Monday, November 9, 2015

பிகார்: ‘பிலிக்கா பொலோனிக்கா’வை என்ன செய்ய?

“இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியைத் தழுவினாலும், கட்சிகள் வாரியாக, பா.ஜ.க அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சி 24.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது”

இப்படி தினமணி எழுதுகிறது. 160 தொகுதிகளில் போட்டியிட்டு அத்தொகுதிகளில் பெற்ற மொத்த வாக்குகளை சதவீத அடிப்படையில் கணக்கிடுவதே ஒரு மோசடி. போட்டியிட்ட மொத்த தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகளை ஒரு தொகுதிக்கு என கணக்கிட்டு சதவீதத்தை சொல்வதே சரியான சதவீத கணக்கு.

அதன்படி பார்த்தால் பா.ஜ.க பெற்றுள்ள வாக்கு சதவீதம் காங்கிரசைவிடவும் குறைவு என்பதுதான் உண்மை.

கட்சி
போட்டியிட்ட தொகுதிகள்
மொத்த வாக்கு சதவீதம்
ஒரு தொகுதிக்கான வாக்கு சதவீதம்
ராஷ்டீரிய ஜனதா தளம்
101
18.4
0.18
ஐக்கிய ஜனதா தளம்
101
16.8
0.16
காங்கிரஸ்
41
6.7
0.16
பா.ஜ.க
160
24.4
0.15
.
நிதிஷ்-லாலு தலைமையிலான மெகா கூட்டணியின் வெற்றியைக் கொண்டாடுவதைவிட பா.ஜ.க வின் தோல்வியைத்தான் நாடே கொண்டாடுகிறது.

தீபாவளி கொண்டாடுவதற்காவது புதுத்துணி-பலகாரம்-பட்டாசு வேண்டும்; அதற்கு பணமும் வேண்டும். ஆனால் பா.ஜ.க வின் தோல்வியைக் கொண்டாடுவதற்கு “பிகாரில் பா.ஜ.க படுதோல்வி!” என்கிற செய்தி ஒன்று போதுமே.

இந்தக் கொண்டாட்டம் பா.ஜ.க ஆதரவாளர்களின் அடிவயிற்றைக் கலக்கியுள்ளது. அதனால்தான் “முதல்வர் நிதீஷ்குமாருக்கு எந்த அளவுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும், நிதியுதவியும் கிடைக்கும், வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட முடியும், நல்ல நிர்வாகத்தைத் தந்துவிட முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறி”  ‘மவனே நீ எப்படி ஆட்சி செய்து விடுவாய் பார்க்கிறோம்!’ என சவால் விடுத்து சங்பரிவாரங்களின் குரலை பிரதிபலிக்கிறது தினமணி தலையங்கம். (09.11.2015)

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். மீசையில் ஒட்டியுள்ள மண்ணை வேண்டுமானால் தட்டி விடலாம். ஆனால் சிக்காகிப் போன ‘பிலிக்கா பொலோனிக்கா’வை என்ன செய்ய?

 (plica polonica-ஜடா முடி)

தொடர்புடைய பதிவுகள்:

No comments:

Post a Comment