Tuesday, February 17, 2015

செவ்வாய் கிரகமும் சாதித் தூய்மையும்!

வெப்ப மண்டலத்தில் வாழும் நமது நிறம் என்னவாக இருக்க வேண்டும்? நம்மைப் போன்ற வெப்ப மண்டலத்தில் வாழும் எத்தியோப்பியா, நைஜீரியா, சூடான் போன்ற ஆப்பிரிக்க நாட்டு மக்களின் நிறம் இன்றுகூட என்னவாக இருக்கிறது? அதுவே அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்களின் நிறம் எப்படி மாறியது?

இனத்தூய்மை காக்கப்பட்டிருந்தால் நாமெல்லாம் லெமூரியர்களாக இருந்திருப்போம். என்ன செய்ய? லெமூரியாவை கடல் உள்வாங்கிய போது நாம் வடக்கு நோக்கி நகர்ந்திருக்க வேண்டும். இதனால் சற்றே மாறுபட்ட தட்ப வெட்ப சூழலில் வாழ நேரிட்ட போது நமது நிறம் ஓரளவு மாற்றத்தைக் கண்டிருக்க வேண்டும். இதற்குக்கூட சிலநூறு ஆயிரம் ஆண்டுகள் பிடித்திருக்கும்.

அதே வேளையில் உலகெங்கும் இனங்களின் இடப்பெயர்வுகளும் அவைகளுக்குள் ஒன்று கலத்தலும் தவிர்க்க முடியாதவையாக மாறியிருக்க வேண்டும். அதுவும் ஆரியர்கள், அராபியர்கள் உள்ளிட்ட வெண் தோல் இனத்தவர்கள் நம்முடன் கனிசமாக ஒன்று கலந்திருக்க வேண்டும். அதனால்தான் நம்மிடையே இன்று சிவப்பு நிறமும், மாநிறமும் அதிகரித்துள்ளன. நம்மிடையே ‘பாப்பாத்திகள்’ எப்படி தோன்றினார்கள்? ஆங்கிலேயன் ஓராயிரம் ஆண்டுகள் நம்மை ஆண்டிருந்தால் ‘வெள்ளைக்காரிகளை’ நாம் அதிகம் கண்டிருப்போம்’. இன்று அசலான சாதிக்காரன் ஒருவனும் இல்லை. இனக்கலப்பின் விளைவே இன்று நாம் காணும் பல்வேறு சாதிகளும் அதன் உட்சாதிகளும்.  (மனு: 10: 1- 131).

ஊரைத்தாண்டி மட்டுமல்ல மாநிலங்கள் பல கடந்து, நாடுகள் பல கடந்து, கண்டங்கள் பல கடந்து இன்று நம் வீட்டுப் பையனும் பெண்ணும் உலகையே வலம் வரும் இன்றைய உலக மயச்சூழலில் சாதித் தூய்மை பற்றி பேசுகிறீர்களே! இதுவெல்லாம் சாத்தியமா? தன் ஊர்தான் உலகம் என்று வாழ்பவனுக்கு மட்டும் உங்களது சாதித்தூய்மை எடுபடலாம். அதுவும் பக்கத்து ஊர்க்காரன் உங்களது ஊருக்குள் திருட்டுத்தனமாக நுழையாதவரை.

சாதிக்காவலர்களே! கொஞ்சம் செவ்வாய் கிரகத்தை அன்னாந்து பாருங்கள். அங்கே அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பியா உள்ளிட்ட கண்டங்களிலிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு மத-இன-சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் வாழப்போகிறார்கள். இந்தியாவிலிருந்து ஏன் கேரளாவிலிருந்துகூட செவ்வாய்க்குச் செல்கிறார்கள் தெரியுமா?

சாதித்தூய்மை பற்றி பேசும் வன்னியன், தேவன், கள்ளன், நாடான் உள்ளிட்ட இன்ன பிற தமிழ்ச்சாதி இளைஞர்களே! கருப்பாய் உள்ள தமிழ்ப் பெண்களை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு நீங்கள் மட்டும் ஏன் சிவப்பாய் இருக்கும் வெள்ளைப் பெண்களை மட்டும் உங்களது வாழ்க்கைத் துணையாய் தேர்வு செய்கிறீர்கள்? உங்களது வாரிசு அசலான சாதியாய் - கருப்பாய் இருப்பதற்குப் பதிலாக கலப்பாய் இருப்பதையே விரும்புகிறீர்களே! அது ஏன்?

நீங்களே உங்களது சாதித்தூய்மையை காக்க முயலாத போது, காதலால் மட்டும் சாதித் தூய்மை கெட்டுப் போவதாக கூச்சலிடுகிறீர்களே! இது உங்களுக்கே நியாமாகப் படுகிறதா?

காதல் இல்லாத உலகம் சாத்தியமா? அடுத்த பதிவில் பார்ப்போம்.

5 comments:

  1. சாதித்தூய்மை பற்றி பேசும் வன்னியன், தேவன், கள்ளன், நாடான் உள்ளிட்ட இன்ன பிற தமிழ்ச்சாதி இளைஞர்களே! கருப்பாய் உள்ள தமிழ்ப் பெண்களை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு நீங்கள் மட்டும் ஏன் சிவப்பாய் இருக்கும் வெள்ளைப் பெண்களை மட்டும் உங்களது வாழ்க்கைத் துணையாய் தேர்வு செய்கிறீர்கள்?---- கலப்பு இல்லா சாதிமான்கள் இந்த கேள்விக்கு பதில் சொல்வார்களா...???

    ReplyDelete
  2. இங்கிருந்து செவ்வாய்க்கு செல்பவர்கள். செவ்வாயிலும் சாதியை
    தொடங்கி வைக்காமல் இருந்தால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. சமூகத்திலிருந்தே சாதி அகற்றப்பட வேண்டும் என்கிற அரசியலைக் கைக்கொண்டவர்கள் மட்டுமே சாதியைத் தொடர மாட்டார்கள்.

      நன்றி!

      Delete