Showing posts with label சென்னை புத்தகக் கண்காட்சி மாசேதும் கவிதை Chennai Book fair. Show all posts
Showing posts with label சென்னை புத்தகக் கண்காட்சி மாசேதும் கவிதை Chennai Book fair. Show all posts

Monday, December 30, 2024

படைப்புகள் பாமரனின் கைகளில் தவழுவது எப்போது?

சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியாச்சு!
ஒவ்வொரு ஆண்டும் 
ஓடிச் செல்லும் நான், 
இந்த ஆண்டு எட்டிப் பார்ப்பேனா? தெரியவில்லை!

தொடங்கிய இரண்டு நாட்களில் சிலரது அலப்பறைகளும் அங்கலாய்ப்புகளும் 
மெய்நிகர் உலகை மேவு(ய்)கின்றன.

பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்து, 
பக்கங்களும் விலையும் ஆயிரங்களைத் தாண்டிக் 
கனக்கும் பொழுது, 
எளியோரால் எட்டித்தான் பார்க்க முடியுமே ஒழிய, 
பொறுமையாய் புரட்டிப் பார்க்க இயலுமோ?


"விலையைப் பற்றிக் கவலைப்படாமல், 
வாங்குவோரே உண்மையான வாசகர்கள்" என்றும், "மற்றோரை வழிப்போக்கர்கள்" என்றும் வசைபாடுகின்றான்,
தனது கவிதைக் கட்டுக்கு ஆயிரத்துக்கு மேல் விலை குறிக்கும் ஒரு கவிஞன்!

ஒன்றரை அடியில், 
பத்து ரூபாயில், 
உலகையே வலம் வருகிறான் வள்ளுவப் பெருந்தகை!
ஆனால், சிலர்
நீட்டி முழக்கி எழுதினாலும்
சில அடிகள் கூட நகர முடியாமல் தடுமாறுவது ஏனோ? ஏனோ?

பாக்களின் வரிகள் 
"பேரண்டத்தின் ஊடே 
ஓர் சூறைக்காற்று 
சுழன்று வீசுவது போல், 
துயரச் சிக்கல்களைப் பிரித்தெடுக்க வேண்டும்" (1)

இல்லையேல், அரசு நூலகங்களிலும் பரன்களிலும் 
பலரது படைப்புகள் 
உறங்குமே ஒழிய
பாமரனின் கைகளில் 
ஒரு போதும் தவழாது! 

ஊரான்

குறிப்பு: (1). செஞ்சீனப் புரட்சியாளன் தோழர் மாவோவின் கவிதை வரிகள். "மா சேதுங் கவிதைகள்". பொதுமை வெளியீடு, 1981

தொடர்புடைய பதிவுகள்