Monday, September 9, 2024

மொய்: காசைவிட எழுத்து வலிமையானது!

மொய் எழுதலாமா?

"மொய்" - அது திரும்ப அடைக்கப்பட வேண்டிய கடன். கடனை அடைக்கவில்லை என்றால் பிறகு பிணக்குதான்.

எனவே,

"மொய் எழுதாதீர்கள். 'எழுதியதை எழுதுங்கள்'. காசைவிட எழுத்து வலிமையானது".

கடந்த நாற்பது ஆண்டுகளாக, திருமணங்களில் எழுத்தைத் தவிர வேறெதையும் நான் எழுதியதில்லை. 
யாருக்கு தியானம் தேவை?

எங்கே தியானம் போதிக்கப்படுகிறதோ அங்கே சனாதனம் புகுத்தப்படுகிறது என்று பொருள். இப்பொழுது யோகாவையும் சனாதனம் உள் வாங்கிக் கொண்டது.

அறிவாளிகளுக்கு தியானம் தேவைப்படாது. உழைப்பாளிகளுக்கு யோகா தேவைப்படாது. இவை இரண்டும் யாருக்கானது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி.
***

ஞானம்: முட்டாள்களின் பிதற்றல்

ஞானம் என்றாலும், அறிவு என்றாலும் ஒன்றுதான். முன்னது சமஸ்கிருதம், பின்னது தமிழ். 

ஒரே பொருளைத் தரக்கூடிய சொற்களுக்கிடையில் வேற்றுமையைக் கற்பித்து மக்களை மயக்கும் மாயவித்தைக்கு ஒரு சிலர் மயங்கவும் செய்கின்றனர். 

அறிவு எனும் அழகு தமிழ் இருக்க ஞானம் எனும் சனாதன நச்சு எதற்கு? அறிவை விழுங்கு, ஞானத்தை துப்பு.
***

வினை தீர்ப்பவனா? வினை விதைப்பவனா?

விநாயகன் உள்ளிட்ட இந்து மதக் கடவுள்கள் அனைத்தும் பொதுமக்களின் ஆன்மிகத் தேவைக்காக உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக, பார்ப்பனர்களின் வருவாய்க்காக உருவாக்கப்பட்டவை. 

இது புரியாதவரை, புதிய புதிய கடவுள்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். பார்ப்பனர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டேதான் இருப்பார்கள். 
பொதுமக்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
***

விநாயகர் சதுர்த்திக் கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பதனால் சுற்றுச் சூழல் கெடாதா?

***
ஆன்மீகத்தால் யாருக்கு ஆதாயம்?

ஆன்மீகத்தால் அல்லல் தீரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சமூக நீதிதான் மக்களை உய்விக்கும் என்ற திராவிடக் கருத்தியலை தமிழர்கள் நம்புகிறார்கள். பொதுவுடமைதான் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வல்லது என்று கம்யூனிஸ்டுகள் நம்புகிறார்கள். 

இங்கே, யார் வேண்டுமானாலும், திராவிடக் கருத்தியலை கரிச்சுக் கொட்டலாம். கம்யூனிசத்தை வசை பாடலாம். ஆனால், ஆன்மீகத்தை மட்டும் எவரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாதாம். என்னங்கடா உங்க நியாயம்?

திராவிடக் கருத்துக்களால், கம்யூனிசக் கோட்பாடுகளால் பலன் அடைபவர்கள் பாமரர்கள். ஆனால், ஆன்மீகத்தால் பலன் அடைபவர்கள் பார்ப்பனர்கள் மட்டும்தானே? இது ஏன் உனக்கு உரைக்கவில்லை?

***
அவாள்களுக்கு 'ஆன்மீகம்' ஒரு 'வணிகப் பொருள்!' 
'ஆன்மீகம்' அருவமானது. அதற்காக நீ பணத்தை இழக்கிறாய். அவன் பணத்தை ஈட்டுகிறான்.

***
கடவுள் இருக்கிறது என்று நம்புகிற அனைவருமே மன நோயாளிகள்தான். மனநோயாளிகளின் நாடு எப்படி முன்னேறும்?

***
இந்த உலகில் யார் இருக்கலாம்?

இந்த உலகில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள் இருக்கலாம். இவர்கள் இந்த உலகின் நவீன கால சிற்பிகள்.

ஆனால், இந்த உலகில் புரோகிதர்கள், குருக்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் என்ற போர்வையில் ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கக் கூடாது. காரணம் இவர்கள் மனித குலத்தின் அழிவுச் சக்திகள்.

ஊரான்

குறிப்பு: கடந்த மூன்று நாள் முகநூல் பதிவுகள்

1 comment: