Showing posts with label திருவள்ளுவர் பரிமேலழகர் கலைஞர் மு வரதராசனார் தமிழ் இலக்கியம். Show all posts
Showing posts with label திருவள்ளுவர் பரிமேலழகர் கலைஞர் மு வரதராசனார் தமிழ் இலக்கியம். Show all posts

Sunday, December 29, 2024

'சொல்' அம்புகள்!

காசாவின் இதயத்தைத் துளைக்கும் இஸ்ரேலின் ஏவுகணைக் 'கொல்' அம்புகள் போல,
நம் நெஞ்சுக் கூட்டை ஓயாது துளைக்கும் நாவின் 'சொல்' அம்புகள்! (4)

எதிரிகளின் கொலைக் களத்திலிருந்துக் 'கொல்' அம்புகள் ஏவப்படுகின்றன.
ஆனால், 
உறவெனும் பசப்புத் தளத்திலிருந்து அல்லவோ 'சொல்' அம்புங்கள் வீசப்படுகின்றன? (8)


காசாவின் சிதிலமடைந்த இதயத் துண்டுகளை எப்பாடுப் பட்டேனும் ஒட்டவைத்துவிட முடியும்.
ஆனால்,
சிதறிய நம் நெஞ்சத் துண்டுகளை..., 
அந்த 'இறைவனே' முயன்றாலும்...? முடியாத ஒன்று! (12)

காசாவில் 'கொல்' அம்புகளைத் தாங்கும் 'பதுங்குக் குழி' எனும் கவசங்கள் உண்டு.
ஆனால், 
பஞ்சு போன்ற நம் நெஞ்சுக் கூட்டைக் காக்க,
கல்லோ, இரும்போ, தங்கமோ எதைக் கொண்டு வேய்ந்தாலும்,
அவற்றையும் கரைத்து, அரித்து, தேய்த்துத் துளையிடும் 
ஆற்றல் வாய்ந்தவை அன்றோ நாம் வீசும் 'சொல்' அம்புகள்! (14)

'கொல்' அம்புகள், ஒன்று உடலை முடமாக்கும், இல்லையேல் உயிரை ஒரேயடியாய்ப் போக்கிவிடும். ஆனால்,
'சொல்' அம்புகளோ, உள்ளத்தை முடமாக்கி, சாகவும் விடாமல், வாழவும் விடாமல், ஒவ்வொரு நொடியும் நம்மைத் துளைத்துக் கொண்டே இருக்கும்! (16)

'கொல்' அம்புகள் ஒரே நேரத்தில் ஒன்றாய், பத்தாய், நூறாய்கூட கொத்தாய் வரக்கூடும்.
ஆனால்,
'சொல்' அம்புகளோ, 
நா மொழியோடு முக மொழியும் சேர்ந்து 'மூஞ்சைக் காட்டுவதால்', அந்த 'உலகளந்தப் பெருமாளே' வந்தாலும் அளவிட முடியாததாய், 
ஒன்று இரண்டாய், இரண்டு நான்காய், நான்கு பதினாறாய், பதினாறு இருநூற்று ஐம்பத்தாறாய்... பிஷனாய்ப் (fission) பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும்! (20)

'பாசிஸ்ட்டுகள்' 'கொல்' அம்புகளை ஏவுகிறார்கள்.
'சேடிஸ்ட்கள்' 'சொல்' அம்புகளை வீசுகிறார்கள்! (22)

'கொல்' அம்புகளால் மாண்டவர் போக, எஞ்சியவர் உண்டு.
ஆனால், 
'சொல்' அம்புகளால் மீண்டவர் எவரும் உண்டோ? (24)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

(குறள் 129)

என்று சும்மாவா சொன்னான் வள்ளுவன்?

ஊரான்