Wednesday, August 28, 2024

புள்ள புடிக்கிறவனும் புள்ளையார் சதுர்த்தியும்!

நமக்கு, புள்ள புடிக்கறவனப் பார்த்தாலும் பயம். புள்ளையாருப் புடிக்கறவனப் பார்த்தாலும் பயம். புள்ள புடிக்கிறவன் எங்கிட்டிருந்து வரானே தெரியாது. அவன் நம்ம ஆளு கிடையாது. இப்பல்லாம் புள்ளப் புடிக்கிறவனப் பார்த்து நாம உஷாராயிட்டதனால அது ரொம்பவே கொறைஞ்சு போச்சு.

புள்ளையாருப் புடிக்கிறவனும் நம்ம ஆளு கிடையாதுதான். ஆனா நம்ம ஆளுங்ககூடவே சேர்ந்து அவனுங்களும் வர்றதுனால கொஞ்சம் ஏமாந்துகிட்டு இருக்கோம்.


எது எப்பிடியோ, இன்னும் ஒரு வாரத்துல புள்ளையாரு சதுர்த்தி வரப்போவுதுஒரு காலத்துல புள்ளையாருக்குப் பதிலா கொழுக்கட்டையதான் புடிச்சோம். ஆனா, இப்ப எல்லாம் கொழுக்கட்டையப் புடிக்கிறோமோ இல்லையோ, வீட்டுக்கு வீடு புள்ளையாரப் புடிச்சு வாசல்ல குந்த வச்சிட்றோம். இப்பதான் எல்லாம் ஃபேஷனாகிப் போச்சே! நாம மட்டும் விதிவிலக்கா என்ன?
 
என்னென்னமோ டக்கால்ட்டி வேலையெல்லாம் செஞ்சு பார்க்குறானுங்க. வழிக்கி விழுந்ததுதான் மிச்சம். ஆனாலும் அசர மாட்றானுங்க. பழைய டெக்னிக்கல்லாம் எடுபடலன்னா, எப்புடி புள்ள புடிக்கிறவனுங்க புது புது டெக்னிக்கோட வருவானுங்களோ, அதுபோல, புள்ளையாருப் புடிக்கிறவனுங்களும் வருவானுங்க.
 
தமிழ்நாட்டு பள்ளிக்கூடத்துக்குக் கொடுக்க வேண்டிய காச கொடுக்கிறானோ இல்லையோ, புள்ளையாருப் புடிக்க டெல்லியிலேயிருந்து காச எறக்குவானுங்க.
 
அதனால களிமண்ணுக்கு ஏக கிராக்கி வரும். காசு இருந்தா போதுமா? களிமண்ணு வேணாமா? கவலய விடுங்க. களிமண்ணத் தேடி எங்கேயும் அலைய வேணாம்.
 
"தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதிய ஏன் தர்ல?" என்ற தலைப்புல தொலைக்காட்சிகள்ல விவாதம் ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு நாலஞ்சு நாளைக்கு தொலைக்காட்சி விவாதங்கள விடாமப் பாருங்க.

வலதுசாரி பேர்ல கலந்துக்கிறவனுங்க ண்டைய லேசா தட்டித் தூங்குங்க.  ஆள இல்ல, மண்டைய மட்டும். உள்ள பார்த்தீங்கன்னா அசந்துடுவீங்க. டன் கணக்குல களிமண்ணு உருண்டு கிடக்கும். அள்ளி எடுங்க. ஆயிரம் புள்ளையாரு ரெடி.
 
களிமண் எடுத்த எடத்த, எம்ட்டியா வுட்டுடாதீங்க. எதுக்கும்  கொஞ்சம் கோமியத்த ஊத்தி வைங்க. பின்னாடி தேவைப்படலாமில்ல?
 
ஊரான்
 
(குறிப்பு: கல்விக்குத் தர வேண்டிய நிதியைத் தமிழ்நாட்டிற்குத் தரமறுக்கும் ஒன்றிய அரசு குறித்து சில தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்ற வலதுசாரி பிரமுர்களின் மண்டையில இருந்து வெளியே வந்து விழுந்த உருட்டுகளைக் கேட்ட போது என் மண்டையிலே உதித்தது.

விவாதத்தின் போது, நெறியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல், சங்கிகளின் மூக்குகள் போன கோணலைப் பார்த்த போது, எனக்கு புள்ளையரின் தும்பிக்கைதான் நினைவுக்கு வந்தது)

No comments:

Post a Comment