

“ஒருவன் தான் அணிந்திருக்கும் டி-சட்டையில் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என எனக் குத்திக் கொள்வதில் இல்லை தேசப்பற்று. மாறாக சாதி-மத-இன வேறுபாடுகளை மறந்து இந்தியர்கள் அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதிலும், ஊழல் மற்றும் மதவாதத்திற்கு எதிராக குரல்கொடுப்பதிலும் இருக்கிறது தேசப்பற்று” என்கிறார்  ஒரு டாஸ்மாக் ஊழியர்.

“கடல்தான் எனக்கு சோறு போடுகிறது; உடை தருகிறது; எனது குழந்தைகளுக்கு படிப்புத் தருகிறது. எனது குடும்பத்தையே வழி நடத்துகிறது; எனவே கடல்தான் எனக்குத் தாய். கடல் தாய்க்குப் பிறகுதான் ‘பாரத மாதா’, சாமிகள், கோவில்கள் இன்ன பிற.,இன்ன பிறவெல்லாம். என்னைப் பொருத்தவரை கடல்தான் தேசத்தைவிடப் பெரியது” என்கிறார் ஒரு மீனவர்.

“தெருக்களையும், கழிவறைகளையும் சுத்தம் செய்யும் ஒரு துப்புறவுத் தொழிலாளிக்கு, தன்மானத்திற்காகப் போராடும் ஒரு தலித்துக்கு, ”‘பாரத் மாதா கீ ஜே!’” என்பது பொருளற்ற ஒன்று. பல நூற்றாண்டுகளாக ஆதிக்கச் சாதியினரின் வன்கொடுமைகளுக்கு ஆட்பட்டுவரும் தலித்துகளுக்கு ‘பாரத் மாதா கீ ஜே!’ என்கிற முழக்கம் ஒரு இழிவான முழக்கமாகும். தலித்துகள் மீது அநீதியையும், தீண்டாமையையும் கடைபிடிக்கும் சாதி அமைப்பு முறை தொடர வேண்டும் என விரும்புகின்றவர்கள்தான் ‘பாரத மாதா’ பற்றி பேசுகின்றனர். என்னைப் பொருத்தவரை தேசப்பற்று என்பது இந்த நாட்டில் வாழ்பவர்களைப் பற்றி பேசுவதும், சமத்துவம், சமூக நீதி, சுதந்திரம் மற்றும் ஊழலற்ற தம்மை பற்றி பேசுவதுமாகும். இடை நீக்கம் செய்யப்பட்ட MLA வாரிஸ் பதான் மட்டுமல்ல நான்கூட ‘பாரத் மாதா கீ ஜே!’ சொல்ல மாட்டேன் என்கிறார் ஒரு துப்புறவுத் தொழிலாளி.


செய்தி ஆதாரம்: THE HINDU 27.03.2016. நன்றி!

Thursday, October 29, 2015

ஷர்மாவும் வர்மாவும் தலித் ஆன கதை!

மத்திய காலத்தில் (கி.பி.8 முதல் 18ம் நூற்றாண்டு காலகட்டத்தில்) இந்தியாவில் ஊடுருவிய இஸ்லாமியர்களால் தூய்மையற்ற தொழில்கள் தலித்துகள் மீது திணிக்கப்பட்டதாலேயே அவர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆக்கப்பட்டார்கள் என்கிற ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிஜர் சோன்கர் சாஸ்திரி.

அவர் மேலும் சொல்கிறார்.

மத்திய காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவில் ஊடுருவிய போது அவர்களுக்கு மிகப்பெரிய தடையாக இந்துயிசம் இருந்ததாம். குறிப்பாக பார்ப்பனர்களும் சத்திரியர்களும் மட்டுமே இந்துமதப் பண்பாட்டின் பாதுகாவலர்களாகவும் பூகோள எல்லையைக் காப்பவர்களாகவும் இருந்தார்களாம். இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு இவர்கள் மீது வன்கொடுமைகள் ஏவப்பட்டதாம்.

செத்தாலும் பரவாயில்லை; எது நேர்ந்தாலும் இஸ்லாத்தைத் தழுவ முடியாது என சில பார்ப்பனர்களும் சத்திரியர்களும் முடிவெடுத்தார்களாம். இவர்களின் மத கௌரவத்தையும், சுயமரியாதையையும், தேசிய பெருமிதத்தையும் சிதைப்பதற்காக மலக்கழிவுகளை எடுக்கின்ற வேலைகளிலும், தோல் தொடர்பான வேலைகளிலும் பார்ப்பனர்களும் சத்திரியர்களும் ஈடுபடுத்தப்பட்டார்களாம். அதனாலேயே பார்ப்பனர்களும் சத்திரியர்களும் தீண்டத்தகாதவர்கள் அதாவது தலித்துகள் ஆக்கப்பட்டார்களாம்.

கி.பி.400க்குப் பிறகு மாட்டிறைச்சி தடை செய்யப்பட்ட காலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்கிற தீண்டாமையின் தோற்றம் குறித்த அம்பேத்கரின் முடிவிலிருந்து பிஜர் சோன்கர் சாஸ்திரி மாறுபடுகிறாராம்.

மாட்டிறைச்சியை வெறுத்த இந்துக்கள் (உயர்சாதியினர்) மாட்டிறைச்சி உண்ணும் சிலரை தீண்டத்தகாதவர்களாக்கினர் என தொகுதி 7ல் (ஆங்கிலம்) அம்பேத்கர் கூறிய கருத்தை மறுதளித்து,. தூய்மையற்ற தொழில்தான் தீண்டாமைக்குக் காரணம் என்கிறார் பிஜர் சோன்கர் சாஸ்திரி.

தீண்டாமை குறித்த இவரது கருத்து ஆர்.எஸ்.எஸின் இணைச்செயலாளர் கிருஷ்ண கோபால் என்பவர் அண்மையில் ஆர்கனைசர் பத்திரிக்கையில் எழுதிய கருத்துடன் ஒத்ததாக உள்ளது.

கிருஷ்ண கோபால் கருத்தின்படி தீண்டாமை குறித்த முதல் சான்று தாகிர் குடும்பத்தில் உள்ளதாம். இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுடனான போரில் தாகிர் தோற்றுப் போனானாம். ஆக்கிரப்பாளர்கள் தாகிரின் அரண்மனைக்குள் நுழைந்த போது, ”அவர்கள் மிலேச்சர்கள், அதாவது அழுக்கானவர்கள், அவர்கள் நம்மைத் தொட்டால் நாம் அசுத்தமாகி விடுவோம். அதனால் நாம் நம்மையே கொன்று கொள்வோம்” என தாகிரின் குடும்பப் பெண்கள் சொன்னார்களாம். .இஸ்லாமியர்கள் தொட்டதால்தான் தாகிர்கள் தீண்டத்தகாதவர்களானார்கள் என்பதுதான் கிருஷ்ண கோபாலின் கருத்து..

இதுதான் தீண்டாமையின் முதல் சான்றாம்.   

பிஜர் சோன்கர் சாஸ்திரி மேலும் சொல்கிறார்…

தலித்துகளில் ஒரு சாரார் அம்பேத்கரை தவறாகப் புரிந்து கொண்டார்களாம். 1927ல் மனுதர்மத்தை எரித்த அம்பேத்கர் 1948ல் மனுவுக்கு நற்சான்றிதழ் அளித்தாராம். அம்பேத்கர் 1927ல் சொன்னதை ஏற்கும் இன்றைய தலித்துகள் 1948ல் அம்பேத்கர் சொன்னதை ஏற்க மறுக்கிறார்களாம்.

இது அம்பேத்கர் பார்வையில் ஏற்பட்ட மாற்றமாம். ஆரியக் கருத்தியலை பிற்காலத்தில் அம்பேத்கர் மறுதளித்தாராம். ஆரிக் கருத்தியல் என்பது மிகப்பெரிய அரசியல் நகைச்சுவையாம். தாங்கள் மட்டுமே அந்நியர்கள் அல்ல; பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அந்நியர்களே என்கிற கருத்தியலை ஊக்குவிக்கவே பிரிட்டிஷார் ஆரியக் கருத்தியலை உயர்த்திப் பிடித்தார்களாம்.

கடைசியாக பிஜர் சோன்கர் சாஸ்திரி சொல்கிறார்.

இஸ்லாமியர்களால் மலைப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்ட பார்ப்னர்களும் சத்தியர்களுமே பின்னர் பழங்குடியினர்(ST) ஆனார்களாம். (ஆதாரம்: THE HINDU, 29.10.2015)

தீண்டாமைக்கு வித்திட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதே ஒரு கடைந்தெடுத்த அடிமுட்டாள்தனமான கருத்து. தீண்டாமை குறித்து மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ள விவரங்களை ஏற்கவே நாம் பரிசீலித்திருக்கிறோம் (தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2)

மனுவின் காலம் கி.மு 150லிருந்து கி.மு 200 என்கின்றனர். ஆனால் இஸ்லாமியர்களின் காலமோ கி.பி 1200லிருந்துதான் தொடங்குகிறது. கி.மு.150க்கு முன்பே தீண்டாமையை மனு பதிவு செய்திருக்கிற போது கி.பி.1200க்குப் பிறகு வந்த இஸ்லாமியர்களே தீண்டாமைக்குக் காரணம் என்று சொல்வது எவ்வளவு கடைந்தெடுத்த பொய்!. இந்தப் பொய்யை பிஜர் சோன்கர் சாஸ்திரி என்கிற ஒரு தலித் மூலமாக இந்துத்துவாவாதிகளால் சொல்ல முடிகிறது என்றால் அதுதான் இந்துத்துவாவாதிகளின் வெற்றி! நமது தோல்வி!

இங்கே அர்ஜீன் சம்பத்துகள் இருக்கும் போது அங்கே பிஜர் சோன்கர் சாஸ்திரிகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே! 

அம்பேத்கர்-பெரியார் இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுக்காத வரை நாம் தோற்றுக் கொண்டேதான் இருப்போம்.

குறிப்பு: ஷர்மா பார்ப்பனர்களைக் குறிக்கும் வர்மா சத்திரியர்களைக் குறிக்கும்.

செய்தி ஆதாரம்: THE HINDU, 29.10.2015

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! இறுதிப் பகுதி

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம் சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!
எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

Monday, August 31, 2015

வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

மகாராஷ்டிராவில் - தங்களை வணங்கவில்லை என்பதற்காக தலித் முதியவரை அடித்துக் கொன்ற மராத்தா சாதி வெறியர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம், சங்கிலி மாவட்டம், பொர்கான் கிராமத்தில், வாமன் நியாநிர்குனி என்ற 62 வயது முதியவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது மராத்தா ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சந்திரகாந்த் பாட்டில், சச்சின் பாட்டில் என்கிற இரு இளைஞர்கள் அங்கே வருகின்றனர். இவர்களை அம்முதியவர் வணங்கவில்லை என்பதற்காக அந்த முதியவரை அந்த இடத்திலேயே அத்துக் கொன்றுள்ளனர். முதலில் பின்பக்கமாக தாக்கி உள்ளனர். “ஏன் அடிக்கிறீர்கள்?” என அவர் கேட்டதற்கு அவரை அடித்தேக் கொன்றுள்ளனர்.

வணங்கவில்லை என்பதற்காக யாராவது அடித்துக் கொள்வார்களா என நீங்கள் வினவக்கூடும். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிறுவர்களைக்கூட தாழ்த்தப்பட்ட முதியவர்கள் “கும்பிடுறன் சாமி!” என்று வணங்குவதுதானே வழக்கமாக இருந்தது; இன்றும் பல இடங்களில் இருந்து வருகிறது.

இம்முதியவர், மும்பைக்குச் சென்று சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து சற்று வசதியுடன் ஊர் திரும்பி, தான் சேர்த்த வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கொண்டு தனது நிலத்தில் செலவு செய்து நல்ல விவசாயத்தைக் கண்டுள்ளார்.

பங்காளி தன்னைவிட முன்னேறிவிட்டால் அவனையேக் கொலை செய்யும் இந்தியச் சமூகத்தில், ஒரு தாழ்த்தப்பட்டவன் முன்னேறுவதை ஏற்றுக் கொள்வார்களா என்ன? ஒரு தாழ்த்தப்பட்டவன் முன்னேறியதைக் கண்டு பொறாமைப்பட்டு “ஒரு தாழ்த்தப்பட்டவன் எப்படி முன்னேறலாம்?” என்ற ஆத்திரத்தில்தான் அவரைக் கொன்றுள்ளனர்.

அம்முதியவரின் மகன் ரத்ணதீப் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் அவ்விளைஞர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“சம்படா கிராமீன் மகிளா சன்ஸ்தா” என்கிற அமைப்பினர் கண்டனக் குரல் எழுப்பிய பிறகே இச்செய்தி வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது.

(செய்தி ஆதாராம் THE HINDU: 20.07.2015)

பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது. அதில் பிராமணன் தகப்பன் மரியாதையையும், சத்திரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது. (மனு: 2 135)

ஆளும் பரம்பரைக்கே இந்த நிலை என்றால் சேவை செய்யும் சூத்திரனின் நிலையைப் பாருங்கள்.

தொண்ணூறு வயதுக்கு மேல்தான் சூத்திரனுக்கு மரியாதை கிடைக்கும். (மனு: 2.137).

சூத்திரனுக்கும் கீழே தள்ளப்பட்டு ஊருக்கு வெளியே சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமானது அல்லவே!

மனு வகுத்து வைத்த சட்டம்தான் ஒரு பண்பாடாக, வாழ்க்கை முறையாக மக்களிடையெ ஊறிப்போயுள்ளது. மரியாதை செய்வதில் கூட ஏற்றத்தாழ்வை உருவாக்கி அதை அன்று சட்டமாக்கினான் மனு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மனுவின் சட்டம் இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்றால் பார்ப்பனியம்தானே இன்னமும் கோலோச்சுகிறது.

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!

எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!